புதன், 27 மே, 2020

வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் இயற்கை வழி மருத்துவம் ஹோமியோபதி


வெட்டுக்கிளி படையெடுப்பு மட்டுமல்ல ஏற்கெனவே பூச்சிக்கொல்லிகளுக்கும் கட்டுப்படாத பூச்சிகளின் பெருக்கம் மற்றும் நத்தை படையெடுப்பு போன்ற பல்வேறு புதுது புதிதான சிக்கலை உழவர்குடி எதிர்கொண்டு மிக சிரமத்தில் தான் வாழ்க்கையை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் இயற்கையான பாதுகாப்பான பல அடுக்கு விவசாய முறையை கைவிட்டு ஒற்றை அடுக்கு விவசாயத்தை கையில் எடுத்தது தான்...
சரி இதற்கு தீர்வே இல்லையா.. இருக்கிறது..மரபு சார்ந்த பல அடுக்கு விவசாயமுறைக்கு திரும்புவது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆய்ந்து தெளிந்து கூறியிருக்கிறார்.
பூச்சிகளின் படையெடுப்பை கட்டுப்படுத்த எளிய மூலிகை பூச்சிவிரட்டி முறைகளையும் தந்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=xehvMPJfQ30
அதுமட்டுமில்லாமல் ஹோமியோபதி மருத்துவமுறையும் வெட்டுக்கிளி மற்றும்
நத்தை படையெடுப்பை வெற்றிகரமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் டாக்டர் வைகுந்தநாத் கவிராஜ் அவர்களால் கட்டுப்படுத்திய வரலாறும் உண்டு. நத்தையில் இருந்து எடுக்கப்பட்ட மருந்தான helix toasta ஹோமியோபதி தத்துவமான ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் வழியில் அதாவது..முள்ளை முள்ளால் எடுப்பது போல நத்தையை விரட்டுகிறது.
கட்டுரை இணைப்பு:
நத்தைகளை ஒழிக்க என்ன வழி
http://balahomoeopathy.blogspot.com/2017/10/blog-post.html
அதேபோல வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன.
1.Rove beetle
என்ற பூச்சியின் அறிவியல் பெயர்: Staphylinidae இந்த பூச்சிக்கரைசலின்(இந்த பூச்சியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) வாசனைக்கு வெட்டுக்கிளி வரவே வராது.(இந்த பூச்சியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
2.hyssopus officinalis (இந்த தாவரக்கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) இந்த தாவரக்கரைசலுக்கும் வெட்டுக்கிளி வரவே வராது..ஆடுதொடா செடி எப்படி ஆட்டுக்கு பிடிக்காதோ அது போல இது வெட்டுக்கிளிக்கு பிடிக்காத வாசனையுள்ள செடி.(இந்த செடியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
3.aranea diadema என்ற சிலந்தி (இந்த சிலந்தியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) ..இந்த சிலந்தி கரைசலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தின் தன்மைக்கு வெட்டுக்கிளி தலைவைத்து படுக்காது.
மேற்கண்ட ஹோமியோபதி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஹோமியோபதி மருந்துகடைகளில் வாங்கி வெட்டுக்கிளி அறிகுறி தெரிய ஆரம்பித்த உடன் பயிருக்கு தெளிக்கலாம்..
ஹோமியோபதி மருந்து மிகவும் குறைந்த செலவு தான் ஆகும். இன்னும் எளிதாக இந்த செடியோ பூச்சியோ கிடைத்தால் அதனை ஹோமியோபதி மருத்துவ முறைப்படி வீரியப்படுத்தியும் பயன்படுத்தலாம்.
ஹோமியோபதி மருந்தை பயன்படுத்தும் முறை
10மில்லி மருந்தை 10லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்...
அதிக நிலப்பரப்புக்கு 500மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
குறிப்பு:
கீழ்க்கண்ட காணொளி பதிவுக்கான பின்னூட்ட பதிவாக நான் இட்டது. அவசியம் கருதி விரிவாக இங்கே பதியப்பட்டது.
https://www.youtube.com/watch?v=-nDFs354xCU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக