வெள்ளி, 21 ஜூலை, 2017

‘வாழை வட்டம்’

வேளாண் ஹோமியோபதி
துணைப்பயிர் வேளாண்மை 2



‘வாழை வட்டம்’

வாழையை பயிரிடுவதில் பழமையான இந்த முறை வட்ட வடிவில் வாழையை பயிரிடுவதாகும். செலவில்லாத நிரந்தர வேளாண் முறையான ‘வாழை வட்டம்’ வீட்டுத்தோட்டங்களுக்கு மிகவும் ஏற்ற முறையாகும். அதிக செலவு பிடிக்காத ஐந்தடுக்கு விவசாய முறையாகும் இது.
பழங்குடி மக்களால் வாழையடி வாழையாக பயிரிடப்படும் ‘வாழை வட்டம்’ ஏன் இன்னும் பெரும்பான்மையான வாழை விவசாயிகளை சென்றடையவில்லை என்பது புதிராக உள்ளது.
வட்ட வடிவ விவசாய முறை வாழைக்கு மட்டுமல்ல தென்னை, பப்பாளி மற்றும் மூங்கில் மரங்களுக்கும் ஏற்ற முறையாகும்.

வாழை வட்டம் அமைப்பது எப்படி?

வாழை பதிக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்து அதில் எத்தனை வாழை வட்டம் அமைக்க வேண்டுமோ அத்தனை வட்டங்களை சரியான இடைவெளிவிட்டு பிரிக்கவேண்டும். சரியான அளவில் பிரித்தபிறகு வட்டத்தின் மையப்பகுதியில் 5அடி விட்டம் கொண்ட வட்ட அளவில் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்ட வேண்டும். தோண்டிய மண்ணை கொண்டு குழியை சுற்றிலும் 2 அடி அகலம் கொண்ட மேடாக குவிக்க வேண்டும்.
வீட்டுத்தோட்டமாக இருந்தால் நீர் பாய்க்க ஒரு வாய்க்கால் மட்டும் வெட்டி குழியுடன் இணைத்துக்கொள்ளலாம். வாழைத்தோட்டமாக இருந்தால் நீர் பாய ஒரு வழியையும் நீர் வெளியேற ஒரு வழியையும் அமைத்துக்கொள்ளலாம். இப்போது வாழை வட்டத்திற்கான உரக்குழி  தயார்.. அடுத்து என்ன செய்வது?

உரக்குழி 

பொதுவாகவே வாழைக்கு அதிகம் ஊட்டம் தேவை,ஆகையால் அதற்கான ஊட்டத்தை தயாரிக்க மட்கக்கூடிய அனைத்துக்கழிவுகளையும் தழைக்கூளங்களையும் உரக்குழியில் குவித்து வைக்க வேண்டும். பின்னர் நீர்பாய்ச்சி வந்தால் உரக்குழி தயாராகிவிடும்.

