புதன், 31 ஆகஸ்ட், 2016

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவர் சங்கத்தில் ஓஷோ ஆற்றிய உரை
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை க்கான பட முடிவு

என் நேசத்திற்குரியவர்களே,
மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்பேறு. கவலை, பதற்றம், நோய், உடல்நலக்குறைவு ஆகியவை மனிதனுக்கு மட்டுமே உள்ள பிரச்னைகள். பூமியில் வேறு எந்த மிருகத்திற்கும் இந்தப் பிரச்னைகள் இல்லை. இந்த நிலைதான் மனிதனுக்கு முன்னேற்றத்தை, பரிணாம வளர்ச்சியைக் கொடுக்கிறது. நோய் வந்தால் மனிதன் அதனுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அந்த நிலையை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த நோய்தான் மனிதனின் ஆற்றல், அமைதியின்மை. அதே சமயம் இதுதான் அவனுடைய அவப்பேறும் கூட. அமைதியில்லாமல், மகிழ்ச்சியில்லாமல் இருப்பதனால் அவன் கஸ்டப்படுகிறான்.
மனிதனைத் தவிர வேறு எந்த மிருகத்திற்கும் பைத்தியம் பிடிப்பதில்லை. மிருகங்களுக்கு தானாகப் பைத்தியம் பிடிப்பதில்லை. அவை மனநோய்க்கு ஆளாவதில்லை. மனிதன்தான் அதைத் துன்புறுத்தி அதன் புத்தியைப் பேதலிக்கச் செய்கிறான். காட்டில் இருக்கும் போது மிருகங்களுக்கு புத்தி கெட்டுப் போவதில்லை. சர்க்கஸ்க்கு வந்தவுடன் தான் அதற்குப் பித்து பிடித்துப் போகிறது. காட்டில் விலங்குகள் அடைக்கப்படுவதில்லை. மிருகக் காட்சி சாலைக்குள் வந்தவுடன்தான் அதற்கு வக்ரம் பிடிக்கிறது. மனிதன் மட்டும்தான் தற்கொலை செய்து கொள்கிறான். எந்த மிருகமும் தற்கொலை செய்து கொள்வதில்லை.
மனிதன் என்கிற நோயைக் குணப்படுத்த, புரிந்து கொள்ள இரண்டு முறைகளில் முயற்சி செய்தார்கள். ஒன்று மருந்து, மற்றொன்று தியானம். இரண்டு சிகிச்சையுமே ஒரே நோய்க்குத்தான். மருந்து மனிதனுக்குள் இருக்கும் ஒவ்வொரு நோயையும் தனித்தனியாகப் பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. ஒவ்வொரு பகுதியாக ஆராய்ந்து பார்க்கிற அணுகுமுறை. தியானம் மனிதனையே நோயாகப் பாhக்கிறது. தியானம் மனிதனின் அடிப்படைக் குணாதிசயத்தையே நோயாகப் பார்க்கிறது. மனிதனுக்கு வந்து போவதுதான் நோய் என்றுதான் மருந்து பார்க்கிறது. மனிதனுக்கு அந்நியமான ஒரு விஷயமாகவே மருந்து நோயை நினைக்கிறது. மெதுவாக இந்த வேறுபாடுகள் கரைந்து விடுகின்றன.

‘நோய்க்கு சிகிச்சை அளிக்காதே, நோயாளிக்கு அளி’

என்று சொல்லத் துவங்கியிருக்கிறது மருத்துவ விஞ்ஞானம்.
இது மிக முக்கியமான கருத்து. நோய் என்பது ஒரு நோயாளியின் வாழ்க்கைமுறை என்பதுதான் இதற்குப் பொருள். ஒவ்வொரு மனிதனும் ஒரு மாதிரியான நோயில் விழுவதில்லை. நோய்களுக்கும் ஒரு தனித்தன்மை, தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு. எனக்கும் காச நோய்; உனக்கும் காசநோய். அதனால் இருவரின் நோயும் ஒன்று என்று அர்த்தமில்லை. நமது காச நோய்க்குக் கூட இரண்டு வடிவங்கள் உண்டு. காரணம் நாம் இருவரும் வௌ;வேறு தனி நபர்கள். என் காச நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை உன் காச நோய்க்கு நிவாரணம் அளிக்காது. நோயாளி என்பவன் உள்ளே வேர்களில்தான் இருக்கிறான். நோயில் அல்ல.
மருந்து மனிதனின் நோயை மேலோட்டமாகவே பார்க்கிறது. தியானம் மனிதனுக்குள்ளே போய் நோயின் வேர்களைப் பிடித்துக் கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால் மருந்து மனிதனின் ஆரோக்கியத்தை வெளியேயிருந்து கொண்டு வருகிறது. தியானம் மனிதனின் உள் இருப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மருந்தில்லாமல் தியான விஞ்ஞானம் முழுமையடையாது. அதேபோல் மருந்து, விஞ்ஞானமும் தியானமில்லாமல் நிறைவுபெறாது. காரணம் உடல், ஆன்மா இரண்டு சேர்ந்ததுதான் மனிதன்.
இரண்டும் சேர்ந்துதான் மனிதன் என்பது ஒரு மொழிப்பிழை.
ஒரு நபரின் உடல், ஆன்மா இரண்டுமே ஒரு மனிதனின் தனித்தனி அடையாளங்களாகவே மனிதன் பல ஆயிரம் வருடங்களாக நினைத்து வந்திருக்கிறான். இந்தச் சிந்தனை இரண்டு ஆபத்தான முடிவுகளை கொடுத்திருக்கிறது. ஒரு முடிவில் சிலர், ஆன்மா மட்டுமே மனிதன் என்று நினைத்து உடலைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். இந்தச் சிலர் தியானத்தில் மட்டுமே சில முன்னேற்றங்களை ஏற்படுத்தி மருந்தை கவனிக்கவில்லை. அதனால் மருந்து விஞ்ஞானம் ஆகவில்லை. அதனால் உடல் புறக்கணிக்கப்பட்டது. இதற்கு மாறாக, சிலர் மனிதன் என்பவன் வெறும் உடல்தான் என்று கருதினார்கள். அவர்கள் ஆன்மாவைப் பற்றிக் கவலைப்படவில்லை. இவர்கள் தங்கள் பங்கிற்கு மருத்துவத் துறையில் பல ஆராய்ச்சிகள், முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார்கள். தியானத்தின் பக்கம் அடியெடுத்து வைக்கவேயில்லை.
இரண்டும் சேர்ந்தவனேதான் மனிதன். அதே சமயம் இப்படி சொல்வது ஒரு மொழிப் பிழை என்று நானே சொல்கிறேன். இரண்டு சேர்ந்தது என்று சொல்லும்போது, ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விஷயங்கள் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இல்லை. உண்மையில் உடல், ஆன்மா இரண்டுமே ஒரு கோலில் இரு முனைகள். சரியான கோணத்தில் பார்த்தால், மனிதன் உடலுடன் கூடிய ஆன்மா என்று சொல்ல முடியாது. காரணம் அது அப்படியில்லை. மனிதன் உள-உடற்கூறு. அல்லது உடல்-உள கூறானவன். மனிதன் மன-உடல் அல்லது உடல்-மனம்.
என்னைப் பொறுத்தவரையில் உணர்வின் ஈர்ப்புக்கு உட்பட்ட ஆன்மாவின் ஒரு பகுதியே உடல்- உணர்வின் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட உடலில் ஒரு பகுதியே ஆன்மா. கண்ணுக்குப் புலப்படாத உடலே ஆன்மா. புலப்படும் ஆன்மாவே உடல். அவை இரண்டு வெவ்வேறான விஷயங்கள் அல்ல. இரண்டு வேறுபட்ட அடையாளங்கள் அல்ல. ஒரே அடையாளத்தில் ஒரு வேறுபட்ட நிலையில் அதிர்வுகள்.
இந்த இரு வேட எண்ணங்கள்தான் மனித இனத்தை மோசமாகப் பாதித்திருக்கிறது. எப்போதுமே அதை இரண்டு என்று நினைத்துக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறோம். முதலில் இதைப் பொருள்- ஆற்றல் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போது அப்படி நினைப்பதில்லை. இப்போது பொருள்- ஆற்றல் இரண்டும் தனித்தனியானவை என்று சொல்ல முடியாது. பொருள் என்றால் ஆற்றல் என்றுதான் சொல்கிறோம். பழைய பதங்களைப் பயன்படுத்துவதில்தான் சிக்கலே வருகிறது என்பதுதான் யதார்த்த உண்மை. ஏதோ ஒன்று இருக்கிறது. உதாரணத்திற்கு அதை ‘அ’ என்றே வைத்துக் கொள்வோம். ஒரு புறம் அதைப் பொருளாகப் பார்த்தால் மறுபுறம் அது ஆற்றலாக இருக்கிறது. அவை இரண்டல்ல. ஒரே படிவத்தின் இரண்டு வடிவங்கள்.
அதேபோல்தான் உடல்- ஆன்மா இரண்டுமே ஒரே படிவத்தில் இரண்டு வடிவங்கள். இரண்டு முனைகளிலிருந்தும் நோய் வரலாம். உடலில் துவங்கி ஆன்மாவில் முடியலாம். உண்மையில் உடலில் செயல்பாடுகளின் அதிர்வுகளை ஆன்மாவில் உணர முடியும். அதனால்தான் சில சமயங்களில் நோய் குணமானபின்னும் ஒரு மனிதன் தனக்கு ஏதோ வியாதி இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறான். உடலிலிருந்து நோய் வெளியேறிவிட்டது. உடலில் நோய் இல்லை என்று மருத்துவரே சொல்லிவிட்டார். ஆனாலும் நோயாளி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவே நினைக்கிறார். அவருக்கு வியாதி இல்லை என்பதை நம்ப மறுக்கிறார். எல்லாவித பரிசோதனைகளும் அவருக்கு எல்லாம் சரியாகவே இருப்பதாக உணர்த்திவிட்டன. ஆனாலும் தான் நன்றாக இல்லை என்றே அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இவரைப் போன்றவர்கள்தான் மருத்துவர்களைப் பாடாய்ப்படுத்துவார்கள். ஆனால் நோய் இல்லை என்பதாலேயே உன் உடல், நலம் என்று அர்த்தமில்லை. உடல் நலத்திற்கென்று உடன்பாடான பண்பு உண்டு. நோய் இல்லை என்பது எதிர்மறையானது. முள் இல்லை என்று நம்மால் சொல்ல முடியும். அதுவே மலர் இருக்கிறது என்று பொருளில்லை. முள் இல்லை என்றால் அதைக் காணவில்லை என்றுதான் பொருள். மலர் இருக்கிறது என்பது முற்றிலும் வேறு விஷயம்.
ஆரோக்கியம் என்கிற பரிமாணத்தில் இன்னும் மருந்து விஞ்ஞானம் இன்னும் எதையுமே சாதிக்கவில்லை. நோய் என்பது என்ன என்பதிலேயே அதன் முழு கவனமும் இருந்து வந்திருக்கிறது. நோயைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டால் மருந்து விஞ்ஞானம் பலவிதமான விளக்கங்களைக் கொடுக்கும். ஆரோக்கியத்தைப் பற்றிக் கேட்டால் உங்களை அது ஏமாற்ற முயற்சி செய்யும். நோயில்லை என்றால் எஞ்சியிருப்பது ஆரோக்கியம் என்று சொல்லும். இது தந்திரம்; விளக்கமன்று. நோயைத் தொடர்புபடுத்தி எப்படி ஆரோக்கியத்திற்கு விளக்கமளிக்க முடியும்? இது முள்ளைக் காட்டி மலரைப் பற்றி சொல்வது மாதிரி. மரணத்தை வைத்து வாழ்க்கையை விளக்குவது மாதிரி. இருட்டைக் காட்டி வெளிச்சத்தைப் புரிய வைப்பது போல. பெண்ணைக் காட்டி ஆணை, அல்லது ஆணைக் காட்டி பெண்ணை வர்ணிப்பது போல.
மருந்து விஞ்ஞானம் இதுவரையில் ஆரோக்கியத்தைப் பற்றிச் சொல்லவேயில்லை. நோய் என்ன என்பதை மட்டுமே அது சொல்வதுதான் அதன் இயல்பு. அதற்குக் காரணம் இருக்கிறது. மருந்து விஞ்ஞானம் வெளியில் இருந்துதான் கிரகித்துக் கொள்கிறது. உடல் ரீதியான வடிவத்தை மட்டுமே அது கவனிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் போது நோய் மட்டுமே புலப்படும். மனிதனின் உள்ளிருப்பு- ஆன்மாவை வைத்தே ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியும்… இந்த வகையில் பார்த்தால் இந்தி வார்த்தை ஸ்வஸ்தயா என்பது மிகவும் அழகான வார்த்தை. ஆங்கிலத்தில் ‘ஹெல்த்’ என்று சொல்லப்படுவது ஸ்வஸ்தயா என்று பொருளாகாது. குணப்படுத்துவது- அதாவது ‘ஹீல்’ என்கிற வார்த்தையை வைத்தே ‘ஹெல்த்’ என்கிற வார்த்தை வந்தது. அது நோயுடன் தொடர்புடையது. ஹெல்த் என்றால் குணப்படுத்தப்பட்டவர்- அதாவது நோயிலிருந்து மீண்டவர் என்று அர்த்தம்.
ஸ்வஸ்தயா என்றால் அப்படிப் பொருளன்று; தன்னை அடைந்தவர், தனக்குள் நிறைந்தவர் என்றுதான் பொருள். தனக்குள் தெளிவாக இருப்பவர் என்றுதான் இதற்குப் பொருள்; ஆரோக்கியம் என்பதன்று. உண்மையில் ஸ்வஸ்தயா என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை உலகத்தில் எந்த மொழியிலும் இல்லை. உலகத்தின் மற்ற மொழிகளில் நோய் அல்லது நோய் இல்லை என்கிற பொருளையே கொடுக்கிறது. நோயற்ற நிலை என்றே நாம் ஸ்வஸ்தயாவைப் புரிந்து கொண்டிருக்கிறோம். நோயற்ற நிலை அவசியம். ஆனால் ஸ்வஸ்தயாவிற்குள் அது மட்டும் அடங்காது. அதற்கு வேறு எதுவோ தேவைப்படுகிறது. கோலின் மறுமுனையில்- அதாவது நம் உள்ளிருப்பிலிருந்து ஏதோ ஒன்று தேவைப்படுகிறது, நோய் வெளியிலிருந்து துவங்கினாலும் அதன் அதிர்வுகள் ஆன்மாவில் எதிரொலிக்கின்றன.
அமைதியான ஓர் ஏரியில் நான் ஒரு கல்லை வீசுகிறேன். நீரில் கல் பட்ட இடத்தில் மட்டுமே நீர் கலங்கும். ஆனால் அந்தக் கலங்கலினால் ஏற்படும் சிற்றலைகள் கல் எறியப்படாத ஏரியின் கரைவரை செல்லும். அதேபோல்தான் நம் உடலில் ஏற்படும் கலக்கம் நமது ஆன்மாவரை சென்று கலக்கும். உடலுக்கு மட்டுமே நோய் மருந்து, சிகிச்சை அளிக்குமென்றால், தொலைதூரத்தில் கரையை அடைந்த சிற்றலைகள் என்ன ஆகும்? நாம் ஏரியில் ஒரு கல்லை எறிகிறோம். கல் தாக்கிய நீரில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டுத் திருப்தி அடைகிறோம். நீரில் பட்ட கல்லுக்குத் தொடர்பில்லாமல் தனக்கென்று ஒரு சுயமான தனித்தன்மையை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட சிற்றலைகளின் நிலை என்ன ஆகும்?
ஒரு மனிதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்த நோயின் அதிர்வுகள் ஆன்மாவிற்கு நுழைகின்றன. அதனால் சிகிச்சை முடிந்து நோய் குணமானபின்னும் அந்த நோய் இருப்பதாக அவர் நினைக்கிறார். நோய் இருப்பதாக நினைப்பதற்குக் காரணம் அந்த அதிர்வுகள் அந்த நபரின் உள்ளிருப்பில் எதிரொலித்திருக்கிறது. இதற்கு மருந்து விஞ்ஞானத்தில் இதுவரையில் எந்தத் தீர்வும் இல்லை. அதனால் தியானமில்லாமல் மருந்து விஞ்ஞானம் எப்போதும் முழுமை பெறாமலேயே இருக்கும். நம்மால் நோயைக் குணப்படுத்த முடியும். நோயாளியைக் குணப்படுத்தவே முடியாது. ஒரு வகையில் நோயாளி குணமாகாமல் இருப்பது மருத்துவருக்கு நல்லது. நோய் குணமானாலும் நோயாளி மறுபடியும் அவரிடம் வரவேண்டுமே!
நோய் கோலின் மறுமுனையிலிருந்து கூட எழும்பியிருக்கலாம். உண்மையில், மனிதன் இருக்கிற நிலையில் நோய் அங்கேயே ஏற்கனவே இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னதைப்போல மனிதனைப் போல மனம் சீரழிந்த, பதற்றமான, அமைதியற்ற வேறு எந்த மிருகமும் கிடையாது. இதற்குக் காரணமிருக்கிறது. தன் சுய உருவத்தை விட்டு, வேறு மாதிரியாக வேண்டும் என்கிற எண்ணம் எந்த மிருகத்திற்கும் கிடையாது. நாய் என்பது நாய்தான். அது நாயாக வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு மனிதன், மனித ஜீவனாக மாறவேண்டியிருக்கிறது. அவன் ஏற்கனவே அப்படியில்லை. ஒரு நாயிடம், அது சற்றுக் குறைவான நாய் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. மனிதன் வி~யத்தில் அப்படியில்லை. சரியான காரணத்தோடு ஒரு மனிதனிடம், அவன் சற்று குறைவான மனிதன் என்று சொல்லலாம். முழுமையாக எந்த மனிதனும் பிறந்ததில்லை.
மனிதன் முழுமையற்ற நிலையில்தான் பிறக்கிறான். மற்ற எல்லா மிருகங்களும் முழுமையாகவே பிறக்கின்றன. ஆனால் மனிதன் அப்படியில்லை. அவன் முழுமையடைய சில வி~யங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த முழுமையற்ற நிலைதான் அவனுடைய நோய். அதனால்தான் இருபத்திநாலு மணி நேரமும் அவன் சிக்கலிலேயே இருக்கிறான். வறுமையினால் ஓர் ஏழை மட்டும்தான் கஸ்டத்திலிருக்கிறான் என்பதில்லை. அப்படித்தான் நம்மிடம் பொதுவாக ஒரு எண்ணம் இருக்கிறது. ஒரு பணக்காரனாகும்போது க~;டத்தின் அளவுதான் மாறுகிறதே தவிர, கஸ்டம் அப்படியேதான் இருக்கிறது என்பதை நாம் உணருவதேயில்லை.
உண்மையில் ஒரு பணக்காரனுக்கு இருக்கிற கவலையெல்லாம் ஓர் ஏழைக்குக் கிடையாது. காரணம் ஓர் ஏழை கஸ்டப்பட அவன் ஏழை என்கிற நியாயமான பிரச்னை இருக்கிறதல்லவா? ஆனால் ஒரு பணக்காரனுக்கு நியாயமான காரணமில்லை. தன் கஸ்டத்திற்கு இதுதான் காரணம் என்று அவனால் குறிப்பிட்டுச் சொல்லவே முடியாது. ஒரு ஏக்கம், அல்லது கவலைக்கு ஒரு வெளிப்படையான காரணமில்லாத போது இது இன்னும் மோசமாகிறது. ஒரு நியாயமான காரணமிருந்தால் அது நிவாரணத்தைக் கொடுக்கும், ஓர் ஆறுதலைத் தரும். காரணமிருந்தால் அந்தக் கஸ்டத்தை ஒருநாள் நீக்கிவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கும். ஆனால் காரணமில்லாமல் ஒரு கஸ்டம் வந்தால் சிக்கல்கள் அதிகரிக்கும்.
ஏராளமான துன்பத்திற்கு ஆளான பல ஏழை நாடுகள் உண்டு. ஆனால் அவை பணக்கார நாடானவுடன், பணக்கார நாடுகளும் இந்தத் துன்பத்தை அனுபவித்திருக்கும் என்பதை உணரும்.
மனித இனம், ஒரு பணக்காரனின் துன்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்! ஏழையடைவதை அல்ல. துன்பத்தை தேர்ந்தெடுக்கிற ஒரு நிலை வந்தால் ஒரு பணக்காரனின் துன்பத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. அதே சமயம் அதில் அமைதியின்மையும் அதிகமாகும்.
இன்றைக்கு, உலகத்தின் எந்த நாட்டையும் விட, அதிகமான அமைதியின்மையையும், ஏக்கத்தையும் சந்திக்கிற நாடு அமெரிக்காதான். வேறு எந்தச் சமூகத்திற்கும் இல்லாத அளவிற்கு வசதிகள் அமெரிக்காவில்தான் இன்று இருக்கின்றன. ஆனால் உண்மையில் அமெரிக்காவில்தான் முதல் முறையாக ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. முதல் முறையாக மாயைகள் உடைபட்டிருக்கின்றன. தன்னுடைய துன்பங்களுக்கு ஏதோ ஒரு காரணமிருக்கிறது என்று மனிதன் நினைப்பதுண்டு.
தன்னுடைய துன்பத்திற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. தான் மட்டுமே காரணம் என்கிற தெளிவு முதல் முறையாக அமெரிக்காவில் வந்திருக்கிறது. புதிய துன்பங்களைத் தானே கண்டுபிடிக்கிறான். அவனுக்குள்ளிருக்கிற குணாதிசயம் அவன் இல்லாத ஒன்றை தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த நிலை ஒவ்வொரு நாளும் அர்த்தமில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. அதனால் நாளும் அர்த்தமில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. அதனால் ஏற்கனவே சாதித்தது கூட அர்த்தமில்லாத, அற்பமானதாகத் தெரிகிறது. அதனால் இல்லாத ஒன்றிற்காகத் தொடர்ந்து போராடுகிறான்.
நடக்க முடியாத இரண்டு காரியங்களுக்கு இடையே கட்டப்பட்ட பாலம்தான் மனிதன் என்று ““நீட்ஸே““ எங்கோ சொன்னார். இயலாத காரியத்தைச் சாதிக்க ஓர் ஆர்வம். முழுமையடைய ஓர் ஆர்வம். இந்த முழுமையடைகிற ஆர்வத்தில்தான் எல்லா மதங்களுமே பிறந்தன.
ஒரு காலத்தில் இந்தப் பூமியில் பூசாரிகள்தான் வைத்தியர்கள். மதத் தலைவர்கள்தான் மருத்துவர்கள். அவரே பூசாரி அவரே மருத்துவர். இதை மனத்தில் குறித்து கொள்வது நல்லது. நாளை இதே நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை. ஒரு சின்ன வித்தியாசம் மட்டும் இருக்கும். மருத்துவர் பூசாரியாயிருப்பார். இது அமெரிக்காவில் ஏற்படத் துவங்கி விட்டது. காரணம் முதல் முறையாக உடல் மட்டுமே என்கிற நிலை இல்லை என்பது அங்கு தெளிவாகியிருக்கிறது. உடல் முழு ஆரோக்கியத்துடன் இருந்தால் பிரச்சினைகள் பல மடங்கு கூடுகிறது என்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தன்னுள் இருக்கும் நோய், உடலிலுள்ள கோலின் மறு முனையிலிருந்து வந்திருக்கிறது என்பதை உணரத் துவங்கி விட்டான்.
நமது உணர்வுகளுக்குக் கூட காரணம் தேவைப்படுகிறது. காலில் முள் குத்திய பிறகுதான் கால் இருக்கிற உணர்வே ஒருவனுக்கு வருகிறது. காலில் முள் குத்தாத வரையில் கால் இருக்கிற உணர்வே இருப்பதில்லை. முள் காலில் இருக்கும்போது அவனுடைய ஆன்மா காலைக் குறி வைக்கும் அம்பாக மாறிவிடுகிறது. அந்தச் சமயத்தில் காலைத் தவிர வேறு எதிலும் கவனம் செல்லாது. அதுதான் இயல்பு. ஆனால் காலிலிருந்து முள்ளை எடுத்த பிறகும் வேறு எதிலும் கவனம் செல்லாது. உங்களுடைய பசி தீர்ந்துவிட்டால், உடுத்துவதற்கு நல்ல உடைகள் இருக்கும். வீடு ஒழுங்காக இருக்கும். உங்களுக்குப் பிடித்தமான மனைவி கிடைப்பாள். அதைவிட பேரிழப்பு வேறு இல்லை என்பது வேறு விடயம். பிடித்தமான மனைவி கிடைக்காவிட்டால் ஒருவனுடைய துன்பங்களுக்கு முடிவே இல்லை. உங்களுக்குப் பிடித்தமான மனைவி கிடைக்காவிட்டால் அவள் கிடைப்பாள் என்கிற நம்பிக்கையாவது இருக்கும். பிடித்தமான மனைவி கிடைத்துவிட்டால் அதுவும் தொலைந்தது.
ஒரு மனநல காப்பகத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் காப்பகத்தைக் காண ஒருவர் சென்றார். அங்கிருந்த அதிகாரி அவரை அழைத்துப் போய்க் காப்பகத்தைச் சுற்றிக் காட்டினார். ஒரு குறிப்பிட்ட அறைக்கு முன்னால் நின்றவுடன் அந்த மனிதர் அதிகாரியிடம் கேட்டார். அந்த அறையிலிருப்பவருக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார். அவன் காதலித்த பெண் அவருக்குக் கிடைக்காததால் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார் அதிகாரி. அடுத்த அறையிலிருந்தவரோ தன் அறைக் கம்பிகளை வளைக்க முயன்று கொண்டிருந்தார். இரண்டு கைகளாலும் மார்பில் அடித்துக் கொண்டார். தலைமயிரைப் பிய்த்துக் கொண்டிருந்தார். இவனுக்கு என்ன பிரச்னை என்று கேட்டார் வந்தவர். அந்த அறையிலிருந்தவருக்குக் கிடைக்காத பெண் இவருக்குக் கிடைத்து விட்டாள். அதனால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்றார் அதிகாரி. தான் காதலித்த பெண் கிடைக்காததால் அவளுடைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு தன் மனக்கோளாறோடு மகிழ்ச்சியோடு இருந்தார் முதல் அறைக்காரர். ஆனால் இரண்டாவது அறைக்காரரோ தன் தலையை கம்பிகளில் மோதிக் கொண்டிருந்தார். தன் காதலி கிடைக்காத காதலர்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள்.
உண்மையில் நாம் சாதிக்காததைச் சாதிக்க நினைக்கிறோம். அதை சாதிப்போம் என்கிற நம்பிக்கையிலேயே வாழ்கிறோம். சாதித்தவுடன் நம் நம்பிக்கைகள் உடைந்து போகிறது. நாம் வெறுமையாகி விடுகிறோம். இன்று உடல் பிரச்சினைகளிலிருந்து மனிதனை விடுவிக்கிறார் மருத்துவர். அந்தச் சமயத்தில் அவனது வேலை அடுத்த பாகத்திற்குச் செல்கிறது. உடல் நோயிலிருந்து மனிதன் விடுபட்டவுடன், அவனது உள்நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிற ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறோம். முதல் முறையாக அவனுக்குப் பிரச்னைகள் உள்ளே ஆரம்பிக்கின்றன. வெளியே எல்லாமே சரியாக இருக்கிறது. ஆனாலும் எதுவுமே சரியில்லாத மாதிரி இருக்கிறது.
இந்தியாவில் இருபத்திநாலு தீர்த்தங்கரர்களும் ராஜாக்களின் பிள்ளைகளாக இருந்ததில் வியப்பில்லை. புத்தன் ஒரு மகாராஜாவின் பிள்ளை. ராமனும், கிருஸ்ணனும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் அமைதியின்மை என்பது அவர்களது உடலிலிருந்து மறைந்துவிட்டது. அமைதியின்மை உள்ளிருந்து துவங்கிவிட்டது.
மருந்து மனிதனை நோயிலிருந்து மேலோட்டமாக உடல் ரீதியாக விடுபடச் செய்கிறது. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவிதமான நோயிலிருந்து மனிதன் விடுபட்டாலும் மனிதன், மனிதன் என்கிற அடிப்படை நோயிலிருந்து விடுபடவில்லை. மனிதனாக இருக்கிற நோய்தான் முடியாத காரியத்தைச் செய்கிற ஆசை. மனிதனாக இருக்கிற நோய்க்கு எதிலுமே திருப்தி வராது. மனிதனாக இருக்கிற நோய் சாதித்ததையெல்லாம் வீணாக்கும். இல்லாததற்கு முக்கியத்துவம் கொடுக்க வைக்கும்.
மனிதனாக இருக்கிற நோயைக் குணப்படுத்துவது தியானம்தான். மற்ற எல்லா நோய்களையும் மருத்துவர்களால் குணப்படுத்த முடியும். மருந்துக்கும் அந்தச் சக்தி உண்டு. ஆனால் மனிதனாக இருக்கிற குறிப்பிட்ட இந்த நோய்க்குத் தியானம்தான் ஒரே நிவாரணம். மனிதனின் உள்பகுதியைப் புரிந்து கொண்டு அதை நோக்கி வேலை செய்தால் மட்டுமே மருந்து விஞ்ஞானம் முழுமையடையும். உள்ளுக்குள் மனம் சீரழிந்த மனிதன் உடலுக்கு வெளியே ஆயிரத்தொரு நோய்களை உருவாக்குகிறான்.
நான் ஏற்கனவே சொன்னதைப்போல, எப்பொழுதெல்லாம் உடல் நோய்வாய்ப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த அதிர்வுகளை, சிற்றலைகளை ஆன்மாவில் உணர முடியும். அதேபோல் ஆன்மா நோய்வாய்ப்பட்டால் அந்தச் சிற்றலைகள் உடலை வந்தடையும்.
அதனால்தான் உலகத்தில் மருத்துவத்துறையில் பல ‘பதி’ ஹோமியோ ‘பதி’ நேச்சரோ ‘பதி’ என்று உண்டு. நோய்க் குண பாடம்- அதாவது, ஆங்கிலத்தில் ““பேத்தாலஜி““ (Pathology).
மருத்துவம் ஒரு விஞ்ஞானமாக இருந்தால் இத்தனை ‘பதி’க்கள் வந்திருக்கக் கூடாது. அப்படி வந்திருப்பதற்கு காரணமே, மனிதனின் நோய்கள் ஆயிரம் வகைகள். சில வகையான நோய்களை அலோபதியினால் குணமாக்க முடியாது. மனிதனுக்குள்ளிருந்து கிளம்பி, வெளியே பயணிக்கும் நோய்களுக்கு அலோபதி பயன்தராது. வெளியே துவங்கி உள்ளே செல்லும் நோய்களுக்கு அலோபதிதான் சிறந்த மருத்துவம். உள்ளிருந்து வெளியே வரும் நோய்கள் உடல் ரீதியான நோய்களே அல்ல. உடல் ரீதியாக வெளிக்காட்டும். அதனுடைய பூர்வீகமே உளவியலானது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் அது இறை சார்ந்தது.
ஒருவருக்கு உளவியல் ரீதியாக ஒரு நோயிருந்தால் அதை எந்த மருந்து மருத்துவமும் குணமாக்க முடியாது. சொல்லப்போனால், அதனால் தீமைதான். மருத்துவம் செய்து கொண்டால் அந்த மருத்துவம் எதையாவது செய்ய முயலும். அந்த முயற்சியில், அது நிவாரணம் தராமல் அது தீமையில் போய் முடியும். கேடும் விளைவிக்காத, நிவாரணமும் தராத மருந்துகளே தேவை. உதாரணத்திற்கு, ஹோமியோபதி எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது. காரணம் அதனால் எந்தப் பலனும் இல்லை. ஆனால் ஹோமியோபதி நிச்சயம் நிவாரணத்தைத் தரும். அதற்கு நிவாரணத்தைத் தரமுடியாது. அதன் மூலமாக மக்களுக்கு நிவாரணமே கிடைப்பதில்லை என்று பொருளல்ல.
நிவாரணம் கிடைப்பது என்பது வேறு; நிவாரணம் கொடுப்பது என்பது வேறு. இந்த இரண்டு இரு தனி விஸயங்கள். உளவியல் ரீதியாக ஒருவர் நோயை உருவாக்குகிறார். அவருக்கு அடிப்படையான மருந்து தேவை. அது தொப்புள் கொடி தொடர்புடையது. அவருக்கு அஸ்திவார சிகிச்சை தேவை. அவருக்கு ஓர் ஆறுதல் தேவைப்படுகிறது. அவருக்கு நோயில்லை என்கிற உத்தரவாதம் தேவைப்படுகிறது. இதை ஒரு பண்டாரத்தின் சாம்பலைக் கொண்டு கூட செய்துவிட முடியும். கங்கை நீரைப் போன்ற புனித நீர்களைக் கொண்டு செய்து விட முடியும்.
இப்போதெல்லாம் பலவித சோதனைகள் இந்த அஸ்திவார மருத்துவம், அதாவது ஒரு வகையான மாயை மருந்து குறித்து நடக்கிறது. பத்து நபர்கள் ஒரே விதமாக நோயில் இருக்கிறார்கள். மூன்று பேருக்கு அலோபதி மருத்துவம். மூவருக்கு ஹோமியோபதி, மூவருக்கு இயற்கை வைத்தியம் செய்தால் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைக்கும். ஒவ்வொரு சிகிச்சையும் ஒரே சதவிகிதத்தில் நன்மையாகவும், தீமையாகவும் பாதிக்கிறது. விகிதாசாரத்தில் எந்த வேறுபாடுமே இல்லை. இது சிந்திப்பதற்கு ஒரு காரணத்தைக் கொடுக்கிறது. என்ன நடக்கிறது?
என்னைப் பொறுத்தவரையில், அலோபதி என்பது ஒரு விஞ்ஞான பூர்வமான மருந்து. ஆனால் மனிதனுக்குள் விஞ்ஞானமற்றதாக ஏதோ இருக்கிறது. அதற்கு விஞ்ஞானபூர்வமான மருந்து பயன்படாது. அலோபதி மட்டுமே மனித உடலை விஞ்ஞான ரீதியாக அணுகுகிறது. ஆனால் அதனால் நூறு சதவிகித முடிவுகளைக் கொடுக்க முடியாது. காரணம் மனிதனின் உள் என்பது கற்பனை மிகுந்தது. புதிதாக உருவாக்கக் கூடியது. அதை வெளிக்காட்டிக் கொள்ளத் துடிப்பது. அலோபதி பலனளிக்காமல் போனால் அந்த நபருக்கு விஞ்ஞானமற்ற நோய் இருப்பதாகவே பொருள். விஞ்ஞானமற்ற முறையில் நோய்வாய்ப்படுவது என்றால் என்ன?
இந்த வார்த்தைகள் வினோதமாகத் தோன்றும். விஞ்ஞானபூர்வமாக மருத்துவ சிகிச்சை, விஞ்ஞானமற்ற மருத்துவ சிகிச்சை இருப்பது உங்களுக்குத் தெரியும். நான் சொல்கிறேன். விஞ்ஞானபூர்வமான நோய், விஞ்ஞானமற்ற நோய்- அதாவது விஞ்ஞானமற்ற முறையில் நோய்வாய்ப்படுவது என்றும் உண்டு. உள ரீதியாகத் துவங்கி உடலில் வந்த வெளிக்காட்டும் நோய்களை விஞ்ஞானபூர்வமாகக் குணப்படுத்தவே முடியாது.
