புதன், 27 மே, 2020

வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் இயற்கை வழி மருத்துவம் ஹோமியோபதி


வெட்டுக்கிளி படையெடுப்பு மட்டுமல்ல ஏற்கெனவே பூச்சிக்கொல்லிகளுக்கும் கட்டுப்படாத பூச்சிகளின் பெருக்கம் மற்றும் நத்தை படையெடுப்பு போன்ற பல்வேறு புதுது புதிதான சிக்கலை உழவர்குடி எதிர்கொண்டு மிக சிரமத்தில் தான் வாழ்க்கையை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் இயற்கையான பாதுகாப்பான பல அடுக்கு விவசாய முறையை கைவிட்டு ஒற்றை அடுக்கு விவசாயத்தை கையில் எடுத்தது தான்...
சரி இதற்கு தீர்வே இல்லையா.. இருக்கிறது..மரபு சார்ந்த பல அடுக்கு விவசாயமுறைக்கு திரும்புவது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆய்ந்து தெளிந்து கூறியிருக்கிறார்.
பூச்சிகளின் படையெடுப்பை கட்டுப்படுத்த எளிய மூலிகை பூச்சிவிரட்டி முறைகளையும் தந்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=xehvMPJfQ30
அதுமட்டுமில்லாமல் ஹோமியோபதி மருத்துவமுறையும் வெட்டுக்கிளி மற்றும்
நத்தை படையெடுப்பை வெற்றிகரமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் டாக்டர் வைகுந்தநாத் கவிராஜ் அவர்களால் கட்டுப்படுத்திய வரலாறும் உண்டு. நத்தையில் இருந்து எடுக்கப்பட்ட மருந்தான helix toasta ஹோமியோபதி தத்துவமான ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் வழியில் அதாவது..முள்ளை முள்ளால் எடுப்பது போல நத்தையை விரட்டுகிறது.
கட்டுரை இணைப்பு:
நத்தைகளை ஒழிக்க என்ன வழி
http://balahomoeopathy.blogspot.com/2017/10/blog-post.html
அதேபோல வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன.
1.Rove beetle
என்ற பூச்சியின் அறிவியல் பெயர்: Staphylinidae இந்த பூச்சிக்கரைசலின்(இந்த பூச்சியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) வாசனைக்கு வெட்டுக்கிளி வரவே வராது.(இந்த பூச்சியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
2.hyssopus officinalis (இந்த தாவரக்கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) இந்த தாவரக்கரைசலுக்கும் வெட்டுக்கிளி வரவே வராது..ஆடுதொடா செடி எப்படி ஆட்டுக்கு பிடிக்காதோ அது போல இது வெட்டுக்கிளிக்கு பிடிக்காத வாசனையுள்ள செடி.(இந்த செடியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
3.aranea diadema என்ற சிலந்தி (இந்த சிலந்தியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) ..இந்த சிலந்தி கரைசலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தின் தன்மைக்கு வெட்டுக்கிளி தலைவைத்து படுக்காது.
மேற்கண்ட ஹோமியோபதி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஹோமியோபதி மருந்துகடைகளில் வாங்கி வெட்டுக்கிளி அறிகுறி தெரிய ஆரம்பித்த உடன் பயிருக்கு தெளிக்கலாம்..
ஹோமியோபதி மருந்து மிகவும் குறைந்த செலவு தான் ஆகும். இன்னும் எளிதாக இந்த செடியோ பூச்சியோ கிடைத்தால் அதனை ஹோமியோபதி மருத்துவ முறைப்படி வீரியப்படுத்தியும் பயன்படுத்தலாம்.
ஹோமியோபதி மருந்தை பயன்படுத்தும் முறை
10மில்லி மருந்தை 10லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்...
அதிக நிலப்பரப்புக்கு 500மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
குறிப்பு:
கீழ்க்கண்ட காணொளி பதிவுக்கான பின்னூட்ட பதிவாக நான் இட்டது. அவசியம் கருதி விரிவாக இங்கே பதியப்பட்டது.
https://www.youtube.com/watch?v=-nDFs354xCU

புதன், 20 மே, 2020

அரிப்பும் மருந்துமோகமும்

பழ.வெள்ளைச்சாமி


பெண் வயது 45
ECZEMA தொடையில் இருந்தது.  அந்தப் பெண்மணி வந்ததும் எந்தவித தயக்கமும் இல்லாமல் தொடையை ஆடையை நீக்கிக் காட்டினார்.

``உங்களுக்கு என்ன பண்ணுது?’’

``தொடையில் பத்து பத்தாக இருக்கு’’ என்று மறுபடியும் தொடையைக் காட்டினார்.

எவ்வளவு நாளாக இருக்கு?

``இது 4 வருஷமாக இருக்கிறது.  தோட்டத்துக்குள்ளே குடியிருக்கிறோம்.  அதனால் பூச்சி பட்டை கடிச்சிருக்கும்.  விஷச் செடிகள் ஏதாவதுபட்டிருக்கும்’’ என்று சொன்னார்கள்.

``உங்களுக்கு 4 வருடத்திற்கு முன் வேறு என்ன நோய்கள் வந்தன?’’

எதுவுமே வந்ததில்லை.

``இது அரிப்பு இருக்கா?  இல்லை எப்படி இருக்கு?

அப்பப்ப அரிக்கும்.  அரிக்கும்போது தேங்காய் எண்ணெய் போட்டுக் கொள்ள வேண்டும்.  ஏதாவது ஆஸ்பத்திரி களிம்பு போட்டால் குறையுது.  அப்புறம் வந்திடுது.  நானும் 4 வருஷமா பல பேர்களிடம் காட்டிவிட்டோம்.  தோல் டாக்டர்கள் மாத்திரைதான் எழுதித் தர்றாங்க.  ஆனால் குறைஞ்சபாடில்லை.  நானும் அலுத்துப் போய் விட்டுவிட்டேன்.’’

`` நான்கு வருடத்திற்கு முன் என்ன முக்கியமான சம்பவம் மனதை பாதிக்கிறது போல நடந்தது?’’

``ஒன்றும் பெரிதாக நடக்கலை.  பத்து வருடமாகவே பக்கத்துத் தோட்டததுக்காரர்களோடு சண்டைதான்.  கோழிச்சண்டை, மாட்டுச் சண்டை என்று ஏதாவது வந்துவிடும்.  அப்பப்ப  பயந்து கொண்டு இருப்பேன்  எதுவும் சண்டை வந்துவிடுமோ என்று.’’

``வேறு காரணம் இருக்கா?’’

``வேறு இல்லை எப்பப் பார்த்தாலும் சண்டை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருப்பேன்.’’

இவர்கள் வந்ததும் கூச்சநாச்சமில்லாமல் ஆடையை நீக்கித் தொடையைக் காட்டியது மற்றும் அவர்கள் கூறிய விபரங்களிலிருந்து கீழ்கண்ட குறிகள் கணக்கீடு செய்யப்பட்டன.

MIND – SHAMELESS
MIND - NAKED, wants to be
MIND - FEAR - injury - being injured; of
MIND - DELUSIONS - injury - being injured; is - surroundings; by his

மேலே தேர்வு செய்யப்பட்ட குறிகள் HYOSCYAMUS  மருந்து குறித்தன.  அந்த மருந்தை 200 வீரியத்தில்  கொடுத்து அனுப்பினேன்.

அவர்கள் 15 நாட்கள் கழித்து வந்தபோது அவர்களுடைய   ECZEMA முக்கால்வாசி குணமாகி இருந்தது.

மறுபடியும் ஒரு மாதத்திற்கு தொடர்மருந்து கொடுத்தனுப்பினேன்.  அவர்கள் ஒரு மாதம் கழித்து வந்தபோது முற்றிலுமாக நலமடைந்து இருந்தார்கள்.  ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும் எனக் கருதி மாதாமாதம் வந்து மருந்தில்லா மருந்து வாங்கிச் செல்வார்.

இரண்டு வருடம் வந்தும் மறுபடியும் அந்தக் குறிகள் திரும்பி வராததால் நான் அவர்களுக்கு மருந்து மோகத்தைத் தணிக்க நான் பவரான மருந்து கொடுப்பதாகச் சொல்லி தொடர்மருந்து கொடுத்து இனிமேல் இரண்டு வருடத்திற்கு மருந்து தேவைப்படாது என்று கூறியதால் பிறகு அவர்கள் வரவில்லை  ஆனால் அவர்கள் அனுப்பிய துயரர்கள் அடிக்கடி வந்து போவார்கள்.


ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள் தொடரும்

வியாழன், 14 மே, 2020

PLV அப்பா

 Dr Prema Gopalakrishnan MD (Homoeopathy)
Image may contain: 1 person, text
pazha.vellaichamy
ஓமியோபதி இளநிலை முடித்திருந்த நேரம். திண்டுக்கல்லில் மூன்று மருத்துவ நண்பர்கள் ஓமியோபதி தொடர் கற்றலுக்கான முயற்சியில், எங்களது கிளினிக்கில் மதிய இடை வேளைகளில் ஓமியோபதியின் பாடத்திட்டத்திற்குள் வராதவற்றை தேடி படித்துக்கொண்டிருந்தோம்.
இதை அறிந்த பழ.வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் என்னை விட்டுவிட்டு நீங்கள் மூவரும் மட்டும் படிப்பதா என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்று தனது இல்லத்தில் படிக்க மூவரையும் அழைத்தார்.
மற்ற இருவரும் அவருக்கு நெருக்கமானவர்கள். எனக்கோ அப்போதுதான் அறிமுகமாகிறார்.
ஒரு தயக்கத்துடன் தான் நண்பர்களுடன் சென்றேன்.
மதியநேர படிப்பு காலைநேரமாக மாறியது.
அதிகாலையில் எழுந்து தனது கடமைகள், நடைபயிற்சி அனைத்தும் முடித்துவிட்டு எங்களது வருகைக்காக காத்திருக்கும் 60 வயது இளைஞரை பார்த்து, இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பும் வேகமும் ஒரு மாணவனைப்போல மேவும் மேலும் கற்பதில் ஆர்வத்துடன் இருக்கும் அவர் எனக்கு ஆச்சரயத்தை அளித்தார்.
ஓமியோபதி வெறும் மருத்துவமன்று. அது இவ்வுலகின் சமூகவாழ்வியலின் பரிமாணங்களை(dimensions) சொல்லிக்கொடுக்கும் ஒப்பற்ற கல்வியாகும். ஆதலால் கலந்துரையாடலுக்கு என்றும் எங்களுக்கு பஞ்சம் இருந்ததில்லை.
மகளே என்ற சொல்லுக்கு மறுசொல் இல்லாமல் எனை எப்போதும் விழிக்கும் PLV சார்,
ஒரு மழைக்கால காலையில், மழையினால் தாமதாக வந்த எங்களைப்பார்த்து நீ என்ன உப்பு மூட்டையா மழையில் கரைந்துவிட.. அல்லது காளானா முளைத்துவிட.. மழை பெய்தால் என்ன.. படிக்க தாமதாக வரலாமா என அன்போடு கடிந்து கொண்டபோது,
PLV அப்பா ஆனார்.
ஓமியோபதியையும் இயங்கியலையும், வள்ளுவத்தையும் ஒருகோட்டில் இவர் பேச மணிக்கணக்காக கேட்டுக்கொண்டிருக்கலாம்.
சில மாதங்களாக எனது தனிப்பட்ட விருப்பத்தில், "தமிழகத்தில் ஓமியோபதியும் கம்யூனிஸமும்" என்ற தலைப்பில் சிறிய ஆய்வாக சில மூத்த தோழர்களை சந்தித்துவருகிறேன். இதுவரை சந்தித்த அனைவரும் ஒருசேர அவர்களது ஓமியோபதி பாதையின் திருப்புமுனையாக இருந்தவர் "PLV" என்று மந்திரம் போல சொன்னது, தமிழகத்தில் ஓமியோபதியின் வளர்ச்சியில் இவரது பெயர் நீங்கா இடம் பெற்றிருப்பதை காண்பிக்கிறது. ஒருகாலத்தில் தமிழகமெங்கும் இரவும்பகலும் பயனப்பட்டு ஓமியோபதி கற்றுக்கொடுத்து பல ஓமியோபதி மாணவர்களை, மருத்துவர்களை உருவாக்கியுள்ளார்.
ஐயா நம்மாழ்வார் தொடங்கி தோழர் நல்லகண்ணு ஐயா , தோழர் பாலபாரதி என இவரிடம் ஓமியோபதி மனங்களாக இணைந்த ஆளுமைகள் ஏராளம்.
இவரது அனுபவங்களை, இந்த ஊரடங்கு காவத்தில் நமக்கு கேட்கும் வாய்ப்பளித்த
"குக்கூ உரையாடலுக்கு" நன்றிகள் பல.
~ Dr. கோ. பிரேமா .
🦋
" ஒரு தனிமனிதனைப் புரிந்துகொள்ள அவனை மட்டும் புரிந்துகொண்டால் போதாது; அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்துகொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்கவேண்டியது அவசியம்.”
- ஜான் ஸ்கால்ட்டன்
டச்சு நாட்டைச் சேர்ந்த ஜான் ஸ்கால்ட்டன் என்ற ஹோமியோபதி அறிவியலாளர்தான் தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை தனிமங்களின் அணு எண் அடிப்படையில் முதன்முதலில் ஆய்வுசெய்தவர்; அவர் மருந்துகளை அன்னையாக, தந்தையாக, பிள்ளைகளாக,
சகோதர - சகோதரிகளாக, நண்பர்களாக, தொழிலாளியாக, கலைஞனாக, அறிஞனாக, தலைவனாக மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்த்தார். ஸ்கால்ட்டனின் ஹோமியோபதி பார்வை ஒவ்வொரு மருத்துவருக்கும் அத்தியாவசியத்தேவை என்பதை உணர்ந்த வெள்ளைச்சாமி ஐயா அதன் சாரத்தை ‘ஸ்கால்ட்டனின் கனிமங்கள்’ என்ற தன்னுடைய சிறுநூலில் தெளிவுற எழுதியுள்ளார். ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்தையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும்; சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்கமுடியாது என்பதை தனது முப்பது வருடகால மருத்துவ அனுபவம் வழியாக நமக்குத் தெளிவாக்குகிறார் ஐயா பழ.வெள்ளைச்சாமி.
ஹோமியோபதி ஆசான் பழ.வெள்ளைச்சாமி (PLV) அவர்கள், காரைக்குடி தாலுகா செம்பனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். இளைஞராக இருந்தபோதே மக்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவதில் இவர் ஆர்வமாக இருந்தார். இவர் தனது 17 வயதில் CPI அரசியல் கட்சியில் இணைந்து இன்றுவரை அதில் தொடர்கிறார். தீவிர கம்யூனிஸ்ட்டாக பல்வேறு போராட்டக்களங்களில் ஈடுபட்ட இவர் அதற்காக 1976ல் 7 மாத சிறைவாசம் அனுபவித்தார். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான மற்றும் மனிதாபிமான, குணப்படுத்தும் தீர்வுகளைத் தேடியலைந்ததின் பயனாக, இவர் ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டடைந்தார்.
இது ஒரு மருத்துவமுறை மட்டுமல்ல, இயற்கையின் நியதி மற்றும் மனிதர்கள் எதிர்கொள்கிற வாழ்க்கைப் போராட்டங்களுக்கான தீர்வு என்றும் அவர் விரைவிலேயே கண்டறிந்தார். 1990ம் ஆண்டில், சில நண்பர்களுடன் சேர்ந்து ஹோமியோபதிக்காக 'APROACH' (தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம்) என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். 30 ஆண்டுகளைக் கடந்து, இந்த அமைப்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தின் பல பிராந்தியங்களில் இலவச ஹோமியோபதி சிகிச்சையுடன் அனைத்துவகுப்பு மக்களுக்கும் சமமான சேவையை செய்துவருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நோய் எதிர்ப்பு மருந்துகளை கிராமப் பொதுமக்களுக்கு அண்மையில் இவ்வமைப்பினர் வழங்கினர். ஹோமியோபதி சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச்செயலாளராகவும் வெள்ளைச்சாமி ஐயா பொறுப்புவகிக்கிறார்.
அன்பே கடவுளின் நியதி, மனிதத்துவம், A Brief Introduction to Homoeopathy, ஹோமியோபதி ஏன் கற்க வேண்டும்?, ஹானிமன் காட்டிய வழியில் துயரர் ஆய்வு, ஹோமியோபதி மருந்து தேர்வில் மனக்குறிகளின் பங்கு, ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள், ஹோமியோபதி ஓர் அறிமுகம், மருந்துகாண் ஏடு (HOMOEOPATHIC REPERTORY) ஓர் அறிமுகம், ஹோமியோபதி 50 மில்லெசிமல் வீரியம், ஹோமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம், ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள் உள்ளிட்ட ஹோமியோபதி மற்றும் மனிதாபிமான எண்ணங்கள் குறித்த புத்தகங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெள்ளைச்சாமி ஐயா எழுதியிருக்கிறார்.

நம்மாழ்வார் தன்னுடைய ஆசான்களாக ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிடும் ஐந்தாறு முக்கிய நபர்களில் வெள்ளைச்சாமி ஐயாவும் ஒருத்தர். நோவுற்றுத் தான் துடிக்கும் வேளைகளில் நம்மாழ்வார் ஐயா, சிகிச்சைக்கென முதல் தேடிச்சென்றது வெள்ளைச்சாமி ஐயாவிடம்தான். மார்க்சியத்தை வெறும் வாய்த்தத்துவமாக நிறுத்திக்கொள்ளாமல், தன்னுடைய வாழ்வை அதற்கென ஒப்படைத்து, ஒரு ஆசான் பொறுப்பிலிருந்து இவர் உருவாக்கும் ஆளுமைகள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் சாட்சி மருத்துவர்களாக மாறிநிற்கிறார்கள். மேலும், இன்று தமிழகத்தின் ஏதோவொரு சிறுகிராமத்தில், யாரோ ஒரு கிராமத்துப் பையனோ அல்லது பொண்ணோ ‘ஹோமியோபதி’ படிக்க முடிவெடுத்தால், வெகு இயல்பாக அவர்கள் சென்றடையும் வழிகாட்டி ஆசான் ‘மருத்துவர் பழ.வெள்ளைச்சாமி’ என்ற ‘PLV அப்பா’ தான்.
குக்கூ நேரலை இணையவழி உரையாடலில், நாளை 15.05.20 மாலை 5.00 மணிக்கு, ஹோமியோபதி ஆசானான வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் பங்கேற்று, தனது வாழ்வுக்கால அனுபவங்கள் மற்றும் துறைசார்ந்த மேலதிக அவதானிப்புகளை நம்முடன் பேசிப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். இயற்கை மருத்துவத்தை அதன் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் விளக்கி, மனிதத்தன்மையே மருத்துவச் சிகிச்சையின் இறுதியிலக்காக இருக்கவேண்டும் என தற்போதைய அறிவுலகத்தின் முன்பு உரக்கச்சொல்கிற இந்த ஆளுமைமனிதரின் உரையாடல், பல சுயமுடிவுகளை எடுப்பதற்கான தைரியத்தை நமக்கு வழங்கக்கூடும்.

thanks to kukkoo children movement

திங்கள், 4 மே, 2020

காணாமல் போன கர்ப்பப்பை கட்டியும் கரைந்துபோன சிறுநீரகக்கல்லும் பழ.வெள்ளைச்சாமி



      பெண் வயது 41
இவர்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி. சிறுநீரகக் கல்.
``உங்களுக்கு  என்ன பண்ணுது?’’
 மென்சஸ் அதிகமாகப் போகுது.  அடிவயிற்றில் வலி, யூரின் போகும்போது எரிச்சல்.  ஸ்கேன் எடுத்துப் பார்த்தில் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகச் சொன்னார்கள்.  வலது கிட்னியில் கல் இருப்பதாகச் சொன்னார்கள்.
``இது எவ்வளவு நாட்களாக இருக்கிறது?’’
``ஆறு மாதமாக இருக்கிறது’’
``இதற்கு முன் ஏதாவது நோய் வந்ததா?’’
``எப்பவாவது சளி, காய்ச்சல் வந்தால்தான்.  அதைத்தவிர வேறு எந்த நோயும் கிடையாது.  அதுவும் இந்த இரண்டு வருடங்களாகத்தான் உடம்புக்குச் சரியில்லாமல் போகுது’’

``அது என்ன இரண்டு வருடம்?’’
``ஆமா சார், எப்ப இந்த ஆபீஸ்க்கு வந்தேனோ அப்பவே உடம்புக்குச் சரியில்லை’’
எங்க வேலை பார்க்குறீங்க? உங்க வேலையைப் பற்றிச் சொல்லுங்க.
நான் முனிசிபல் ஆபீஸில்   AE  சார். எனக்கு 12 வருட சர்வீஸ் சார்.  இரண்டு வருடத்திற்கு முன்தான் இங்கே டிரான்ஸ்பரில் வந்தேன்.  நான் ரொம்ப சின்சியர்.  நான்  DUTY-இல் சரியாக இருப்பேன்.  நான் வேலை பார்த்த இடங்களில் எல்லாம் எனக்கு நல்ல பேர்.  ஆனால் இந்த ஆபீஸிற்கு வந்த பிறகுதான் எல்லாப் பிரச்னையும்.
என்ன பிரச்சனை? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்க.
``சார் எனக்கு மேல் உள்ளவர்கள் காண்ட்ராக்ட்காரர்களிடம் லஞ்சம் வாங்கியதற்காகவே வேலைகளைப் பார்க்கச் சொல்வார்கள்.  நான் அவர்களுடைய போக்குக்கு ஒத்துழைக்காததால் எனக்கு பல வழிகளிலும் டார்ச்சர் கொடுக்கறாங்க.  சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் மற்றவர்கள் முன் அசிங்கமாகப் பேசி இன்சல்ட் பண்ணுவாங்க.  நான் இவ்வளவு நாளாக நல்லா வேலை பார்த்துவிட்டு இங்கே வந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறேன்.  தப்பு பண்ணாமல் டார்ச்சர் பண்ணுவது, அவமானப்படுத்துவது மிகவும் வேதனையாக இருக்கிறது.``  கடந்த இரண்டு வருடமாக இப்படித்தான் போகுது.   As a lady  ஆக என்னால ஒரு level -க்கு மேல் போக முடியலை.  அதனால் நான் ரொம்ப வேதனைப்படுகிறன் சார்.  சொல்லப் போனா இங்க வந்த பிறகுதான் எனக்கு சேராமல் வந்தது.  இதற்கு முன்னாடி எந்தப் பிரச்சனையும் வீட்டிலும் இல்லை.  ஆபீஸிலும் இல்லை.’’
      நான் இவர்கள் நோய்க்குக் காரணம் இவர்களுக்கு அலுவலகத்தில் மனம் பாதித்ததுதான் என்று உணர்ந்து கொண்டேன்.  மேலும் இவர்கள் மேற்கூறிய விஷயங்களிலிருந்து கீழ்கண்ட குறிகளைத் தேர்வு செய்தேன்.

MIND - DELUSIONS - tormented; he is
MIND - DELUSIONS - insulted, he is
MIND - DELUSIONS - wrong - suffered wrong; he has
 
மேற்கூறிய குறிகளுக்கு  lyssinum பொருத்தமாக இருத்ததால் அதை 200 வீரியத்தில்  கொடுத்து விட்டு தொடர் மருந்தை 1 மாதம் கொடுத்து அனுப்பினேன்.
ஒரு மாதம் கழித்து அவர் மறுபடியும் வந்தார்.
``உங்களுக்கு மருந்து சாப்பிட்டதும் எப்படி இருக்கிறது’’
நன்றாக இருக்கிறது.  போனவாரம் மென்சஸ் ஆனபோதும் கூட அதிகமாக பிளீடிங் இல்லை.  வலியும் இல்லை.

பின்பு அவர்களுக்கு 3 மாதங்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்கள் கர்ப்பப்பை கட்டி காணாமல் போயிருந்த்து.  சிறுநீரகக் கல்லும் கரைந்து விட்டது.