வாழை நடல்

குழியை சுற்றியுள்ள மேட்டின் நடுப்பகுதியில் சமமான இடைவெளியில் தேர்ந்தெடுத்த 5 முதல் 7 வாழைகளை ஆழமாக புதைக்க வேண்டும். வாழைக்கு அதிக நீர் தேவையாயினும் தேங்கியிருக்கக்கூடாது.வாழையின் வேர்கள் நீரைத்தேடி சென்று உறிஞ்சிக்கொள்ளும் திறனுடையவை. நடுவில் உள்ள உரக்குழியில் குப்பைக்கூளங்களை வேகமாக மட்க ஈரப்பதமும் நிழலும் தேவை அது இந்த அமைப்பில் கிடைத்துவிடும். உரம் வேகமாக தயாராக வாழையின் வேர்களும் உதவி புரியும்.
புதைத்த வாழைக்கன்றுகளுக்கிடையில் மேட்டின் ஓரக்காலில் இரண்டிரண்டு மரவள்ளிக்கிழங்கு(குச்சிக்கிழங்கு) குச்சிகளை நடவேண்டும். மேட்டின் ஓரக்கால்களில் நடப்படும் குச்சிக்கிழங்கு செடி வறட்சியை தாங்குவது மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து ‘வாழை வட்ட்த்திற்கு ஒரு பாதுகாப்பை தரும். வாழை தயாராகும் முன்னரே கிழங்கு அறுவடைக்கு வந்துவிடும்.
மரவள்ளிக்குச்சிக்கு முன்புறம் அதாவது குழியை நோக்கி வெட்டிவேர்ப்புல் பயிரிட வேண்டும். வெட்டிவேர்ப்புல்லானது ஆழமான வேரமைப்பால் மண்ணரிப்பை தடுக்கும் ,இதன் மூக்கைத் துளைக்கும் வாசனையானது பூச்சிகளையும் கொசுக்களையும் வரவிடாமல் தடுக்கும் ஆற்றலுடையது. ஒன்றரை மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புல் தாழ்ந்த காற்றினால் வரும் சேதத்தையும் தடுக்கிறது. எளிதில் வளரும் இந்தப்புல் இந்த அமைப்பிற்கான மட்கக்கூடிய வைக்கோலையும் தருகிறது.
அடுத்து சக்கரைவள்ளிக்கிழங்கு கொடியை வாழையை சுற்றி சமமான இடைவெளியில் ஊன்றிவிடவேண்டும். இந்த சர்க்கரைவள்ளிக்கொடிகள் இந்த வாழை வட்ட அமைப்பின் மூடாக்காக செயல்பட்டு தேவையற்ற களைகள் வளருவதை தடுக்கின்றன. இதனூடாக அல்லது இது அறுவடை செய்த பிறகு வேர்க்கடலை பயிரிடுவதும் நைட்ரஜன் சத்தை மண்ணில் நிலைபெறச்செய்ய உதவும். களையை கட்டுப்படுத்தவும் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் இவை இந்த அமைப்புக்கு உதவுகின்றன.

கடைசியாக உரக்குழியின் உள்வட்ட ஓரக்கால்களில் சேம்புக்கிழங்கு அடர்த்தியாக விதைக்க வேண்டும். உள்வட்டத்தில் ஈரமான சூழலில் வாழும் தாவரமான சேப்பங்கிழங்கு தழைக்கூளங்களை எளிதில் மட்கச்செய்யும் வல்லமை படைத்தவை.
உரக்குழியில் உபயோகப்படாத பெரிய மரக்கட்டைகள்,மரக்கிளைகளை அடிப்பகுதியில் இடுவது மட்கச்செய்யும் பூஞ்சைகளுக்கு ஏதுவாக இருக்கும். உரக்குழி எப்போதும் குப்பைகளால் குவிந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.குழிய விடக்கூடாது.இந்த ‘வாழை வட்டத்தில்’ வாடிய வாழை இலைகளையும், தார் ஈன்ற பிறகு வெட்டப்பட்ட மரங்களையும் மற்றும் கழிக்கப்பட்ட எடைக்கன்றுகளையும் வெளியே வீசாமல் உரக்குழியிலே இடுவது இந்த அமைப்புக்கு மேலும் உரம் சேர்ப்பதாகும். நாளடைவில் இந்த உரக்குழி எந்த குப்பையையும் எளிதில் மட்கச்செய்து உரமாக மாற்றி விடும் வல்லமை பெற்றுவிடும்.

Image may contain: plant and food
banana circle


இந்த ‘வாழை வட்ட கூட்டுக்குடும்ப அமைப்பு’ வாழையடி வாழையாக பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஆற்றலுடையது.
துணைப்பயிர் கொண்டு செய்யும் விவசாயமே முழுமையான பாதுகாப்பான செலவில்லாத விவசாயமாகும். இப்படி செய்யப்படும் விவசாயத்திலும் ஏதேனும் பாதிப்பு வந்தால் அப்போது ஹோமியோபதி பயன்படும்.
படம் மற்றும் கருத்து உதவி:
treeyo permaculture edu
permaculture.com
https://www.facebook.com/groups/1464331126988383/permalink/1467850809969748/
#அக்ரோஹோமியோபதி
🍀

பாரம்பரிய மூன்றடுக்கு பயிர் முறை

வேளாண் ஹோமியோபதி

துணைப்பயிர் வளர்ப்பு விவசாயம்



பாரம்பரிய மூன்றடுக்கு பயிர் முறை

மூன்று பயிர்களை பயிரிடும் முறையானது மூன்றடுக்குகளாக தோட்டத்தை நிரப்புவதாகும்.
நேராக நிமிர்ந்து வளரக்கூடிய முதல் அடுக்குப்பயிரானது மக்காச்சோளமாக வழிவழியாக இருந்திருக்கிறது, பின்னர் மக்காச்சோளத்திற்கு பதிலாக சூரியகாந்தியும் தானிய சோளமும் பின்னர் வெற்றிகரமான மாற்றுப்பயிராக உருவாகியிருக்கிறது.
இரண்டாவது அடுக்குப்பயிராக மொச்சைப்பயிறு அல்லது கொத்தவரை போன்ற படரும் ஏறுகொடி தாவரங்களை பயிரிட வேண்டும்.மொச்சைப்பயிறின் வளர்ச்சியை சோளத்தின் நிழலானது முதலில் தாமதப்படுத்தும்,பின்னர் சோளம் கதிர் அறுத்தவுடன் காயத்தொடங்கும் தருவாயில் மொச்சை புதிய வளர்ச்சியுடன் வெடித்துத் தயாராகிவிடும்.
பூசணிப்பயிர்களுக்கு (பூசணி,பரங்கி,தர்பூசணி) அதிகப்படியான வெளிச்சம் தேவை,நிழல் அவைகளுக்கு நன்மை செய்யாது, நிழல் பூசணியின் வளர்ச்சியை தாமதப்படுத்தும். பூசணியை சோளம் மற்றும் மொச்சைக்கு வெளியே பயிரிடவேண்டும் ஏனெனில் நிலத்தை மூடுமளவுக்கு அடர்த்தியாக பரவும் அதற்கு அந்த அளவுக்கு பரந்த நிலம் தேவை.

எப்படி பயிரிடுவது?

பயிரிட தயார் செய்யப்பட்ட விவசாய நிலத்தில் தகுந்த பருவத்தில் பட்டம் பார்த்து பயிரிடவேண்டும்.
எனக்கு தெரிந்து மேற்கு தமிழகத்தில் மானாவாரியாக தானிய சோளமும் கூடவே நரிப்பயிர், பச்சைப்பயிறு அல்லது பாசிப்பயிறு ஊடு பயிராக பயிரிடுவார்கள். இதுவும் துணைப்பயிர் விவசாயமே.இருந்தாலும் பூசணியில்லாமல் இது பாதுகாப்பாக இருக்காது.ஏனெனில் பூச்சிகள் மற்றும் ஆடுமாடுகளிடமிருந்து இதற்கு பாதுகாப்பு கிடைக்காது.ஆதலால் பூசணியில்லாமல் இது நிறைவான முறை கிடையாது. மூன்றடுக்கு பயிர் முறையில் எப்படி பயிரிடுவது என பார்ப்போம்.

செயல்முறை-1

நிலத்தை தயார் செய்தவுடன் விதைக்கும் பரப்பை 12’க்கு 12’ சதுர அடியாக பிரித்து அதன் மையப்பகுதியில் வட்டம் அமைத்து சோள விதைகளை வட்ட வடிவில் 8 விதைகளை சமமான இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்தபிறகு நீர் பாய்ச்சி வரவேண்டும்.

செயல்முறை-2

இரண்டு வாரங்களுக்கு பிறகு சோளம் முளைத்து 5லிருந்து 10 அங்குலம் வளர்ந்திருக்கும் நேரத்தில் ஒவ்வொரு சோளச்செடியை சுற்றிலும் 4 மொச்சைப்பயிறு விதைகளை சமமான இடைவெளியில் ஒரு அங்குல ஆழத்திற்கு ஊணவேண்டும்.அதன் பிறகு நீர் பாய்ச்சி வரவேண்டும்.மொச்சை விதை முளைக்கும் வரை நிலம் ஈரப்பதமாக இருக்கவேண்டியது அவசியம்.

செயல்முறை-3

மொச்சை விதை ஊன்றிய ஒரு வாரத்திற்கு பிறகு மொச்சை முளைத்து சோளத்தின் மீது ஏறி படரும் தருவாயில் 6லிருந்து 8 பூசணி விதைகளை வட்டத்திற்கு வெளியில் சமமான இடைவெளியில் விதைக்க வேண்டும்.
பூசணி வளர்ந்து படரும்போது கொடிகளின் திசை வட்டத்தை நோக்கி அதன் மையப்பகுதி நோக்கி படரும் படி திருப்பி விடவேண்டும்.

மூன்றடுக்கு துணைப்பயிர் வளர்ப்பு முறை எப்படி வேலை செய்கிறது?

இந்த பழமையான துணைப்பயிர் வளர்ப்பு முறையில் மூன்று பயிர்களும் தன்னையையும் வளர்த்து தனது துணைப்பயிரையையும் வளர்த்து ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றன.
மூத்த சகோதரியான சோளம் மொச்சைக்கு பற்றுக்கோலாக ஆதரவை வழங்குகிறது. மொச்சைப்பயிறானது சோளத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை வழங்குகிறது.மொச்சையானது காற்றிலிருந்து நைட்ரஜனை மண்ணில் சேமித்து வைத்து தனக்கும் தன் துணைக்கும் அளிக்கிறது.
பூசணி பாதுகாப்பை வழங்குகிறது. அதன் கொடிகள் மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. மேலும் அது உயிருள்ள தழைக்கூளமாக மூடக்காக மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் அதன் சொரசொரப்பான மெல்லிய முள் போன்ற அமைப்பை கொண்ட அதன் கொடிகள் சோளத்தையையும் மொச்சையையும் தாக்கும் பூச்சிகளை அண்டவிடாமல் தடுக்கிறது.ஒரு கூட்டுக்குடும்ப அமைப்பு போல இருந்துகொண்டு இந்த மூன்று பயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து ஒரு வலிமையான பாதுகாப்பு தடைவேலியை உருவாக்கி பூச்சிகளையையும் களைகளையும் வீழ்த்துகிறது.
No automatic alt text available.

மூன்று தோழிகள்

சோளம்(மக்காச்சோளம் அல்லது சூரியகாந்தி அல்லது தானியச்சோளம்)
+பீன்ஸ்(மொச்சைப்பயிறு அல்லது பிற ஏறுகொடிப்பயிறு வகைகள்)
+பூசணி(பூசணி அல்லது பரங்கி அல்லது தர்ப்பூசணி)
இந்த மூன்றடுக்கு பயிர் முறை எளிமையான பழமையான விவசாய முறையாகும். இதனுடன் சாமந்திப்பூச்செடியையும் ஒரக்கால்களில் பயிர் செய்தால் இன்னும் பாதுகாப்பு.
துணைப்பயிர் கொண்டு செய்யும் விவசாயமே முழுமையான பாதுகாப்பான செலவில்லாத இயற்கை விவசாயமாகும். இப்படி செய்யப்படும் விவசாயத்திலும் ஏதேனும் பாதிப்பு வந்தால் அப்போது ஹோமியோபதி பயன்படும்.

AGRO HOMOEOPATHY
🍀

மனிதத்துவம் விடை தருமா??

இன்றைய சமூகச்சீர்கேடுகள், ஆன்மீக மோசடிகள், மக்களின் குணக்கேடுகள் மற்றும் அரசியல்வியாதிகள் இவற்றிலிருந்து மக்கள் எவ்வாறு விடுதலை அடைவது, மதங்கள் ஏன் அன்பை போதித்தன?
ஏன் மதநிறுவனங்கள் அன்பை கைவிட்டன?
மிருகங்கள் அனைத்தும் தன் குணத்தில் ஒன்றுபோல் இருக்க மனிதன் மட்டும் ஏன் ஒன்று போல் இல்லை..
மனிதனுக்கு என தனித்துவமான குணம் இருக்கிறதா?
இருந்தால் அது என்ன?
அந்த குணத்தை மனிதன் ஏன் மறந்தான்?
கடவுள் பற்றி,
அறிவியல் ஒன்று சொல்கிறது
மதம் ஒன்று சொல்கிறது
எனது பகுத்தறிவுக்கு இவை சரியாக தோன்றவில்லை
எனது கடவுள் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலிடமோ, மதத்திடமோ சரியான பதில் இல்லை..
எனக்கான மிகச்சரியான பதில் யாரிடம் உள்ளது?

கடும்தவம் புரியும் தவசிகள் மட்டுமே ஞானமடைய முடியும் என சொல்கிறார்கள். ஆனால் நானோ மிகச்சாதாரண மனிதன் என்னால் ஞானமடைய முடியுமா? அது இருக்கட்டும், முதலில் ஞானம் என்றான் என்ன? அதை ஏன் மனிதன் அடையவேண்டும்,அது அடையக்கூடிய ஒன்றா?
சமூகத்தை ஒதுக்கிவிட்டு தியானம் செய்வது சரியா?
மனிதனுக்குள் ஏன் இந்த பிரிவினை...
சாதி,மத,இன வேறுபாடுகள் ஏன்?...
ஏன் மதத்தின் பேரில் இத்தனை கொலைகள்,கொள்ளைகள்??
அறிவியலின் பேரில் ஏன் இத்தனை சுரண்டல்கள்
அறிவியல் ஆக்கத்திற்கு பயன்படுவதை விட அழிவிற்குதான் பயன்படுகிறதே ஏன்??
நான் மதங்களை பின்பற்றுவதா?
அறிவியலை பின்பற்றுவதா??
ஒரே குழப்பமாக உள்ளதே...
எனது கேள்விகளுக்கு   பதில் கிடைக்காமல் அலைந்து திரிந்தேன்..
அப்போது தான் கிடைத்தது ஒரு புத்தகம் 

மனிதத்துவம்


*********************************

********************************
இந்த நூல் என்னுடைய கேள்விகளுக்கு விடையை மட்டுமல்ல
எனது உள்ளத்தில் ஒரு பூகம்பத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்திவிட்டது.
உங்களுக்குள்ளும் அதேபோல ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த புத்தகத்தால் முடியும்..
இந்த நூல் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை தர முயற்சிக்கிறது.
தன்னை பரிசோதிக்க முயற்சிப்பவர்கள் மட்டும் படிக்கலாம்..
ஹோமியோபதி ஆசான் PL Vellaichamy அவர்களின்
கடும் உழைப்பில் விளைந்த நூல் இது.
----
------
---------------

 படியுங்கள்
விடை மட்டுமல்ல
வாழ்வின் அர்த்தமும் உங்களுக்கு கிடைக்கும்

துணைப்பயிர் வளர்ப்பு




தமிழ்நாட்டில் துணைப்பயிர் வளர்ப்பு பற்றி யாரும் பேசியதாகவோ அது பற்றிய புத்தகமோ இருப்பதாக என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் இல்லை...
நம்மாழ்வார் மற்றும் இயற்கை விவசாய நண்பர்கள் கூட ஊடுபயிர் பற்றி பேசுகிறார்களே ஒழிய துணைப்பயிர் பற்றி பேசியதாக தெரியவில்லை.....
இப்போது துணைப்பயிருக்கும் ஊடுபயிருக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்
துணைப்பயிர்
துணைப்பயிர் என்பது முதன்மைப்பயிரின் வளர்ச்சியில் பங்கு வகிப்பதோடு மட்டுமில்லாமல் அதற்கு வரும் பூச்சிகள்,நோய்கள் இவற்றில் இருந்தும் பாதுகாக்கும் அதே வேளையில் முதன்மைப்பயிரும் துணைப்பயிரை அதேபோல் பாதுகாக்கும்... இரண்டும் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பதோடு செழிப்பான விளைச்சலையும் தரும்..
ஊடுபயிர்
முதன்மைப்பயிருக்கு இடையே பயிரிடப்படும் பயிர்கள் அனைத்தும் ஊடுபயிரே..
அந்தப்பயிர்கள் முதன்மைப்பயிரின் வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் தராமல் கூட இருக்கலாம்..
அல்லது அதன் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் நேரெதிர்ப்பயிராகவும் இருக்கலாம்..இதுவே பூச்சிகளையும் நோய்களையும் கூட்டி வரும் பயிராகவும் இருக்கலாம்..
இடம் சும்மா கிடக்கின்றதே என்பதற்காக வளர்க்கப்பட்ட பயிராகவும் இருக்கலாம்..
முதன்மைப்பயிரின் தன்மைக்கு ஒத்த தன்மை இல்லாது வெறுமனே இடையே வளர்க்கப்படும் பயிராகவும் இருக்கலாம்..
ஊடுபயிராக துணைப்பயிரை பயிரிட்டால் மட்டுமே அது இயற்கை விவசாயம் 
(intercropping with companion plant = ORGANIC FARMING)
இயற்கை விவசாயம் என்ற ஆர்வமுடன் ஈடுபட்ட பல விவசாயிகள் கூட நட்டமடைந்து மீண்டும் இரசாயன உரம் பயன்படுத்தி வருகின்றனர்.
சிலர் "இயற்கை விவசாயம் செய்கின்றேன், தேவைப்படும்போது இரசாயன மருந்துகளையும் பயன்படுத்துகிறேன்" என கூறுகிறார்கள்.இது துணைப்பயிர் பற்றிய விழிப்புணர்வின்மையையே காட்டுகிறது.
துணைப்பயிர் பயிரிடுதலே ஹோமியோபதி தான்... 
துணைப்பயிர் பயிரிடாமல் இயற்கை விவசாயத்தில் இலாபம் ஈட்ட முடியாது.
ஹோமியோபதி முறைப்படி விவசாயம் செய்தல் மட்டுமே இயற்கை விவசாயம்.
ஹோமியோபதி அறிந்திருந்தால் மட்டுமே இயற்கை விவசாயத்தை செவ்வனே செய்யமுடியும்.
அக்ரோ ஹோமியோபதி முறைப்படி விவசாயம் செய்யும்போது விளைச்சலை அதிகப்படுத்தும் நுண்ணுயிர் ஊட்டங்கள், பஞ்சகவ்யம் மற்றும் பூச்சிவிரட்டிகள் இவை தேவைப்படாது
துணைப்பயிர் பயிரிடல் வரப்போரங்களில் பூச்செடிகள் வளர்த்தல், பயிர் சுழற்சி முறையில் பயிரிடல், பட்டம் பார்த்து விதை விதைத்தல் மற்றும் நீர் மேலாண்மை இவற்றுடன் நோய்த்தாக்குதலுக்கு ஹோமியோ மருந்துகள் இந்த வகையில் செய்யும் விவசாயம் தான் இயற்கை விவசாயம்.
வெளிநாட்டு ஆய்வாளர்கள் துணைப்பயிர் பற்றி பிளந்துகட்டுகின்றனர்..என்றாலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் விவசாய நிலங்களில் பயன்படுத்தவில்லை..வீட்டுத்தோட்டங்களிலும் சிறு நிலங்களில் மட்டுமே இதனை பயன்படுத்துகின்றனர்... பெரிய அளவில் பயன்படுத்தாதற்கு காரணம் ஹோமியோபதி அறியாததால் தான்..
வைகுந்தநாத் தாஸ் கவிராஜ் மட்டுமே ஹோமியோபதியின் துணையுடன் துணைப்பயிரை ஊடுபயிராக பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் விவசாயம் செய்யமுடியும் என்று நிரூபித்தவர்.
கவிராஜின் வழியில் சென்றால் விவசாயம் இலாபகரமான இயற்கை வழி விவசாயமாக இருக்கும்..
பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழமரங்கள் இடையே 
ஊடுபயிராக என்னென்ன துணைப்பயிர்களை பயிரிடாம் என விக்கிபீடியா விளக்கமாக தகவல் சொல்கிறது.👇https://en.wikipedia.org/wiki/List_of_companion_plants

உதாரணத்திற்கு
பழ மரங்களுக்கான துணைப்பயிர்கள்:

துணைப்பயிர்களின் பயன்கள்:
*பூச்சிகளை தடுக்கிறது.
*மகரந்தச்சேர்க்கைக்கான வண்டுக்களை கவர்ந்தீர்க்கிறது.
*மரம் செழிப்பாக வளர மற்றும் பழங்கள் சுவையாக வருவதற்கான ஊட்டத்தை தருகிறது.
*துணைப்பயிர்கள் நிலத்தை ஈரமாக வைத்திருக்க உதவுகின்றன..இதனால் வறட்சியை தாங்கி பழமரங்கள் வளர உதவுகின்றன.
*துணைப்பயிர்கள் இருப்பது தேவையற்ற களைகள் வளர்வதை தடுக்கின்றன.
மேலும் இவை மடிந்து மண்ணுக்கு உரமாகின்றன.
பழமரங்களுக்கான துணைப்பயிர்கள்:
1.Comfrey( Symphytum). சிம்பைடம்
இது இயற்கை விவசாயத்தில் முக்கியமான துணைப்பயிர். மற்றும்.இது அடிபடுதல் மற்றும் எலும்பு முறிதல் போன்றவற்றுக்கு முக்கியமான ஹோமியோபதி மருந்து..
2.Nasturtium 
உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை
செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை.
3.Chamomile 
செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை. இதன் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் டீ மிகவும் ருசியுள்ளது..
4.Coriander 
கொத்தமல்லி
5.Dill 
சதகுப்பை
6.Fennel பெருஞ்சீரகம்
7.Basil துளசி
8.Lemongrass புல்
9.Mint புதினா
10.Artemisia wormwood (மக்கிப்பூ)
11.Yarrow காரப்பூடு
12.Daffodil,
13.tansy, ஆயிரந்தழைப்பூண்டு
14.marigold சாமந்தி
15.hyssop 
16.garlic பூண்டு
17.spinach பசலைக்கீரை
18.mustard கடுகு
19.chives வெங்காய இனப்பூண்டு
20.Dogwood இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
21.sweet cicely மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.
இந்த துணைப்பயிர்கள் பெரும்பாலும் ஹோமியோபதியில் முக்கிய மருந்துகளாக இருக்கின்றன..இவற்றில் பல மூலிகைச்செடிகள், மருந்தாக மட்டுமில்லாமல் உணவுக்கும் பயன்படும்
பயிர்கள் நோயுற்றபிறகு இவற்றை மருந்தாக தருவதற்கு பதிலாக துணைப்பயிராக வளர்ப்பது பலவகை நன்மைகளை தருகிறது..
விளைச்சலுக்கு விளைச்சல்...அதுமட்டுமின்றி துணைப்பயிர்கள் பெரும்பாலும் கீரைகளாக இருப்பதால் அவற்றை தினசரி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்.
விவசாயிகள் இந்த துணைப்பயிர்கள் அல்லது இதையொத்த துணைத்தாவரங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடிதான் நீங்கள் உங்கள் தோட்டத்தில் வளர்க்கவேண்டியதாக இருக்கும்..