குருடாகிப்போன ஓர் இளம் பெண்ணை எனக்குத் தெரியும். ஆனால் அவளது குருட்டுத்தன்மை மனோதத்துவ ரீதியானது. உண்மையில் அவளது கண்கள் பாதிக்கப்படவேயில்லை. கண் மருத்துவ நிபுணர்கள் அவளது கண்கள் சரியாக இருப்பதாகவே சொன்னார்கள். அந்தப் பெண் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்தப் பெண் யாரையும் ஏமாற்றவில்லை. அவளை நெருப்பை நோக்கி அழைத்துப் போனால் கூட, அவள் அதனருகே போவாள். சுவரில் மோதித் தலையைக் காயப்படுத்திக் கொள்வாள். அவள் யாரையும் முட்டாளாக்கவில்லை. அவளது கண்களால் அவளால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த நோய் மருத்துவர்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வந்தார்கள். நான் அவளைப் புரிந்து கொள்ள முயன்றேன். அந்தப் பெண் யாரையோ காதலித்தாள். அவளது குடும்பத்தினர் அவனைப் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருந்ததைத் தெரிந்து கொண்டேன். அவளைத் தொடர்ந்து கேட்டபோது தன் காதலனைத் தவிர இந்த உலகத்தில் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றாள். தன் காதலனைத் தவிர யாரையும் பார்ப்பதில்லை என்கிற உறுதி. அவளது உறுதியில் ஒரு தீவிரம் இருந்ததால், அவள் மனோதத்துவ ரீதியில் குருடாகி விட்டாள். அந்த கண்கள் எதையுமே பார்க்காது. கண்களைக் கூறுபடுத்திப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் கூறுபடுத்துவது என்பது மருத்துவரீதியாகச் சாதாரணமானது. பார்ப்பது என்பது கண்களின் செயல்பாடு. கண்களுக்குப் பின்னால் இருந்து பார்ப்பவர் நழுவிவிட்டார். தன்னையே அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார். இதை நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அதை உணருவதில்லை. உடல் இயக்கம் செயல்படுவதே, நாம் அதற்குப் பின்னால் இருந்தால்தான்.
ஹாக்கி விளையாடும்போது ஓர் இளம் ஆடவன் தன் கால்களைக் காயப்படுத்திக் கொண்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். ரத்தம் வருகிறது. அவனால் அதை உணர முடியவில்லை. அவன் காலில் ரத்தம் வருவதை மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அவனிடமோ எந்தச் சலசலப்பும் இல்லை. விளையாட்டு முடிந்து அரைமணி நேரம் கழித்து, காலைக் கவனிக்கிறான். கத்த ஆரம்பிக்கிறான். எப்போது அடிபட்டது என்கிறான். அது அவனுக்கு மிகுந்த வலியைக் கொடுக்கிறது. அவனுக்குக் காயம்பட்டு அரைமணி நேரம் ஆயிற்று. காலில் என்பது உண்மை. காலின் உணர்வு இயக்கம் சரியாகவே வேலை செய்கிறது. அந்த உணர்வுதான் அரைமணி நேரம் கழித்து அவனுக்கு வலியை உணர்த்தியது. அப்படியானால் அந்தத் தகவலை அது ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை. அவனது கவனம் காலில் இல்லை. கவனம் முழுவதும் விளையாட்டில் இருந்தது. அந்தக் கவனம் அதிதீவிரமாக இருந்ததால், சிறிதளவு கவனம் கூட கால்களுக்குச் செல்லவில்லை. கால், தசைகள் அவனுக்குச் சொல்லிக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். நரம்புகள் முறுக்கியிருக்க வேண்டும். கால் எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் தொடர்பகத்தில் இருந்த மனிதன் தூங்கிவிட்டான். அவன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்திருக்க வேண்டும் அல்லது வேறு எங்காவது இருந்திருக்க வேண்டும். அவன் அங்கு இல்லை. காணாமல் போய்விட்டான். அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்தபோதுதான் காலில் காயம்பட்டிருப்பது கவனிக்கப்பட்டது.
ஒரு காரியம் செய்யச் சொல்லி அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு சொன்னேன். அவள் பார்க்க விரும்புகிற நபரை பார்க்க அனுமதிக்காததால் அவள், ஓர் தற்கொலை. அவள் ஒரு பகுதி தற்கொலை செய்து கொண்டதைத் தவிர அவளுக்கு வேறு எந்தப் பிரச்னையுமில்லை. அவள் காதலன் அவளைப் பார்க்கட்டும். குடும்பத்தினர்கள் கேட்டார்கள் ‘அதற்கும் கண்களுக்கும் என்ன தொடர்பு?’ என்றார்கள். ஒரு முயற்சி செய்து பாருங்கள் என்றேன். அவள் காதலனைச் சந்திக்கலாம். ஐந்து மணிக்கு அவன் வருகிறான் என்று சொன்னதும் அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்றாள். கண்கள் சரியாகிவிட்டன.
இது ஏமாற்றுதலில்லை; ஹிப்னாடிஸம், அதாவது வலுவில் துயில் கொள்ளச் செய்வது… வசியப்படுத்துதல் நடக்கும் பல சோதனைகள் இது ஏமாற்று வேலை அல்ல என்பதைக் காட்டிவிட்டது. இது என்னுடைய அனுபவத்தில் நான் சொன்னது. ஹிப்னாடிஸ மயக்கத்தில் இருக்கும் ஒருவரின் கையில் கூழாங்கல்லை வைத்துவிட்டு அது எரிகிற கரித்துண்டு என்று சொல்லுங்கள். கையில் சூடு பட்டவுடன் எப்படி நடந்து கொள்வாரோ அப்படித்தான் நடந்து கொள்வார். அதை உடனே தூக்கி எறிவார். கத்த ஆரம்பிப்பார். கை சுட்டு விட்டதுமாதிரி துடிப்பார். இதுவரையில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கையில் கொப்பளம் ஏற்படும். அப்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கும். எரியும் கரித்துண்டு அவர் கையில் வைக்கப்பட்டதாக அவர் கற்பனை செய்யும்போதே அவர் கையில் கொப்பளங்கள் வருகின்றனவென்றால், உடல் ரீதியாக இதற்கு சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இதற்கு சிகிச்சை என்பது மன அளவிலிருந்து துவக்க வேண்டும்.
இங்கே நாம் மனிதனின் ஒரு முனையைத்தான் பார்க்கிறோம். உடலைத் தாக்கும் நோயை மட்டுமே நாம் அப்புறப்படுத்துகிறோம். ஆனால் அதே சமயம் மனதிலிருந்து கிளம்பும் நோய் அதிகரித்துவிட்டது. இன்று, விஞ்ஞான ரீதியாகச் சிந்திப்பவர்கள் கூட ஐம்பது சதவிகித நோய் மனதிலிருந்துதான் கிளம்புகிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள். இந்தியாவில் அப்படியில்லை. காரணம் மனம் நோய்வாய்ப்படுவதற்கு அந்த மனம் பலமாக இருக்க வேண்டும். இன்றும் இந்தியாவில் தொண்ணூற்று ஐந்து சதவிகித நோய்கள் உடல் சார்ந்தவை. ஆனால் அமெரிக்காவில் மன ரீதியான நோய் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
மனரீதியான நோய்கள் முதலில் உள்ளே ஆரம்பித்து, வெளியே பரவும். அவை வெளியேறும் வியாதிகள். ஆனால் உடல் ரீதியான நோய்கள் உள்ளே போகக்கூடியவை. மனநோய்க்கு உடல் ரீதியான சிகிச்சை அளித்தால் அது வேறு வழியாக வெளியேறத் துடிக்கும். மனநோய் ஒரு இடத்தில் வடிவதை சின்ன அளவில் நாம் தடுக்கலாம். ஆனால் அது நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் வெளியேறத் தயாராகிவிடும். ஒரு நபரின் குணாதிசயத்தின் பலவீனமான பகுதியிலிருந்து நான் பிரச்னையை அணுகுவேன். அதனால்தான் பல சமயங்களில் மருத்துவர்களால் இந்த நோயைக் குணப்படுத்த முடியவில்லை. அதே சமயம். நோயின் பல வடிவங்களைப் பெருக்கி விடுகிறார்கள். ஒரு வழியாக வருவது இப்போது பல வழியாக வரத் துவங்குகிறது. காரணம் இப்போது பல மையங்களில் நாம் அணைகளைக் கட்டிவிட்டோம்.
என்னைப் பொறுத்தவரையில், தியானம்தான் மனிதனின் மறுமுனைக்கான நிவாரணம். இயற்கையாக மருந்துகள் பொருளையும், அதன் ரசாயனக் கலவையையும் நம்பியிருக்கிறது. ஆனால் தியானமோ உணர்வை சார்ந்திருக்கிறது.தியானத்திற்கு மாத்திரைகள் கிடையாது. இத்தனைக்கும் மக்கள் எல்.எஸ்.டி., கஞ்சா போன்ற ஆயிரக்கணக்கான முறைகளை முயற்சி செய்கிறார்கள். தியானத்திற்கு மாத்திரை தயாரிக்க பலவித முயற்சிகள் நடக்கின்றன. அதுவும் கூட உடல் ரீதியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென்கிற பிடிவாதம்தான். உள்ளே உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டால் கூட அதற்குப் பிறகும் கூட நாம் வெளியே இருந்துதான் சிகிச்சை கொடுக்கிறோம்; உள்ளே அல்ல. எந்த ரசாயனத்தின் மூலமாகவும் மனிதனின் உள்ளிருப்பிற்குள் செல்லவே முடியாது. உள்ளே செல்லச் செல்ல ரசாயனத்தின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். உள்ளே போகும்போது உடல், பொருள் ரீதியான அணுகுமுறையெல்லாம் பயனற்றதாகிவிடும். பொருளற்ற அணுகுமுறை அல்லது உளவியல் அணுகுமுறைதான் அங்கே அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஏற்கனவே இருக்கிற தப்பெண்ணங்களால் இந்த விடயத்தில் நாம் எதையுமே சாதிக்கவில்லை. சம்பிரதாயமான, இரண்டு மூன்று தொழில்களில் மருத்துவர் தொழிலும் ஒன்று. சம்பிரதாயக் கூட்டுக்கள் அதிகம் புதையுண்டு கிடப்பவர்களில் முதல் வரிசையில் இருப்பவர்கள் பேராசிரியர்களும், மருத்துவர்களும்தான். அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் பழைய சிந்தனைகளிலிருந்து எளிதில் வெளியே வரமாட்டார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. அது நியாயமான காரணமும் கூட. தங்களிடம் நிரம்பிக் கிடக்கும் பழைய எண்ணங்களைக் களைந்துவிட்டு புதிய நோக்கங்களுக்கு அவர்கள் வளைந்து கொடுக்க ஆரம்பித்தால் அவர்கள் குழந்தைகளுக்குப் போதிக்கும்போது பல சிக்கல்கள் ஏற்படும். ஒரு வி~யம் ஆழமாக பதிந்துவிட்டால்தான் திறமையாகப் போதிக்க முடியும். எண்ணத்தில் உறுதி வேண்டும், குழப்பமாக, சலசலப்பாக இருக்கக்கூடாது. அப்போதுதான் அவர்கள் கற்றுக் கொடுக்கும்போது ஒரு திடமான, உறுதி அவர்களிடம் இருக்கும்.
ஒரு பேராசிரியருக்கு தேவைப்படும் உறுதி ஒரு குற்றவாளிக்குக் கூட இருக்க வேண்டியதில்லை. தான் சொல்வது சரி என்கிற தன்னம்பிக்கை ஒரு பேராசிரியருக்கு இருக்க வேண்டும். இந்தத் தன்னம்பிக்கையோடு தான் தொழிலை சரியாக செய்கிறோம் என்றிருப்பவர்கள் ஒரு சம்பிரதாயக் கூட்டுக்குள்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள் பழமை மாறாமல்தான் இருப்பார்கள். இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எந்த வகையில் பார்த்தாலும் கல்வி குறைந்த பழமை உடையதாகவே இருக்க வேண்டும். அதனால்தான் எந்த ஆசிரியரும் புதிதாக எதையுமே கண்டுபிடிப்பதில்லை. பல்கலைக்கழகங்களில் பல பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் புதிய கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் வெளியே இருந்துதான் வருகின்றன. நோபல் பரிசு பெற்றவர்கள் எழுபது சதவிகிதம் பேர் பல்கலைக்கழகங்களுக்கு வெளியே இருப்பவர்கள்தான்.
இதற்கு அடுத்தபடி பழமையில் ஊறியிருப்பவர்கள் மருத்துவர்கள்தான். இதற்குத் தொழில் ரீதியான காரணம் இருக்கிறது. மருத்துவர்கள் வேகமாக முடிவுகள் எடுக்க வேண்டும். நோயாளி மரணப்படுக்கையில் இருக்கும்போது மருத்துவர் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. பிறகு யோசனைதான் மிச்சமிருக்கும். நோயாளி இறந்து போயிருப்பார். மருத்துவர்கள் பழமையாக இல்லாமல், தன்னிச்சையாக புதிய முறைகளையும் சோதனைகளையும் செய்யத் துவங்கினால் அதிலும் ஆபத்து இருக்கிறது. அவர் உடனடி முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த மாதிரி உடனடி முடிவுகள் எடுக்க வேண்டிய எல்லோருமே தங்களின் கடந்த கால அனுபவ அறிவையே நம்பியிருக்க வேண்டும். புதிய யோசனைகளில் சிக்கிக் கொள்ள விரும்பமாட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் அந்த இடத்தில் முடிவுகள் எடுக்க வேண்டிய எல்லோருமே கடந்த கால அனுபவங்களையே நம்பியிருப்பார்கள். அதனால்தான் மருத்துவத் தொழில், மருத்துவ ஆராய்ச்சிக்கு முப்பது ஆண்டுகள் பின்தங்கியே இருக்கிறது. எது பழக்கத்தில் இருக்கக் கூடாதோ, அதைப் பின்பற்றுவதால், பல நோயாளிகள் தேவையில்லாமல் இறந்து போகிறார்கள். ஆனால் இது ஒரு தொழில் ரீதியான விபத்து. அதனால் மருத்துவர்களின் பல அணுகுமுறைகள் மரபு மாறாதவையாகவே உள்ளன. அவற்றில் ஒன்று மனிதனைவிட மருந்தை நம்புவது. உள்ளுணர்வைவிட ரசாயனத்தை நம்புவது. உள்ளுணர்வைவிட வேதியியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. வேதியியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். உள்ளுணர்வு குறித்து எந்தப் பரிசோதனையுமே நடக்கவில்லை.
இங்கே நான் சில உதாரணங்களைச் சொன்னால் உங்களுக்குப் புதிய எண்ணங்கள் வரும் என்று நினைக்கிறேன். பிரசவ வலி இல்லாமல் எப்படி குழந்தை பெற்றெடுப்பது என்பது காலங்காலமாக இருந்து வருகிற கேள்வி. பூசாரிகள் இதற்கு நேர் எதிரானவர்கள். உலகம் வலியிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமென்கிற எண்ணத்திற்கு எதிரானவர்கள் பூசாரிகள்தான். உலகத்தில் வலி இல்லை என்றால் இவர்களுக்கே வேலை இருக்காதே. அவர்களுடைய வேலையே அர்த்தமற்றதாகிவிடும். அவதியும், சோகமும், துன்பமும் இருந்தால்தான் அவர்களுக்கு அழைப்பு வரும்; பிரார்த்தனை இருக்கும். துன்பங்கள் இல்லையென்றால் கடவுள் கூட புறக்கணிக்கப்படுவார். எப்போதாவது தான் பூஜைகள் நடக்கும். காரணம் துன்பம் வந்தால்தான் நாம் கடவுளையே நினைக்கிறோம். எப்போதுமே வலியில்லா பிரசவத்திற்கு எதிரானவர்கள் பூசாரிகள். பிரசவத்தின் போது வலி ஏற்படுவது இயற்கையானது என்பார்கள் அவர்கள்.
ஆனால் இப்படியிருக்கக் கூடாது. இது கடவுளின் ஏற்பாடு என்பது பொய்யான பிரசாரம். பிரசவத்தின் போது வலி ஏற்படுத்த வேண்டுமென்று எந்தக் கடவுளும் விரும்பமாட்டார். வலியில்லா பிரசவத்திற்கு சில மருந்துகள் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். அதற்காக சில ரசாயனங்கள், மயக்கமருந்து கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். மருத்துவர்களின் இந்த முயற்சிகள் எல்லாமே உடல் ரீதியானவை. இதற்குப் பொருள் என்னவென்றால் வலி தெரியாமல் தாயின் உடலைத் தயார்படுத்துவதுதான். பல நூற்றாண்டுகளுக்கு பெண்களே கூட இந்த முயற்சியில்தான் இருக்கிறார்கள்.
அதனால்தான் எழுபத்தி ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இரவில் பிறக்கின்றன. பகலில் இது கடினம். காரணம் பெண்கள் அப்போது சுறுசுறுப்பாகவும், விழிப்போடும் இருக்கிறார்கள். தூங்கும்போது பெண்கள் சற்றுத் தளர்ந்து இருப்பார்கள். அப்போது குழந்தை பிறந்தால் சுலபமாக இருக்கும். இரவில் அவர்கள் தூங்கப் போவார்கள். தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். அதனால் எழுபத்தி ஐந்து சதவிகிதக் குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சத்தில் பிறக்கிற வாய்ப்பே இல்லாமல் போகிறது. இருட்டில்தான் பிறக்க வேண்டியிருக்கிறது. குழந்தை பிறக்கப்போகிற தருணத்திலிருந்து தாய் அதற்கு நிறைய தடைகள் போடுகிறாள். பிறகு அந்தக் குழந்தைக்காக அவள் பல இன்னல்களைத் தாங்கிக் கொள்கிறாள் என்பது வேறு விஸயம். ஆனால் குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய் அதற்குப் பல தொந்தரவுகளைக் கொடுக்கிறாள்.
தூங்கும்போது உடல் சற்றுத் தளர்ந்திருக்கும்; அப்போது அதற்கு மருந்துகள் மூலமாக நிவாரணம் கொடுக்கலாம் என்பது ஒரு முயற்சி. அதற்காகவே இந்த ஏற்பாடு. ஆனால் இதில் அதற்கே உண்டான சில சிக்கல்கள் உள்ளன. பெரிய பின்னடைவே அந்த நபரின் உள்ளுணர்வில் நாம் நம்பிக்கையே கொள்வதில்லை. மனித உள்ளுணர்விலுள்ள நம்பிக்கைகள் குறைந்து கொண்டே போகும்போது, உள்ளுணர்வு மறையத் துவங்குகிறது.
“லாமேசே" என்கிற ஒரு மருத்துவர் மனித உள்ளுணர்வை நம்பினார். பல ஆயிரம் பெண்களுக்கு வலியில்லாத பிரசவத்தை நடத்திக் காட்டினார். இந்த முறைக்குப் பெயர் தெளிவான ஒத்துழைப்பு. பிரசவத்தின்போது தியானமுறையில், சுயஉணர்வோடு தாய் ஒத்துழைப்பு கொடுக்கிறாள். அதை அவள் ஏற்றுக் கொள்கிறாள். அவள் முரண்டு பிடிப்பதில்லை. எதிர்ப்பதில்லை. குழந்தை பிறப்பதனால் வலி ஏற்படுவதில்லை. தாய் அதை எதிர்ப்பதினால் வருகிறது. குழந்தை பிறக்கிற அந்த இயக்கத்தை அவள் கட்டுப்படுத்துகிறாள். வலிக்கு அவள் பயப்படுகிறாள். அந்தப் பிரசவ வேதனையைக் கண்டு பயப்படுகிறாள். இந்த பயம் கலந்த எதிர்ப்பு குழந்தை பிறப்பதைத் தடுக்கிறது. குழந்தை பிறக்க முயலும்போது இருவருக்கும் சச்சரவு ஏற்படுகிறது. குழந்தைக்கும், தாய்க்கும் மோதல் நடக்கிறது. இந்த முரண்பாடுதான் வலிக்குக் காரணம். இந்த மோதலினால், இந்த எதிர்ப்பினால் வலி ஏற்படுவது இயற்கையானது.
இந்த எதிர்ப்புப் பிரச்னையை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளன. உடல் ரீதியாக அணுகும்போது தாய்க்கு மயக்க மருந்து கொடுக்கலாம். இந்தச் சமயத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய் மயக்கத்தில் இருக்கிறாள். முழு உணர்வோடு அவள் தாயாவதில்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது, குழந்தை மட்டும் பிறப்பதில்லை. ஒரு தாயும் பிறக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கும்போது, இரண்டு பிறப்புகள் நடக்கின்றன. ஒரு பக்கம் குழந்தை பிறக்கிறது; இன்னொரு புறம் ஒரு சாதாரண பெண் தாயாகிறாள். தாயின் மயக்கத்தில் குழந்தை பிறப்பதால், தாய்க்கும், குழந்தைக்கும் இருக்கிற அடிப்படை உறவை உருக்குலைக்கிறோம். அதனால் ஒரு தாய் உருவாவதில்லை; ஒரு தாதி உருவெடுக்கிறாள்.
செயற்கையாக ரசாயனம் மூலமாக ஒரு தாய்க்கு மயக்க மருந்து கொடுத்துப் பிரசவிக்க செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பிரசவத்தின் போது ஒரு தாய்க்குத் தெளிவு இருக்க வேண்டும். ஒரு தாயும் பிறக்கிறாள் என்கிற உணர்வும் இருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், ஒரு தாயின் உணர்வைப் பிரசவத்திற்குத் தயார் செய்கிறோம் என்று பொருள். பிரசவத்தை ஒரு தாய் தியான உணர்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தியானத்தில் ஒரு தாய்க்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. பிரசவத்தைத் தடுக்கவோ, எதிர்க்கவோ கூடாது. எது நடந்தாலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். பூமியில் எங்கெல்லாம் பள்ளம் இருக்கிறதோ அங்கு செல்லும் நதி ஓடுவதைப் போல, காற்று வீசுவதைப் போல, இலைகள் உதிர்வதைப் போல. யாருக்கும் இதைப் பற்றிய பாதிப்பு இருப்பதில்லை. அதைப் போலவே அவளுக்கு முன்னால் உள்ள எதற்குமே அவள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிரசவத்தின்போது தாய் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், அதை எதிர்த்து சண்டை போடாமல் இருந்தால், பயப்படாமல் இருந்தால், அந்த நிகழ்வில் தியான உணர்வோடு மூழ்கிப்போனால், பிறகு வலியில்லாத பிரசவம் நடக்கும். வலி காணாமல் போய்விடும்.
இதை நான் விஞ்ஞான அடிப்படையில் சொல்கிறேன். இந்த முறையில் பல பரிசோதனைகள் நடந்திருக்கின்றன. வலியிலிருந்து அவள் விடுபடுவாள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பல தொலைநோக்கு முடிவுகள் ஏற்படும்.
முதலில் நமக்கு வலியை ஏற்படுத்துகிற பொருளோ, அல்லது நபர் மீதோ நமக்கு ஒரு மோசமான எண்ணம் அவரிடம் தொடர்பு ஏற்பட்டவுடனேயே ஏற்படுகிறது. முதல் அனுபவத்திலேயே நாம் போராடுகிற நபர் மீது நமக்கு ஒரு பகை உணர்வு ஏற்படுகிறது. இதுவே அவருடன் ஏற்படவிருந்த நட்புறவுக்குத் தடையாக இருக்கிறது. முரண்பட்ட அந்த நபருடன் உருவாக்க இருந்த நட்புறவுப் பாலத்தை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது மேலோட்டமானது. ஆனால் முழு விழிப்புணர்வோடு, ஒத்துழைப்போடு ஒரு பிரசவம் ஏற்பட்டால்…
இது ஒருவகையில் சுவாரஸ்யமானது. இதுவரையில் நாம் பிரசவ வேதனை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். பிரசவப் பேரின்பம் என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதேயில்லை. காரணம் அப்படி ஒன்று நடந்ததேயில்லை. ஆனால் முழு ஒத்துழைப்பு இருந்தால் இந்தப் பிரசவப் பேரின்பம் ஏற்படும். அதனால் வலியில்லாத பிரசவத்தில் எனக்கு உடன்பாடில்லை. பேரின்பப் பிரசவத்தை ஆதரிக்கிறேன். மருத்துவ விஞ்ஞானத்தின் உதவியோடு நம்மால் அதிக பட்சம் வலியில்லாத பிரசவத்தை உருவாக்க முடியும். ஆனால் பேரின்பப் பிரசவத்தை உருவாக்கவே முடியாது. அந்த முதல் தருணத்திலேயே ஓர் உணர்வுள்ள உள் இணைப்பைத் தாய்க்கும், சேய்க்கும் உருவாக்கிவிட முடியும்.
உள்ளிருந்து கொண்டு கூட இதைச் செய்ய முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம். எப்போது நோய்வாய்ப்பட்டாலும், அந்த நோய்க்கு எதிராக வெளியேயிருந்துதான் சண்டை போடுகிறோம். இதைக் கண்டுபிடிக்கவும் நாம் முயல்வதில்லை. இதனால் நாமே நோயை வரவழைப்பது சத்தியம். நாமே அழைத்த வியாதிகள்தான் அதிகம். உண்மையில் சில நோய்கள் மட்டும்தான் தாமாக வருகின்றன. பல நாளாக வரவேற்றுக் கொண்டவைதான். அவை வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே நாம் அழைப்பு விடுத்துவிட்டோம். அதனால்தான் இந்த இரண்டிற்கும் தொடர்பிருப்பதை நம்மால் உணர முடிவதில்லை.
பல ஆயிரம் ஆண்டுகளாக உலகத்தில் எந்த சமூகமும் உடலுறவிற்கும் குழந்தை பிறப்பிற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. காரணம் இரண்டிற்கும் உள்ள கால இடைவெளி அதிகம். அதாவது ஒன்பது மாதம். இந்த இடைவெளியில் ஏற்பட்ட காரண- விளைவுகளைத் தொடர்பு ஏற்படுத்துவது கடினமாக இருந்தது. மேலும் எல்லா உடலுறவுகளும் குழந்தைப் பிறப்பில் முடிவதில்லை. அதனால் இந்த இரண்டையும் தொடர்புபடுத்த வேண்டிய நியாயமிருக்கவில்லை. ஒன்பது மாதங்களுக்கு முன்பு நடந்த ஒன்று இன்று குழந்தைப் பிறப்பில் முடிந்திருக்கிறது என்பதை மனிதன் பின்னால்தான் உணர்ந்தான். அவனால் ஒரு காரண- காரிய உறவை ஏற்படுத்த முடிந்தது. இதேதான் நோய் குறித்தும் ஏற்பட்டது. எப்போதோ நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் அது பின்னால்தான் வரும். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நிறைய காலம் ஓடிவிடுகிறது. அதனால்தான் இந்த இரண்டிற்கும் தொடர்பிருப்பதாக நம்மால் பார்க்க முடிவதில்லை.
திவாலாக இருந்த ஒரு மனிதனைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தையிலிருந்த அவனது கடைக்குப் போகவே பயந்தான். தெருவில் நடக்கவே பயந்தான். ஒரு நாள் குளியலறையில் இருந்து வெளியே வரும்போது, கீழே விழுந்தான். முடமாகிப் போனான். இப்போது அவனுக்கு எல்லாவிதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. ஆனால் அவன் முடமாகிப் போவதையே விரும்பினான் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அவன் உளமாற அப்படி நினைக்கவில்லை. ஆனால் அது வி~யமல்ல. அவன் முடமாவதை விரும்பினானா இல்லையா என்பதும் வி~யமல்ல. அனேகமாக அவன் அதைப்பற்றி யோசித்திருக்கக் கூட வேண்டியதில்லை. ஆனால் எங்கோ மனசுக்குள், அவனது நினைவற்ற உணர்வில் சந்தைக்குப் போகக் கூடாது. கடைக்கோ, தெருவுக்கோ போகக் கூடாது என்று நினைப்பிருந்தது. இதுதான் முதல் படி.
இரண்டாவதாக, மக்கள் அவனிடம் அதிக வெறுப்பைக் காட்டாமல், அவர்கள் அவனிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைத்தான். அதுதான் அவனது ஆழ்ந்த ஆசை. நிழலைப் போல மனதை உடல் தொடரும். அது எப்போதும் மனதிற்கு ஆதரவு கொடுக்கும். மனம் அதற்கான ஏற்பாட்டை செய்கிறது. மனதிடம் என்ன ஏற்பாடு இருக்கிறது என்பது நாம் உணருவதில்லை. ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருங்கள். இரவில் மட்டும் சாப்பிடுங்கள். மனம் இதைக் கவனித்துக் கொண்டேயிருக்கும். ‘ஒருநாள் முழுக்க பட்டினி கிடந்திருக்கிறாய். அதனால் நீ அசௌகர்யமாக இருக்கிறாய். அதனால் ராஜாவின் அரண்மனையில் விருந்துக்கும் போகலாம்’ என்று சொல்லும். அன்று இரவில் கனவில் நீங்கள் அங்கே சாப்பிடுவீர்கள்.
உடலால் செய்ய முடியாத எல்லாவற்றிற்கும், மனம் ஏற்பாடு செய்யும். எல்லாக் கனவுகளுமே இப்படித்தான். ஒரு மாற்று; அவ்வளவுதான். பகலில் நம்மால் செய்ய முடியாதவற்றை இரவில் செய்கிறோம். மனம்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்யும். இரவில் கழிப்பறைக்கு போகவேண்டியிருந்தால், மனம் உன்னைச் சத்தம் போட்டு எழுப்புகிறது என்றுதான் பொருள். உன் கனவில் அது உன்னைக் கழிப்பறைக்கு அனுப்பும். அப்போது சிறுநீரகப் பை இலகுவானது போல் உணர்வீர்கள். கழிப்பறைக்குப் போய்விட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைப்பீர்கள். உன் தூக்கம் கெடக்கூடாது என்பதற்காக மனம் செய்த ஏற்பாடு இது. இரவு, பகலாக உங்களது ஆசைகளைப் பூர்த்தி செய்ய மனம் ஏற்பாடு செய்து கொண்டேயிருக்கும்.
இந்த மனிதன் பக்கவாதம் வந்து கீழே விழுந்தான். இப்போது நாம் அவனுக்கு சிகிச்சை அளிக்க முயலுகிறோம். ஆனால் உண்மையில் இந்த மருந்து அவனுக்குக் கெடுதலையே செய்யும். காரணம் அவனுக்கு வாத நோயில்லை; அவனாக வரவழைத்துக் கொண்டான். அவனுடைய வாதத்திற்கு சிகிச்சை அளித்தால் கூட அவன் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நோயை வரவழைத்துக் கொள்வான். உண்மையில் சந்தைக்குப் போகிற தைரியத்தை வரவழைத்துக் கொள்ளாத வரையில் அவனுக்கு ஒரு நோயில்லாவிட்டாலும் இன்னொன்று வந்து சேரும். அவன் நோய்வாய்ப்பட்டவுடனேயே, நிலைமைகள் மாறிவிடும் என்பதை உணர்கிறான். அதனால் இப்போது அவன் திவாலாவதற்கு ஒரு நியாயம் கிடைத்து விட்டது. என்னால் என்ன செய்ய முடியும்? நான் முடமாகி விட்டேனே! இப்படித் தன் கடன்காரர்களுக்கு சொல்லிவிட முடியும். ‘நான் எப்படிக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியும்? என் நிலைமையைப் பார்த்தாயா இல்லையா?’ உண்மையில் அவன் நிலைமையைக் கண்டவுடன் கடன் கொடுத்தவருக்குப் பணத்தைக் கேட்கக் கூச்சமாக இருக்கும். அவன் மனைவி இன்னும் அதிக அக்கறையோடு அவனைப் பார்த்துக் கொள்வாள். குழந்தைகள் அதிகப்படியாகக் கவனித்துக் கொள்ளும். அவன் நண்பர்கள் வந்து பார்ப்பார்கள். மக்கள் அவன் படுக்கையைச் சூழ்ந்து கொள்வார்கள்.
யதார்த்தத்தில், ஒருவர் நோய்வாய்ப்பட்டாலொழிய நாம் நமது அன்பை ஒருவரிடத்தில் காட்டுவதில்லை. யாரெல்லாம் நேசிக்கப்பட வேண்டுமோ அவர் நோயில் விழ வேண்டும். பெண்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். இதற்கு முக்கிய காரணமே அன்பைப் பெறுகிற வழி இது. புருஸனை வீட்டில் வைத்திருக்க வேறு வழியே கிடையாது என்பது அவர்களுக்கு தெரியும். மனைவியால் அவனை வீட்டில் கட்டிப்போட முடியாது. நோயினால் முடியும். இதை ஒரு முறை உணர்ந்து கொண்டு அதை மனதில் பதிய வைத்துக் கொண்டால், பிறகு எப்போதெல்லாம் அனுதாபம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நோயில் விழலாம். உண்மையில் ஒரு நோயாளி மீத அனுதாபம் காட்டுவது ஆபத்தானது. காரணம் அனுதாபத்தின் மூலம் அவரது நோய்க்கு அலங்காரம் செய்கிறீர்கள். மாறாக அவருக்கு சிகிச்சையைத் தான் காட்ட வேண்டும்.
பக்கவாதம் வந்துள்ள இந்த மனிதனை எந்த மருந்தும் குணப்படுத்த முடியாது. அதிகபட்சம் நோயை வேண்டுமானால் மாற்றிக் கொண்டிருப்பான். காரணம் உண்மையில் அவனுக்கு நோயில்லை. அது ஓர் ஆழமான தானியங்கி யோசனை. பக்கவாதம் என்பது மனதிலிருந்து கிளம்பியது.
இதே போல்தான் இன்னொரு மனிதனின் கதை. அவனுக்கும் வாத நோய். இரண்டு வருடங்களாக நோயில் அவதிப்படுகிறான். எழுந்திருக்கக் கூட முடியாது. ஒரு நாள் அவன் வீடு தீ பிடித்துக் கொண்டது. எல்லோரும் வெளியே ஓடினார்கள். திடீரென்று பதறிப்போய் நோயிலிருந்த அந்த மனிதனுக்கு என்ன ஆகுமோ என்று பயந்தார்கள். ஆனால், அவன் வெளியே வருவதைக் கண்டார்கள். அதுவும் ஓடி வந்தான். இந்த மனிதனால் இதற்கு முன் உட்காரக் கூட முடியவில்லை. அவனால் நடக்க முடிந்ததைக் குடும்பத்தினர் உணர்த்தினார்கள். அதற்குச் சாத்தியமேயில்லை என்று சொல்லியபடியே அங்கேயே விழுந்தான்.
