தமிழ்நாட்டில் துணைப்பயிர் வளர்ப்பு பற்றி யாரும் பேசியதாகவோ அது பற்றிய புத்தகமோ இருப்பதாக என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் இல்லை...
நம்மாழ்வார் மற்றும் இயற்கை விவசாய நண்பர்கள் கூட ஊடுபயிர் பற்றி பேசுகிறார்களே ஒழிய துணைப்பயிர் பற்றி பேசியதாக தெரியவில்லை.....
இப்போது துணைப்பயிருக்கும் ஊடுபயிருக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்
துணைப்பயிர்
துணைப்பயிர் என்பது முதன்மைப்பயிரின் வளர்ச்சியில் பங்கு வகிப்பதோடு மட்டுமில்லாமல் அதற்கு வரும் பூச்சிகள்,நோய்கள் இவற்றில் இருந்தும் பாதுகாக்கும் அதே வேளையில் முதன்மைப்பயிரும் துணைப்பயிரை அதேபோல் பாதுகாக்கும்... இரண்டும் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பதோடு செழிப்பான விளைச்சலையும் தரும்..
ஊடுபயிர்
முதன்மைப்பயிருக்கு இடையே பயிரிடப்படும் பயிர்கள் அனைத்தும் ஊடுபயிரே..
அந்தப்பயிர்கள் முதன்மைப்பயிரின் வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் தராமல் கூட இருக்கலாம்..
அல்லது அதன் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் நேரெதிர்ப்பயிராகவும் இருக்கலாம்..இதுவே பூச்சிகளையும் நோய்களையும் கூட்டி வரும் பயிராகவும் இருக்கலாம்..
இடம் சும்மா கிடக்கின்றதே என்பதற்காக வளர்க்கப்பட்ட பயிராகவும் இருக்கலாம்..
முதன்மைப்பயிரின் தன்மைக்கு ஒத்த தன்மை இல்லாது வெறுமனே இடையே வளர்க்கப்படும் பயிராகவும் இருக்கலாம்..
ஊடுபயிராக துணைப்பயிரை பயிரிட்டால் மட்டுமே அது இயற்கை விவசாயம்
(intercropping with companion plant = ORGANIC FARMING)
இயற்கை விவசாயம் என்ற ஆர்வமுடன் ஈடுபட்ட பல விவசாயிகள் கூட நட்டமடைந்து மீண்டும் இரசாயன உரம் பயன்படுத்தி வருகின்றனர்.
சிலர் "இயற்கை விவசாயம் செய்கின்றேன், தேவைப்படும்போது இரசாயன மருந்துகளையும் பயன்படுத்துகிறேன்" என கூறுகிறார்கள்.இது துணைப்பயிர் பற்றிய விழிப்புணர்வின்மையையே காட்டுகிறது.
துணைப்பயிர் பயிரிடுதலே ஹோமியோபதி தான்...
துணைப்பயிர் பயிரிடாமல் இயற்கை விவசாயத்தில் இலாபம் ஈட்ட முடியாது.
ஹோமியோபதி முறைப்படி விவசாயம் செய்தல் மட்டுமே இயற்கை விவசாயம்.
ஹோமியோபதி அறிந்திருந்தால் மட்டுமே இயற்கை விவசாயத்தை செவ்வனே செய்யமுடியும்.
அக்ரோ ஹோமியோபதி முறைப்படி விவசாயம் செய்யும்போது விளைச்சலை அதிகப்படுத்தும் நுண்ணுயிர் ஊட்டங்கள், பஞ்சகவ்யம் மற்றும் பூச்சிவிரட்டிகள் இவை தேவைப்படாது
துணைப்பயிர் பயிரிடல் வரப்போரங்களில் பூச்செடிகள் வளர்த்தல், பயிர் சுழற்சி முறையில் பயிரிடல், பட்டம் பார்த்து விதை விதைத்தல் மற்றும் நீர் மேலாண்மை இவற்றுடன் நோய்த்தாக்குதலுக்கு ஹோமியோ மருந்துகள் இந்த வகையில் செய்யும் விவசாயம் தான் இயற்கை விவசாயம்.
வெளிநாட்டு ஆய்வாளர்கள் துணைப்பயிர் பற்றி பிளந்துகட்டுகின்றனர்..என்றாலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் விவசாய நிலங்களில் பயன்படுத்தவில்லை..வீட்டுத்தோட்டங்களிலும் சிறு நிலங்களில் மட்டுமே இதனை பயன்படுத்துகின்றனர்... பெரிய அளவில் பயன்படுத்தாதற்கு காரணம் ஹோமியோபதி அறியாததால் தான்..
வைகுந்தநாத் தாஸ் கவிராஜ் மட்டுமே ஹோமியோபதியின் துணையுடன் துணைப்பயிரை ஊடுபயிராக பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் விவசாயம் செய்யமுடியும் என்று நிரூபித்தவர்.
கவிராஜின் வழியில் சென்றால் விவசாயம் இலாபகரமான இயற்கை வழி விவசாயமாக இருக்கும்..
உதாரணத்திற்கு
பழ மரங்களுக்கான துணைப்பயிர்கள்:
துணைப்பயிர்களின் பயன்கள்:
*பூச்சிகளை தடுக்கிறது.
*மகரந்தச்சேர்க்கைக்கான வண்டுக்களை கவர்ந்தீர்க்கிறது.
*மரம் செழிப்பாக வளர மற்றும் பழங்கள் சுவையாக வருவதற்கான ஊட்டத்தை தருகிறது.
*துணைப்பயிர்கள் நிலத்தை ஈரமாக வைத்திருக்க உதவுகின்றன..இதனால் வறட்சியை தாங்கி பழமரங்கள் வளர உதவுகின்றன.
*துணைப்பயிர்கள் இருப்பது தேவையற்ற களைகள் வளர்வதை தடுக்கின்றன.
மேலும் இவை மடிந்து மண்ணுக்கு உரமாகின்றன.
பழமரங்களுக்கான துணைப்பயிர்கள்:
1.Comfrey( Symphytum). சிம்பைடம்
இது இயற்கை விவசாயத்தில் முக்கியமான துணைப்பயிர். மற்றும்.இது அடிபடுதல் மற்றும் எலும்பு முறிதல் போன்றவற்றுக்கு முக்கியமான ஹோமியோபதி மருந்து..
2.Nasturtium
உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை
செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை.
3.Chamomile
செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை. இதன் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் டீ மிகவும் ருசியுள்ளது..
4.Coriander
கொத்தமல்லி
5.Dill
சதகுப்பை
6.Fennel பெருஞ்சீரகம்
7.Basil துளசி
8.Lemongrass புல்
9.Mint புதினா
10.Artemisia wormwood (மக்கிப்பூ)
11.Yarrow காரப்பூடு
12.Daffodil,
13.tansy, ஆயிரந்தழைப்பூண்டு
14.marigold சாமந்தி
15.hyssop
16.garlic பூண்டு
17.spinach பசலைக்கீரை
18.mustard கடுகு
19.chives வெங்காய இனப்பூண்டு
20.Dogwood இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
21.sweet cicely மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.
இந்த துணைப்பயிர்கள் பெரும்பாலும் ஹோமியோபதியில் முக்கிய மருந்துகளாக இருக்கின்றன..இவற்றில் பல மூலிகைச்செடிகள், மருந்தாக மட்டுமில்லாமல் உணவுக்கும் பயன்படும்
பயிர்கள் நோயுற்றபிறகு இவற்றை மருந்தாக தருவதற்கு பதிலாக துணைப்பயிராக வளர்ப்பது பலவகை நன்மைகளை தருகிறது..
விளைச்சலுக்கு விளைச்சல்...அதுமட்டுமின்றி துணைப்பயிர்கள் பெரும்பாலும் கீரைகளாக இருப்பதால் அவற்றை தினசரி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்.
விவசாயிகள் இந்த துணைப்பயிர்கள் அல்லது இதையொத்த துணைத்தாவரங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடிதான் நீங்கள் உங்கள் தோட்டத்தில் வளர்க்கவேண்டியதாக இருக்கும்..