செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கரும்புள்ளிகள் காணாமல் போனது





பெண். வயது. 36
இவருக்கு வலது மேற்கையில் வலி.  உடம்பில் கருப்பு கட்டி கட்டியாக இருக்கும் இடங்களில் எல்லாம் கடுமையான வலி.  குறுக்கு வலி மற்றும் புட்டம் பகுதியில் வலி.
``உங்களுக்கு இந்த நோய் எப்ப வந்தது?’’
`` ஐந்து வருடமாக இருக்கிறது’’
``முதலில் எது வந்தது?’’
``முதலில் குறுக்கு வலி வந்தது.  நரம்பை அழுத்துவதால் வந்தாகச் சொன்னார்கள்.  பிறகு மேற்கை வலி வந்தது.  குறுக்கு வலி நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் வரும்.  உட்கார்ந்து எழும்போதும் வரும்.  கை வலி கை தூக்கினால் வருது’’.
``என்ன மருத்துவம் பார்த்தீர்கள்?’’
``பல இடத்தில் பார்த்தோம்.  தண்டுவட நரம்பு அழுத்துவதால் வலி இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.  ஊசி போட்டு மருந்து சாப்பிட்டால் வலி குறையுது.  மருந்தை இரண்டு நாட்களுக்கு நிறுத்தினால் கூட வலி கூடிவிடுகிறது’’.  மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பில் கரும்புள்ளிகள் வந்து விட்டது.  இப்ப அந்த இடத்தில் எல்லாம் கடுமையான வலி வருது.
இந்தத் துயரர் அலோபதி மற்றும் சித்த மருத்துவம், அக்குபஞ்சர் முதலிய மருத்துவம் பார்த்துள்ளார்.
``உங்களுக்கு வலி வந்து ஐந்து வருஷமாச்சு.  ஐந்து வருடங்களுக்கு முன் உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்க’’.
``இப்ப எங்க வாழ்க்கை நன்றாகத்தான்  இருக்கிறது’’
``நான் இப்ப கேட்கலை, ஐந்து வருடங்களுக்கு முன் எப்படி இருந்தீர்கள்’’.
``அதெல்லாம் 10 வருடத்திற்கு முன் நடந்தது.  அதெல்லாம் இப்ப ஒன்றுமில்லை’’.
``பத்து வருடத்திற்கு முன் என்ன நடந்து?’’.
``சார் 10 வருடத்திற்கு முன் பிஸினஸ் பண்ணினோம்.  பிஸினஸ் நஷ்டமாயிடுச்சு.  கையிலுள்ள பணமும் போயிடுச்சு.  கடன் வாங்கிய பணம் 30 லட்சம் மேல் பணம் போச்சு.  வாங்கிய கடனுக்கு சொத்தை விற்றுக் கொடுத்தோம்’’
`` பிஸினஸ் நஷ்டமாச்சு, பணம்போச்சு’’ அதனால என்ன ஃபீல்   பண்ணினீர்கள்?
``கௌரவம் போச்சுன்னு பீல் பண்ணினீர்களா?’’
``இல்லை.  அதுதான் சொத்தை வித்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டோம்.  ஆனால் நல்லா இருந்திட்டு மட்டமாகப் போய்விட்டோம்.  அதுதான் கவலை, அசிங்கமா போச்சு’’

அவர்கள் சொன்ன விஷயத்திலிருந்து ஒன்று புரிந்தது.  அவர்கள் தொழில் போனது கவலை இல்லை.  பணம் போனது கூட அவ்வளவு பாதிக்கவில்லை.  ஆனால் அவர்கள் நிலை தாழ்ந்து போச்சு. அதனால் அசிங்கமாகப் போச்சு.
மேற்கூறிய அவர்கள் கூற்றிலிருந்து கீழ்கண்ட குறிகள் தருவிக்கப்பட்டன.
MIND - AILMENTS FROM - business failure 
MIND - AILMENTS FROM - money; from losing
MIND - AILMENTS FROM - position; loss of
MIND - DELUSIONS - insulted, he is

மேற்சொன்ன குறிகளின் அடிப்படையில்  nux vomica 1M   - 2 வேளை மருந்தும் மருந்தில்லா மருந்து 1 மாதத்திற்கும் கொடுக்கப்பட்டது.
ஒரு மாதம் சென்று வரும்போது அவர்களுக்கு 90% குணமாகியிருந்தது. 
பின்பு மறுபடியும் தொடர் மருந்து மேலும் ஒரு மாதத்திற்குக் கொடுக்கப்பட்டது.
உடலில் இருந்த கரும்புள்ளிகளும் காணாமல் போனது மட்டுமில்லாமல் தற்போது எந்த வலியுமில்லை.
அவர் முற்றிலுமாகக் குணமாகி வரும்போது அவர்களுடைய இரண்டு மகன்களையும் வைத்தியத்திற்கு அழைத்து வந்தார்.


மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-10
பழ.வெள்ளைச்சாமி
தொடரும்.....

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

பச்சைத்துரோகமும் மூட்டுவலியும்




ஆண்  வயது 62
(RHEUMATISM) எல்லா ஜாயின்டுகளிலும் வலி.  தோள்பட்டையில் தொடங்கி, பாதம் கணுக்கால் வரை வலி.
``சொல்லுங்க என்ன பண்ணுது என்று சொல்லுங்க’’
மூட்டுக்கு மூட்டு வலி.  எல்லா மூட்டிலும் வலி.
``எவ்வளவு நாட்களாக இருக்கிறது?’’
``இரண்டு வருடங்களாக உள்ளது’’
``காலையில் எழுந்திருக்க முடியலை. உட்கார்ந்து எழுந்திருக்க முடியலை வலி.  கொஞ்சம் மதியமானால் வலி குறையுது.  குளிர்ந்த காற்று பட்டால் அதிகம் வலி’’.
``இரண்டு வருடங்களாக எவ்வளவோ வைத்தியம் பார்த்தோம்.  ஆஸ்பத்திரி வைத்தியம் தான் பார்க்கப்பட்டது.  அவங்க மருந்து கொடுத்தால் இரண்டு நாளைக்கு நல்லாயிருக்கு.  அப்புறம் வலிதான்.  இரண்டு வருடமாக படாதபாடுபட்டுப் போனேன்.’’
``இதற்கு முன்பு, இரண்டு வருடத்திற்கு முன்பு வேறு என்ன நோய் வந்தது.’’
``சார் காய்ச்சலுக்குக் கூட ஊசி போட்டதில்லை.  பெருசா சொல்கிற மாதிரி எந்த நோயும் வரலை.’’
``அப்ப எதனால வந்திருக்கும்னு நினைக்கிறீர்கள்?’’
``தெரியலை’’
நல்லா யோசிங்க.  ``மழையில் நனைந்த பின்பு வந்தது.  வியர்வையோடு குளிச்ச பின்பு வந்தது, இது சாப்பிட்ட பிறகு வந்தது’’ என்று ஏதாவது காரணம் இருக்கான்னு சொல்லுங்க.  இல்ல உங்க வாழ்க்கையில் இரண்டு வருடத்திற்கு முன் மனம் பாதித்த விஷயம் ஏதுவும் இருக்கா என்று கவனமாகச் சொல்லுங்க’’
``அப்படி ஒன்றும் நடக்கலை சார்.  இப்ப நல்லா இருக்கேன் சார்.’’
``இப்ப நல்லா இருக்கலாம்.  ஆனால் இரண்டு வருடத்திற்கு முன் ஏதாவது இழந்தது, மனதில் கடுமையாய் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் ஏதாவது இருக்கா சொல்லுங்க.’’
``சார் இப்ப எந்தப் பிரச்சனையும் இல்லை``
``இப்ப இல்லை அது சரி, இரண்டு வருடத்திற்கு முன் ஏதாவது பாதிப்பு’’
``அப்படின்னா, நான்கு வருடங்களுக்கு முன் முக்கியமான சம்பவம் நடந்தது’’
``அது என்ன?’’
சார் எனக்கு இரண்டு பொம்பளைப் பிள்ளைகள்.  ஒன்னு +2 படித்தது.  ஒன்னு 10-வது படித்தது.  அதனால் எங்க கிராமத்தை விட்டு திண்டுக்கல் குடியேறி விட்டோம்.  எங்க ஊர் திண்டுக்கல்லில் இருந்து 25 கிமீ இருக்கும்.  அப்ப எங்களுக்குக் கிணறு, தோட்டம் எல்லாம்  இருந்தது.  அப்ப, என் அண்ணன் மகன் இரண்டு பிள்ளைகளோடு கஷ்டப்படுகிறேன்,  வறுமையாக இருக்கு.  நான் கேணி, நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கிறேன்.  நீங்க வந்து கேட்கும்போது நிலத்தைக் கொடுத்து விடுகிறேன் சித்தப்பா என்று கேட்டான்.
நானும், அண்ணன் மகன் குடும்பத்தோடு கஷ்டப்படுகிறான்.  அவன்தான் ரொம்ப கேட்கிறான் என்று அவன் பொறுப்பில் நிலத்தை விட்டு நானும் திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டேன்.
``அப்புறம் என்ன நடந்தது?’’
நான் பிள்ளைகள் படிப்பு முடிந்து மூன்று வருடம் சென்று நான் கிராமத்துக்குப் போய் அவன் கிட்ட நிலத்தை விடு நான்  பயிர் பண்ணிக்கிறேன் என்று கேட்டேன்.
அதற்கு அவன் ``என்ன சித்தப்பா கிண்டல் பண்ணுறீங்க.  எங்க வீட்டில இரண்டு பொட்டப் பிள்ளைகளை வைச்சிருக்கேன்.  ஏன் ரொம்ப ஆசைப்படறீங்க  நிலமும் கிடையாது ஒன்னும் கிடையாது’’ என்று சொல்லிவிட்டான்.
``திருட்டுப்பயல், பாவம் கஷ்டப்படறானேன்னு கொடுக்கப் போக  நமக்கே துரோகம் பண்ணிவிட்டானே என்று ரொம்ப கோபப்பட்டேன்.  அவனைக் கொன்றுவிடலாம் என்று கூட நினைத்தேன்.  பிறகு அடிதடி வந்தது.  பஞ்சாயம் வைத்து போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் கடைசியில் ஆறுமாதமாக படாதபாடுபட்டு அந்த நிலத்தை அவன்கிட்டயிருந்து வாங்க வேண்டியதாயிற்று.’’
``நீங்க என்ன நினைத்தீர்கள்?’’
`` சார் இது பச்சைத் துரோகம் சார், பாவம்னு கொடுக்கப் போயி இப்படிப் பண்ணிட்டான்.  கொலை பண்ணலாம்னு இருந்தேன்.’’
இவர் கூற்றிலிருந்து சொத்து போய்விடும் என்ற பயத்தைக் காட்டிலும் துரோகம் பண்ணியது பெரிய பாதிப்பாக இருந்தது என்பதைப் புரிந்து கொண்டேன்.
இவர் பாதிக்கப்பட்ட மையத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கீழ்கண்ட குறிகள் எடுக்கப்பட்டன.
MIND - DELUSIONS - betrayed; that he is
MIND - KILL; desire to

 
மேற்கண்ட குறிகளின் அடிப்படையில்  RHUS GLABRA 200 வீரியத்தில் கொடுக்கப்பட்டது.
முதல் இரண்டு வாரத்திலே 90%   குணமாகி விட்டது.
அடுத்து 3 மாதங்களில் முற்றிலும் நலமாக்கப்பட்டார்.


மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-9
பழ.வெள்ளைச்சாமி
தொடரும்.....

சனி, 11 ஏப்ரல், 2020


மரணத்திடம் இருந்து மீண்டு வந்தவன்



ஆண் வயது 14.
(காலில் இருந்து நெஞ்சு வரை செயல் இழந்த பையன் வாய் மட்டும் பேசுகிறான்).
ஒரு நாள் காலை ஒரு பையனைத் தூக்கி வந்து மருத்துவமனை பெஞ்சில் கிடத்தினார்கள். அவன் பேச மட்டும் செய்தான். அவனுக்கு நெஞ்சிலிருந்து அடிவரை செயல் இழந்து போய்விட்டது.

``இவனுக்கு என்ன பிரச்சனை? எப்படி வந்தது?’’

நல்லாய்த்தான் இருந்தான். திடீரென்று பத்து நாட்களுக்கு முன்பு கால் நடக்க முடியவில்லை என்று சொன்னான். பின்பு கால் செயலிழந்து போய் படிப்படியாக மேல் நோக்கிச் செயலிழந்து போய் இப்போது நெஞ்சு வரை வந்துவிட்டது. நாங்கள் 10 நாட்களாக மதுரை, கோவை என்ற பல இடங்களில் பார்த்துவிட்டோம். இன்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பையனும் படிப்படியாக செயல் இழந்து போய்க் கொண்டு இருக்கிறான். இப்படியே போனால் ஹார்ட் நின்று இன்னும் சில நாட்களுக்குள் இறந்து விடுவான் என்றும், வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறிவிட்டார்கள்.
நேற்று எங்கள் ஊரில் இங்கே கொண்டு போனால் ஏதாவது செய்வார்கள் என்று கூறியதால் இங்கே வந்தோம் என்று கூறினார்.

என்ன நடந்தது. ஏன் இப்படி ஆனான் அடிபட்டதா? விழுந்து விட்டானா? வேறு என்ன காரணம்?

``வீட்டில் சும்மாத்தான் படுத்திருந்தான். காலையில் எழும்போது கால் நடக்க வரலைன்னான். பின்பு மறுநாள் முழங்கால் வரை உணர்வற்றுப் போச்சு 10 நாட்களுக்குள் படிப்படியாக நெஞ்சு வரை உணர்வற்றுப் போச்சு. எங்களுக்கு என்ன காரணம் என்று தெரியலை’’ அம்மா சொன்னார்.

``சமீபத்தில் ஏதாவது மனது பாதிக்கிறதுபோல் சம்பவம் நடந்ததா? யோசித்துப் பாருங்க’’

ஒன்னுமில்லையே……

ஆமா சார், 20 நாட்களுக்கு முன் ஊரில் ஒரு சம்பவம் நடந்துச்சு. ஊருக்கு வெளியில் உள்ள கோயிலில் இவன் பிரண்ட்ஸ் எல்லாம் உண்டியலை உடைத்து காசு திருடி வாங்கித் தின்றுவிட்டார்கள். அதனால் ஊருக்குள்ள உள்ளவங்க கூடி பிரண்ட்ஸ் இவன் எல்லோரையும் பிடிச்சு அடித்து எவன்டா உண்டியலை உடைச்சதுன்னு கேட்டாங்க. எல்லோருக்கும் அடி, இவனையும் அடித்தார்கள். ஆனால் அன்னைக்குன்னு இவன் அவர்களோடு போகவில்லை. ஆனா இவனும்தான் அதில் சேர்ந்துள்ளான் என்று பிடிச்சு அடிச்சிட்டாங்க. இவன் அவங்ககிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ‘நான் இல்லைன்னு’ ஆனா அவங்க நம்புறாப்ல இல்லை. இவனை ஊருக்கு மத்தியில அடிச்சது ரொம்ப அவமானமாப் போச்சுன்னு வருத்தப்பட்டான். அப்ப வீட்டில வந்து படுத்தவன்தான். ஒரே அழுகை, அதே கவலையா இருந்தான். நான் எப்படி ஊருக்குள்ளே போவேன் என்று சொல்லிக்கிட்டே இருந்தான். இதற்குப் பிறகுதான் இப்படி ஆயிருக்க வேணும்’’ என்று அவனுடைய அம்மா நடந்த விஷயத்தை உருக்கமாகக் கூறினார்கள்.

இப்போது எனக்குப் புரிந்தது அவமானத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். அதனாலே வீட்டை விட்டே வெளியே போகாமல் மனம் உடைந்து போய் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்துள்ளான் அதன் விளைவு ஒட்டு மொத்தமாக செயல் இழந்து விட்டான் என்று யூகித்துக் கொண்டு அவன் குடும்ப வரலாற்றை கேட்க நினைத்தேன்.

அம்மா கொஞ்சம் சொல்லுங்க ``இவன் உங்களுக்குத் தலைப்பிள்ளையா? இவன் கர்ப்பமாக இருக்கும்போது நீங்க எப்படி இருந்தீர்கள்? ஏதாவது மனப் பாதிப்பு ஏற்பட்டதா கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்க. அவர்கள் கொஞ்சம் தயங்கினார்கள். பின்பு நான் அவர்களை, உங்கள் மகன் நலமாகனும்னா நீங்க சொன்னாத்தான் நல்லது என்று வலியுறுத்திக் கூறினேன்.

சார் எனக்குக் கல்யாணம் 15 வயதில் நடந்தது. என் வீட்டுக்காரருக்கு 27 வயது. நாங்க கூலி வேலைக்குத்தான் போவோம். நான் கொஞ்சம் நல்லாய் இருப்பேன். எங்க வீட்டுக்காரர் எப்போதுமே சந்தேகப்படுவார். நான் ஒரு இடத்துக்கு வேலைக்குப் போவேன். அவர் ஒரு இடத்துக்கு வேலைக்குப் போவார். நான் எப்பவாவது லேட்டா வீட்டுக்கு வந்திட்டா ரொம்ப அசிங்க அசிங்கமாகப் பேசி எவனோடடி இருந்துட்டு வருகிறாய் என்று அவமானப்படுத்துவார். நான் ரொம்ப அவமானப்பட்டேன். சொல்லுங்க சார், கட்டின புருஷனே இப்படிக் கேட்டால் எப்படி இருக்கும். நான் அவமானத்தில் கூனிக் குறுகி போவேன். நான் அப்படிப்பட்ட ஆளில்லை என்னை அப்படி பேசாதீங்கன்னு அவர்கிட்ட அழுது கெஞ்சுவேன். ஆனால் அவர் என்னை சந்தேகப்படுவது, அடிப்பது, திட்டுவதுமாகத்தான் இருப்பார். நான் இவரோடு வாழ்வதற்கு செத்துப் போகலாம்னு நினைத்தேன். நான் வருகிற கோபத்தையெல்லாம் அடக்கி வைத்தக் கொண்டு கட்டின புருஷனே நம்ம மதிப்பைக் கெடுக்கிறானே என்று அமைதியாக இருப்பேன்.’’ இதுதான் சார் இவன் கர்ப்பமான போது என் வாழ்க்கை என்று அழுது கொண்டு கூறினார்கள்.
இப்போது அந்தப் பையனின் மனநிலை இப்படி ஆனதற்கு இவன் அம்மாவின் மனநிலை முக்கியக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இவர்கள் கூறிய விஷயங்களிலிருந்து கீழ்கண்ட குறிகளைத் தேர்வு செய்தேன்.

MIND - AILMENTS FROM - anger – suppressed
MIND - AILMENTS FROM - honor; wounded
MIND - AILMENTS FROM – mortification
MIND - DELUSIONS - insulted, he is
MIND - INDIGNATION - misdeeds of others; at the
மேற்சென்ன குறிகள் STAPHYSAGRIA என்ற மருந்தைக் குறிக்கின்றன.
அந்த மருந்தை 10 எம் வீரியத்தில் ஒரு வேளை வாயில் போட்டுவிட்டு 1 வேளை மருந்தை இரவு கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தேன்.
மறுநாள் அதிகாலையில் வேகமாக ஒருவர் ஓடிவந்தார்.

``சார் சாகக் கிடந்தவன் எழுந்து உட்கார்ந்து விட்டான்’’ என்று கூறி கண்ணீர் மல்க என்னைப் பார்த்தார்.’’

எனக்கு ஒரே ஆச்சர்யம். எல்லோரும் கைவிட்ட ஒரு துயரரைக் காப்பாற்றிவிட்டோம் என்ற மகிழ்ச்சி. பின்பு மருந்தை கொடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஒருவேளை கொடுக்கச் சொன்னேன்.
பின்பு முன்று நாட்களில் அந்தப் பையனும் அம்மாவும் இன்னும் 4, 5 பெரிய மனிதர்களும் வந்தார்கள்.

``சார் சாகக் கிடந்தவனைக் காப்பாற்றிவிட்டீர்கள். நீங்க நல்லாய் இருக்கனும்னு வந்தவரில் ஒருவர் கூறினார். அந்தப் பையன் காலில் விழுந்து வணங்கினான்.

நான் டாக்டர் ஹானிமனுக்கு எல்லாப் புகழும் என்று அவரை வணங்கினேன்.

இந்தத் துயரரைப் பொறுத்த வரை மற்றவர்களுடைய தவறான செய்கையால் அவமானப்பட்டு மனத்தளவில் முடங்கிப் போனான். அவனிடம் மனத்தில முடங்கிப்போன பின்பு உடம்பு முடங்கிச் செயலிழந்து போய்விட்டது. இப்போது தெரிகிறதா? மனம் பாதிக்காமல் ஒருபோதும் நோய் வருவதில்லை.
எனக்கு இந்தத் துயரரை நலப்படுத்தியது என்னை தீவிரமாக மனத்தின் பங்களிப்பைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இந்தத் துயரரில் இருந்துதான் நான் முழுமையாக மனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த ஆரம்பித்தேன்.

மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
ஓமியோபதி அற்புத நலமாக்கல்கள்-8
பழ.வெள்ளைச்சாமி
தொடரும்.....