இந்த மனிதனுக்கு என்ன ஆயிற்று? அவன் யாரையும் முட்டாளாக்கவில்லை. அவனது நோய் மனம் தொடர்புடையது; உடல் தொடர்புடையதல்ல. அதுதான் ஒரே வித்யாசம். அதனால்தான் ஒரு மருத்துவர் நோயாளியிடம் உன் நோய் மனம் சம்பந்தப்பட்டது என்று சொன்னால் அதை நோயாளி விரும்புவதில்லை. காரணம் அவனுக்குத் தேவையில்லாமல் ஏதோ நோயிருப்பதாகச் சொல்வதாக நினைக்கிறான். இது சரியல்ல. காரணமேயில்லாமல் நோயிருப்பதாகச் சொல்வதை யாருமே விரும்புவதில்லை. நோயில் விழுவதற்கு மன ரீதியான காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்கள் உடல் ரீதியாக நோயில் விழுவதற்கான காரணத்தை விட முக்கியமானதாக அல்லது அதி முக்கியமானதாகக் கூட இருக்கலாம். மருத்துவரின் பங்கில் ஒருவர் மன நோயில் இருப்பதாகச் சொல்வதே கூட ஒரு தவறான சிகிச்சையாக இருக்கலாம். இப்படி சொல்வதனால் நோயாளிக்குத் திருப்தியில்லை. உண்மையில் அந்த மருத்துவரிடம் அந்த நோயாளிக்கு கசப்பே ஏற்படும்.
இதுவரையில் மனம் தொடர்புடைய நோய் குறித்து நமக்கு ஒரு கனிவான அணுகுமுறையை வளர்க்கவில்லை. எனக்குக் காலில் அடிபட்டால் எல்லோரும் அனுதாபப்படுவார்கள். ஆனால் என் மனம் காயப்பட்டால் எனக்கு ஏதோ மனோவியாதி என்றுதான் சொல்வார்கள். ஏதோ நான் தவறு செய்வதாகவே நினைப்பார்கள். என் காலில் அடிபட்டால் எனக்கு அனுதாபம் கிடைக்கும். ஆனால் அதுவே மனம் தொடர்பான நோயாக இருந்தால், என் தவறு என்று குறை சொல்வார்கள். இல்லை, அது என் தவறில்லை.
மனம் தொடர்புடைய நோய்களுக்குத் தனியாக ஓர் இடம் உண்டு. ஆனால் மருத்துவர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. இந்தத் தயக்கத்திற்குக் காரணம், அவர்களிடம் உடல் தொடர்புடைய நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை இருக்கிறது. வேறு எந்தக் காரணமுமில்லை. ‘அது அவருக்கு அப்பாற்பட்டது. அதனால் அது ஒரு நோயே இல்லை’ என்கிறார்கள். உண்மையில் அது என் எல்லைக்கு அப்பாற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வேறு மருத்துவரைப் பார்க்க உங்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். இந்த நபருக்கு சிகிச்சை உள்ளேயிருந்து துவங்கி பிறகுதான் வெளியே வரவேண்டும். ஒரு சின்ன விடயம் அவனது உள் வாழ்க்கையை மாற்றிவிடக்கூடும்.
என்னைப் பொறுத்தவரையில் தியானம் என்பது உள்ளேயிருந்து வெளியே பரவக்கூடிய ஒரு சிகிச்சை.
ஒருநாள் யாரோ புத்தரிடம் சென்று கேட்டார்கள், ‘நீங்கள் யார்? நீங்கள் ஒரு தத்துவஞானியா, அல்லது ஒரு சிந்தனாவாதியா, துறவியா, யோகியா?’ புத்தர் சொன்னார், ‘காயம் ஆற்றுபவன், மருத்துவன்’(HEALER) என்றார்.
அவருடைய இந்தப் பதில் அற்புதமானது. காயமாற்றுபவன். எனக்கு உள் நோய்களைப் பற்றித் தெரியும். அதனால்தான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இதைப் புரிந்து கொள்கிற சமயத்தில் இந்த மனம் தொடர்புடைய நோய்க்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். காரணம் உடல் தொடர்புடைய நோய்களை முற்றிலும் நம்மால் அகற்றிவிட முடியாது. அப்படிச் செய்கிற நாளில் மதமும், விஞ்ஞானமும் நெருக்கமாகிவிடும். அந்த நாளில் மருந்தும், தியானமும் அருகில் வந்துவிட்டதை பார்ப்போம். நான் புரிந்து கொண்ட வரையில் மருந்தைத் தவிர விஞ்ஞானத்தின் எந்தப் பிரிவும் இந்த இடைவெளியே நிரப்பாது.
வேதியியல் மதத்தின் அருகே வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதேபோல் இயற்பியலோ, கணிதமோ மதத்தின் அருகே வருவதற்கு இதுவரையில் எந்தக் காரணமும் இல்லை. மதமில்லாமல் கணிதம் பிழைத்துக் கொள்ளும். எப்பொழுதும் அது அப்படித்தான் இருக்கும். கணிதத்திற்கு மதத்தின் உதவி தேவை என்கிற நிலை இன்னும் உருவாகியிருப்பதாக நான் நினைக்கவில்லை. மதம் இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்று கணிதம் நினைக்கக்கூடிய தருணம் வந்துவிட்டதாகவும் நினைக்கவில்லை. அந்த நாள் வரவே கூடாது. காலாகாலத்திற்கும் கணிதம் தன் விளையாட்டை நடத்திக் கொண்டேயிருக்கும். காரணம் கணிதம் ஒரு விளையாட்டு, அது வாழ்க்கை இல்லை.
ஆனால் மருத்துவர் என்பவர் அப்படியில்லை. அவர் விளையாடவும் செய்கிறார்; அதே சமயம் வாழ்க்கையையும் கையாளுகிறார். அனேகமாக மருத்துவர்தான் மதத்தையும் விஞ்ஞானத்தையும் இணைக்கும் முதல் பாலமாக இருப்பார். உண்மையில் இது நடக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக- வளர்ந்த, புரிந்து கொண்ட நாடுகளில் நடக்கத் துவங்கிவிட்டது. காரணம் மருத்துவர்கள்தான் மனித உயிர்களோடு தொடர்புடையவர்கள். சாவதற்கு முன் கார்ல் கஸ்டல் ஜங் இதைத்தான் சொன்னார். நான் ஒரு மருத்துவனாக இருப்பதால், நான் சொல்கிறேன் நாற்பதுக்கு மேல் என்னிடம் வருகிற நோயாளிகளுக்கு அடிப்படையான நோயே மதமில்லாததுதான். இது ஒரு வியப்பான வி~யம். எப்படியாவது நம்மால் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகை மதத்தை கொடுக்க முடியுமென்றால் அவர்கள் ஆரோக்யமாகிவிடுவார்கள்.
இதைப் புரிந்து கொள்வது நல்லது. ஒரு மனிதனின் வாழ்க்கை கீழே விழும்போது- முப்பத்தைந்து வரை அது வளர்கிறது. பிறகு அது கீழே இறங்கத் துவங்குகிறது. முப்பத்தைந்துதான் உச்சம். முப்பத்தைந்து வயது வரை ஒரு மனிதனுக்கு தியானத்தின் மதிப்பு தெரியாமல் இருக்கலாம். காரணம் அதுவரையில் அவன் உடல் சார்ந்தவன். பு~;டியாகவே இருப்பான். அந்தச் சமயத்தில் எல்லா நோய்களும் உடல் ரீதியானது. ஆனால் முப்பத்தைந்து வயதுக்கு மேல் நோய் ஒரு புதிய கோணத்தில் திரும்பும். காரணம் இப்போது வாழ்க்கை மரணத்தை நோக்கி நகரத் துவங்கிவிட்டது. வாழ்க்கை வளரும்போது அது வெளியே பரவத் துவங்குகிறது. மனிதன் இறக்கும்போது அவன் உள் ரீதியாகவே சுருங்கிப் போகிறான். வயோதிகம் உள் வழியாகவே சுருங்க வேண்டும். வயதானவர்களின் எல்லா நோய்களுமே மரணத்தின்போது உள்ளே வேர்களில்தான் இருக்கும்.
வழக்கமாக இந்தந்த நபர் இன்னின்ன நோயினால் இறந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால் மரணத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். என்ன நடக்கிறது என்றால் சாகிற சாத்தியமிருப்பதால், எல்லா நோய்களுக்கும் அவர் வளைந்து கொடுக்கிறார். தான் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று உணரும்போது பல்வேறு நோய்களுக்கு எல்லாக் கதவுகளும் திறக்கின்றன. அவனும் அதைப் பிடித்துக் கொள்கிறான். ஆரோக்யமான மனிதன் கூட மரணம் நிச்சயம் என்று உணர்ந்தவுடன் நோயில் விழுகிறான். எல்லாமே சரியாக இருந்தன. எல்லா மருத்துவ அறிக்கைகளும் சாதாரணமாகவே இருந்தன. எக்ஸ்ரே கூட சரியாகத்தான் இருந்தது. நாடித்துடிப்பும் சரியாகவே இருந்தது. மருத்துவரின் இதயத் துடிப்புமானி கூட எல்லாமே சரியாக இருப்பதாகவே நோயாளியிடம் சொன்னது. ஆனால் நாளை சாகப்போகிறோம் என்று முழுமையாக அந்த நபர் உணர்ந்துவிட்டால் அவர் பல்வகையான நோய்களைப் பிடித்துக் கொள்வதை நீங்கள் பார்ப்பீர்கள். இருபத்து நாலு ஜென்மங்களில் கூட பிடித்துக் கொள்ள முடியாததை இருபத்து நாலு மணி நேரத்தில் பிடித்துக் கொள்வார். இந்த மனிதனுக்கு என்ன ஆயிற்று? தன்னை ஏன் எல்லா நோய்களுக்கும் திறந்து வைத்துக் கொண்டான். மரணம் நிச்சயம் என்றதும் எதிப்பதை அவன் நிறுத்திவிட்டான். அவன் உணர்வை விட்டு நகர்ந்து விட்டான். அதுதான் எல்லா நோய்களுக்கும் எதிரான ஒரு தடுப்புச் சுவராக, ஒரு தடையாக இருந்தது. இப்போது அவன் மரணத்திற்குத் தயாராகிவிட்டான். அதனால் நோய்கள் வரத்துவங்கி விட்டன. அதனால்தான் ஓய்வு பெற்ற மனிதன் விரைவில் செத்துப் போகிறான்.
அதனால் ஓய்வு பெற விரும்புகிறவர்கள் எல்லோரும் ஓய்வு பெறுவதற்கு முன் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த ஐந்து அல்லது ஆறு வருடங்களில் செத்துப் போகிறார்கள். எழுபது வயதில் செத்துப் போயிருக்க வேண்டியவர் அறுபத்து ஐந்து வயதிலேயே செத்துப் போகிறார். எண்பது வயதில் செத்துப் போகிறவர் எழுபத்து ஐந்தில் செத்துப் போகிறார். ஓய்வு பெற்ற அடுத்த பத்து அல்லது பதினைந்து வருடங்கள் மரணத்திற்கு தயார் செய்வதிலேயே முடிந்துவிடும். வேறு எதையுமே சாதிக்க மாட்டார். காரணம் வாழ்க்கையில்தான் பயனற்றதாகிவிட்டது அவருக்குத் தெரியும். அவருக்கு வேலையில்லை. சாலையில் யாரும் அவருக்குக் காலை வணக்கம் சொல்வதில்லை.
அவர் அலுவலகத்தில் இருந்தபோது வேறு மாதிரி இருந்தது. இப்போது யாரும் அவரைப் பார்ப்பதில்லை. காரணம் இப்போது அவர்கள் வேறு யாருக்கோ வணக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. எல்லாமே பொருளாதார அடிப்படையில்தான் இயங்குகின்றன. புதிய மனிதர்கள் அலுவலகத்தில் வந்துவிட்டார்கள். இப்போது அவர்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு இந்த மனிதனுக்கு வணக்கம் சொல்ல நேரமில்லை. அவர்கள் இவரை மறந்துவிடுவார்கள். இப்போது திடீரென்று தான் பயனற்றுவிட்டதாக உணரத் துவங்கிவிட்டார்.தான் வேரோடு பிடுங்கி எறியப்பட்டதாக உணர்கிறார். அவரால் யாருக்கும் பயனில்லை. குழந்தைகள் கூட அவர்களுடைய மனைவிகளோடு நேரம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவுக்குப் போகிறார்கள். அவருக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் மெதுவாக சுடுகாட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர் தேவைப்பட்ட மனிதர்களுக்குக் கூட அவர் இப்போது பயனற்றுப் போய்விட்டார். திடீரென்று வளையத் துவங்கிவிட்டார். மரணத்திற்காகத் தன்னைத் திறந்து வைக்கிறார். எப்போது மனிதனுடைய உள்ளுணர்வு உள்ளே ஆரோக்யமாக இருக்கிறது? முதலில் அவன் உள் உணர்வு இருப்பதை உணரும்போது. வழக்கமாக உள்ளிருப்பதை நாம் உணருவதில்லை. நம் கவலையெல்லாம் உடல், கை, கால், தலை, இதயத்தைப் பற்றித்தான் ‘நான்’ என்கிற எண்ணமே இல்லை. நம் முழு கவனமும் வீட்டின் மீதுதான், அதில் வசிப்பவரிடமில்லை.
இது ஓர் ஆபத்தான சந்தர்ப்பம். காரணம் நாளை என் வீடு இடியத் துவங்கியதும் நான் விழுவதைப்போல உணர்கிறேன். அதுவே என்னுடைய நோயாகிவிடுகிறது. ஆனால் என் வீட்டை விட நான் வேறுபட்டவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் அங்கே வசிப்பவன் அவ்வளவுதான். பிறகு வீடு இடிந்தால் கூட நான் இருப்பேன். பிறகு அது ஒரு பெரிய மாறுதலைக் கொடுக்கும். அதுதான் அடிப்படை மாறுதல். பிறகு மரணத்தைக் குறித்த பயம் விலகிவிடும்.
தியானம் இல்லாமல் மரணம் குறித்த பயம் விலகாது. அதனால் தியானத்தின் முதல் அர்த்தமே தன்னைத் தெரிந்து கொள்வதுதான். நாம் உள்ளுணர்வோடு இருக்கிற வரையில், நம் உள்ளுணர்வு எதையோ பற்றி விழிப்போடு இருக்கும். தன்னைப் பற்றியே நினைக்காது. அதனால்தான் நாம் தனியாக இருக்கும்போது நமக்குத் தூக்கம் வருகிற உணர்வு வருகிறது. காரணம் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு நாளிதழை படிக்கும்போதோ, வானொலி கேட்கும்போதோ நாம் விழித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறோம். ஒரு மனிதனை ஒரு இருட்டறையில் தனியாக விட்டால் அவனுக்குத் தூக்கம் வரும். காரணம் நீ எதையும் பார்க்க முடியாது. உன் உள்ளுணர்வு உனக்குத் தேவையில்லை. எதையுமே பார்க்க முடியாத போது தூங்குவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? வேறு தீர்வே கிடையாது. தனியாக, இருட்டறையில் நீ தனியாக இருக்கிறாய். பேசுவதற்கு யாருமே இல்லை. யோசிக்க எதுவுமில்லை. உடனே தூக்கம் உன்னை தழுவிக் கொள்ளும்.
ஒரு வகையில் தூக்கமும் தியானமும் ஒரே மாதிரிதான். இன்னொரு வகையில் வேறு மாதிரி. தூக்கம் என்றால் நீங்கள் ஒரு வித மயக்கத்தில் இருப்பதாக அர்த்தம். தியானம் என்றால் நீ தனியாக இருக்கிறாய். ஆனால் விழிப்போடு இருக்கிறாய். அதுதான் ஒரே வேறுபாடு. உன்னைப்பற்றிய விழிப்போடு நீங்கள் தனியாக இருந்தால்…
ஒரு நாள் புத்தருடன் இருந்த ஒருவன் கால்களை ஆட்டிக் கொண்டிருந்தான். புத்தர் கேட்டார் ‘ஏன் கால்களை ஆட்டுகிறாய்?’
அவன் பதில் சொன்னான், ‘மறந்து விட்டேன். அது தானாக அசைந்தது. நான் அதைக் கவனிக்கக் கூட இல்லை.’
புத்தர் சொன்னார், ‘உன் கால் ஆடுகிறது. ஆனால் உனக்கே தெரியவில்லை. அது யாருடைய கால்? உன்னுடையது.’
அந்த மனிதன், ‘என் கால்கள்தான். ஆனால் நீங்கள் ஏன் உங்கள் உரையிலிருந்து விலகிவிட்டீர்கள்? தொடருங்கள்’ என்றான்.
புத்தர் சொன்னார், ‘நான் என் உரையைத் தொடரமாட்டேன். காரணம் நான் பேசிக்கொண்டிருக்கும் மனிதன் மயக்கத்தில் இருக்கிறான். எதிர்காலத்தில் உன் அசைவுகளைப் பற்றிய விழிப்புணர்வோடு இரு. நான் உனக்கு இரட்டை விழிப்புணர்வு கொடுப்பேன். காலின் அசைவைப் பற்றிய விழிப்புணர்வு வரும்போது அதைக் கவனிப்பவரின் விழிப்புணர்வும் பிறப்பெடுக்கும்.
விழிப்புணர்வு என்பது இரு முனைகளைக் கொண்டது. அதைப் பரிசோதித்துப் பார்த்தால் ஒரு பக்கம் அது வெளி நோக்கி இருக்கும் இன்னொரு பக்கம் அது உன்னை ஊடுருவும். அதனால் தியானத்தின் அடிப்படையே நாம் நம் உடலையும், நம்மையும் பற்றிய விழிப்படையத் துவங்குவோம். இந்த விழிப்புணர்வு வளர்ந்தால் மரண பயம் மறைந்துவிடும்.
மனிதனை மரண பயத்திலிருந்து விடுவிக்காத மருந்துவிஞ்ஞானம்(MEDICAL SCIENCE) மனிதன் என்கிற நோயைக் குணப்படுத்தவே முடியாது. மருந்து விஞ்ஞானம் மனிதனின் வாழ்க்கை நாட்களை அதிகரிக்கவே முயல்கிறது… ஆனால் வாழ்க்கை நாட்களை அதிகப்படுத்துவதன் மூலம் மரணத்திற்கான காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது என்பதைத் தவிர வேறு இல்லை. அதிக நாட்கள் காத்திருப்பதை விட குறைந்த நாட்கள் காத்திருப்பதே நல்லது. வாழ்க்கை நாட்களை அதிகரிப்பதன் மூலமாக மரணத்தை மேலும் பரிதாபத்திற்குரியதாக்குகிறோம்.
உங்களுக்குத் தெரியுமா? மனிதனின் வாழ்க்கையை அதிகரிக்கச் செய்கிற மருத்துவ விஞ்ஞான நாடுகளில் ஓர் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாகிற உரிமை. ஆங்கிலத்தில் அதற்குப் பெயர் Euthanasia. வயதானவர்கள் தாங்கள் சாகிற உரிமையை அரசியல் சட்டத்தில் கொண்டுவர வேண்டுமென்கிறார்கள். மருத்துவமனையில் அவர்களின் மரணத்தை பிடித்து வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கை கொடுமையானதாக ஆக்குவதாகக் கருதுகிறார்கள். அது சாத்தியம்தான். ஒரு மனிதனின் பிராண வாயுவை வைத்து அவனது மரணத்தை முடிவில்லாமல் தொங்க வைக்கலாம். அவனை உயிருடன் வைக்கலாம். ஆனால் அது மரணத்தை விட கொடுமையானது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எத்தனை மனிதர்களை மருத்துவமனைகளில் தலைகீழாகவும், அ~;ட கோணலாகவும் எத்தனை பேர்களை வைத்திருக்கிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். பலரை பிராண வாயுதான் கட்டிக் காக்கிறது. சாகிற உரிமை அவர்களுக்கில்லை. அந்த உரிமையைக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் புரிந்து கொண்டவரையில் இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகத்தில் வளர்ந்த நாடுகள் பலவற்றில் மனிதனுக்கு சாகிற உரிமை அரசியல் சட்ட உரிமையாகிவிடும். காரணம் ஒரு மனிதனின் விருப்பத்திற்கு எதிராக ஒரு மனிதனை வைத்துக் கொண்டிருக்கிற உரிமை மருத்துவர்களுக்குக் கிடையாது.
ஒரு மனிதனின் வயதைக் கூட்டுவதன் மூலமாக அவனிடமுள்ள மரண பயத்தைப் போக்கி விடமுடியாது. ஒரு மனிதனை ஆரோக்யமாக வைத்திருப்பதன் மூலம் அவனது வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக ஆக்கிவிட முடியும். ஆனால் பயமில்லாமல் செய்யாது. பயமற்ற தன்மை ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான் வரும். அதாவது, ஒருவர் தனக்குள்ளிருக்கும் ஒன்று எப்போதும் இறக்காது என்பதை அவர் தன் உள்ளிருந்து புரிந்து கொள்ளும்போதுதான். இந்தப் புரிதல் மிகவும் அவசியம்.
இறவாத் தன்மையை உணருவதுதான் தியானம் அதாவது எனக்குள் இருப்பது இறக்காது. அதனால்தான் உங்கள் உடலுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அதன் மூலமாக, அது வாழ்கிற வரையில் சந்தோஸமாக வாழும். அதேசமயம் உங்களுக்குள்ளிருப்பதை அறிந்து, மரணம் உங்கள் வாசலில் வந்து நின்றால் கூட நீங்கள் பயப்படப் போவதில்லை. அந்த உள்புரிதல்தான் பயமற்ற தன்மை.
தியானம் என்பது உள்ளிருந்து, தியானம் என்பது வெளியே இருந்து. பிறகு நீங்கள் மருத்துவ விஞ்ஞானத்தை, ஒரு முழுமையான விஞ்ஞானமாக ஆக்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில், தியானமும், மருந்தும் ஒரே விஞ்ஞானத்தின் இரு முனைகள். அவற்றை இணைக்கும் தொடர்புதான் காணவில்லை. இப்போது மெதுவாக, மெதுவாக அவை ஒன்றுக்கொன்று நெருங்கி வருகிறது. இன்றைக்கு, அமெரிக்காவில் பல பெரிய மருத்துவமனைகளில், ஒரு வசியக்காரர், hypnotist அவசியமாகி விட்டார். ஆனால் வசியம் என்பது தியானமல்ல. ஆனாலும், இது நல்ல துவக்கம். மனிதனின் உணர்வுகளுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்கிற புரிதல் இருப்பதையே இது காட்டுகிறது. அதாவது, உடலுக்கு மட்டும் சிகிச்சை அளித்தல் போதாது என்பதை!
நான் நினைக்கிறேன், இன்று ஒரு வசியக்காரர் மருத்துவமனைக்குள் நுழைந்தால் நாளை ஒரு கோயிலே நுழையும். சற்றுத் தாமதமாக வரும். எப்போதாவது வரும். ஆனால் அதற்கு நேரமாகும். பிறகு வசியக்காரருக்குப் பின், ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு யோகாதியான இலாக்கா இருக்கும். அது நடக்க வேண்டும். பிறகு நம்மால் மனிதனுக்கு முழுமையாக சிகிச்சை அளிக்க முடியும். உடலை மருத்துவர்கள் கவனித்துக் கொள்வார்கள். மனதை, மனோதத்துவ நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆன்மாவை, யோகாவும், தியானமும் பார்த்துக் கொள்ளும். மனிதனை முழுமையாக மருத்துவமனைகள் ஏற்றுக் கொள்கிற நாளில், மொத்தமாக, பிறகு அவனுக்கு அப்படியே சிகிச்சை அளித்தால், அதுதான் மனித இனத்திற்கு மகிழ்ச்சியான நாள். அந்தக் கோணத்தில் யோசியுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன். அதன் மூலமாக அந்த நாள் விரைவில் வரட்டும்.
அன்பாகவும், அமைதியாகவும் என் பேச்சைக் கேட்டதற்கு நான் நன்றி பாராட்டுகிறேன். இறுதியாக உங்களுக்குள்ளிருக்கும் கடவுளை வணங்குகிறேன். என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஓஷோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக