சனி, 3 டிசம்பர், 2016

இயற்கை விவசாயத்தில் ஹோமியோபதி புரட்சி



ஹோமியோபதி மருத்துவம் இயற்கை வழி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்

ஹோமியோபதி இயற்கையுடன் இயைந்த மருத்துவம், அது மண்ணுக்கும் ,பயிர்களுக்கும் எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. மேலும் இயற்கையில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான மருத்துவம்,அதனால் கால்நடைகளுக்கும் அதனை கொடுக்கலாம், இன்றைய கலப்பட உலகில் மண்ணை பாழாக்கி வைத்துள்ளோம், மண்ணின் பழைய சக்தியை மீட்டெடுக்க ஹோமியோபதி விவசாயிக்கு உற்ற நண்பனாக திகழும்.
விவசாயிகளுக்கு பயனுள்ள சில குறிப்புகளை மொழிபெயர்த்து கொடுத்துள்ளோம் ,மேலும் விவரம் தேவைப்படுவோர் எங்களை அணுகலாம்.
இந்தக் கட்டுரையில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்தும், எல்லா ஹோமியோபதி மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். விலையும் மிகக் குறைவு. மருந்துகளை மிக குறைவாக பயன்படுத்தினாலே போதுமானது.அதனால் உரம்,பூச்சி மருந்து,களை நீக்கி மருந்து என்று என விவசாயிகளுக்கு செலவு இல்லை. இந்த செலவீனங்களை கட்டுப்படுத்தினாலே விவசாயம் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிடும். உரத்திற்காகவும், பூச்சி மருந்துக்காகவும் வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய தேவை இராது, விவசாயம் பொய்த்துப்போகாது.விவசாயத்தை விட்டு புலம் பெயர்ந்து மாநகரங்களில் அகதிகளாக திரியத் தேவையில்லை.
மண்ணை நம்பினோர் கைவிடப்படார். மண்ணை பாழ்படுத்தாமல் விவசாயம் செய்தால்.
விவசாய பூமியை காப்பாற்ற உற்ற தோழன் ஹோமியோபதியே.

ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்தும் முறை:

பயிர்களுக்கு தேவையான பொருத்தமான மருந்தை திரவ வடிவில் (DILUTION) அல்லது இனிப்பு உருண்டை வடிவில் (GLOBULES) வாங்கி வைத்துக் கொள்ளவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 5 சொட்டு அல்லது 5 உருண்டைகள் போட்டு நன்றாக கலக்கவும், குச்சியோ அல்லது கரண்டியோ கொண்டு நன்கு ½ மணி நேரம் கலக்கவும். கலக்கியபின் தெளிப்பான் உதவியுடன் பயிர்களுக்கு தெளிக்கலாம்;அல்லது சொட்டுநீர்ப்பாசானமாக இருந்தால் பாசான நீரில் கலந்து விடலாம். மரப்பயிர்களுக்கு வேரில் படும்படி மருந்து கலந்த நீரை பாய்ச்சினால் போதுமானது.
மருந்து ஒரு முறை தெளித்தால் அல்லது நீரில் பாய்ச்சினால் போதுமானது, பயிரின் நிலைமையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்கலாம்.
பயிரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மீண்டும் மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை; முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் மீண்டும் அதன் அறிகுறிகளை உற்று கவனித்து அதற்கு பொருத்தமான மருந்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டி வரலாம்

செடிகளுக்கு வரும் ஆலைப்பேன் Plant Lice

பயிர்களுக்கு வரும் முக்கியமான பேன் போன்ற பூச்சிகள் தான் அவை ஒருமாதிரி பிசுபிசுவென இலைகளை ஆக்கி மாவு போன்ற பொருளை சுரந்து பயிர்த்தண்டை பாழாக்கி விடும். இவற்றுக்கு அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் ஹோமியோபதியில் சிறப்பான நிவாரணிகள் உள்ளன.
• பேன் தொல்லையுடன் இலை சுருண்டு போதல்,/பூ சுருண்டு போதல், ஒட்டக்கூடிய வகையான சுரப்புகள் உள்ள நோய்த் தன்மைக்கு (rolled up leaves/ flowers, sticky secretions) சிமிசிபுகா (Cimicifuga) ஓர் அருமையான மருந்து.
• பேன் தொல்லையுடன் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட(அதாவது பராமரிக்காமல் அல்லது தண்ணீர் விடாமல் விடப்பட்ட) அல்லது அதிக உரமூட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அல்லது தாவரங்களுக்கு நேட்ரம் குளோரேட்டம் (for neglect or over-fertilization)--Natrium chloratum
• பேன் தொல்லையுடன் பலவீனமான குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்களுக்கு (weak, puny plant sensitive to the cold)சோரினம் (Psorinum
• பேன் தொல்லைக்கு மிக முக்கியமான மருந்து அதனுடன் காயங்களாலோ,அடிபட்டதாலோ பலவீனமடைந்த தாவரங்களுக்கு(plant weakened by injury) ஸ்டாபிசாக்ரியா Staphysagria
ஒருமுறை என் மருத்துவ வகுப்பில் வெள்ளைப்பேன் பிடித்த காய்க்காத கொய்யாமரத்திற்கு staphysagria போட்டால் நன்றாக காய்க்கும் என்று வகுப்பில் சொன்னார். அதை ஞாபகத்தில் வைத்து என் வீட்டில் காய்க்காமல் இருந்த கொய்யாமரம்,எலுமிச்சை மரம்,முருங்கை மரம், கத்திரிச்செடி என சகட்டுமேனிக்கு அனைத்திற்கும் staphy கரைசலை தெளித்ததில் அனைத்தும் காய்த்துக் குலுங்கின.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பயங்கர ஆச்சரியம்.
staphy யின் விளைச்சலுக்கு பிறகு எங்கள் வீட்டில் “அந்த செடிக்கு போடற மருந்த கொடுங்க” என கேட்டு என்னிடம் கேட்காமலே செடியோ மரமோ காய்க்காமல் இருந்தால் staphy30 5 உருண்டைகளை ஒரு வாளி தண்ணீரில் கலந்து தெளித்துவிடுவார்கள், இது வரை எங்கள் வீட்டு மரத்திற்கோ செடிக்கோ வேறு மருந்து தேவைப்படவில்லை.

சிறு சிலந்திப்பூச்சிகள் Spider Mites

• சிறுசிறு சிலந்தி போன்ற பூச்சிகள் மற்றும் குளிர்ச்சியால் பலவீனமடையும் தாவரங்கள்,வீட்டு வளர்ப்பு தாவரங்கள்: சூடான, வறண்ட காற்று, வெளிச்சமின்மை இதனால் பாதிக்கப்பட்டிருந்தால் (outdoor:weakness after the cold, indoor: warm, dry air, lack of light) – பெட்ரோலியம்
• சிறுசிறு சிலந்தி போன்ற பூச்சிகள் மற்றும் குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்கள். (weak, puny plants sensitive to the cold)-- Psorinum
* சிறுசிறு சிலந்தி போன்ற பூச்சிகள் மற்றும் குளிர்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சுவதில் பிரச்சனை இருக்குமானால் (sensitive to the cold, thirsty plant with problems Absorbing water)-- Sulphur இது அருமருந்து.

Whiteflies –வெண்பூச்சிகள்/ஈக்கள்

• வெண்பூச்சிகள் மற்றும் குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்களுக்கு . (weak, puny plants sensitive to the cold)--- Psorinum
• வெண்பூச்சிகள் மற்றும் குளிர்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சுவதில் பிரச்சனை இருக்குமானால் இது அருமருந்து. (sensitive to the cold, thirsty plant with problems absorbing water)
• நத்தைகள் தோட்டங்களில் அதிகமாக காணப்பட்டால் அது செடிகளை பாதிக்குமானால் Helix tosta (put the remedy in water and pour it over the ground) வீரியப்படுத்தப்பட்ட இந்த நத்தை மருந்தை தண்ணீரில் கலந்து நிலத்தில் பாய விட்டால்/ ஊற்றினால் நத்தைத் தொல்லை குறையும்,

Brown Rot பழுப்பு அழுகல்

• மஞ்சளும் பழுப்புமான இலைகள், கருப்பு பூஞ்சை புள்ளிகள்,குளிர்ச்சி ஆகாமை (yellowish-brown leaves, black
fungal spots, sensitive to the cold)-- Carbo vegetabilis
• பழுப்பு இலைகள், ஈரத்தின் விளைவு (brown leaves, result of wetness) --- Cuprum metallicum 30 CH
மழை நீண்டகாலமாக பெய்ததின் விளைவு,ஈரப்பதமான தட்பவெப்பம் இதனுடன் பழுப்பு அழுகல்
(result of long periods of rain with humid weather)--- Natrium sulphuricum
• மழை நீண்டகாலமாக பெய்ததின் விளைவு, இதனுடன் பழுப்பு அழுகல் (result of long periods of rain with cold weather) ---Thuja 

வெப்பு நோய் (கருகல்) ,வெண் சாம்பல் நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் Blight (grey-whitish layer on the leaf surface)

• வெப்பு நோய் ,வெண்மை நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் (white layer on the leaf surface) -- Cuprum Metallicum
• வெப்பு நோய் ,வெண் சாம்பல் நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் அதுவும் ஈரக்கசிவான மிதவெப்ப பருவகாலங்களில் இருந்தால். (after humid warm weather) ---Natrium sulphuricum
வெப்பு நோய் ,வெண் சாம்பல் நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் அதுவும் மழைக்காலங்களில், கோடைக்காலங்களில் (rainy spring and summer) ---Thuja

பசுமை போர்த்தியது போன்ற பூஞ்சைக்காளான் ( சாம்பல் நிறமாகவோ அல்லது சாம்பலும் கருஞ்சிவப்பு ஊதா நிறமும் கலந்த நிறப்போர்வை போன்ற காளான் இலையின் அடிப்பரப்பில் இருந்தால்) Lettuce Downy Mildew
(grey to greyish-purple layer on the leaf’s underside)

• பசுமை போர்த்தியது போன்ற பூஞ்சைக்காளான் ( சாம்பல் நிறமாகவோ அல்லது சாம்பலும் கருஞ்சிவப்பு ஊதா நிறமும் கலந்த நிறப்போர்வை போன்ற காளான் இலையின் அடிப்பரப்பில் இருந்தால் அதுவும் நிறைய மழை பெய்தபிறகு. (after lots of rain) -- Cuprum Metallicum
• பசுமை போர்த்தியது போன்ற பூஞ்சைக்காளான் ( சாம்பல் நிறமாகவோ அல்லது சாம்பலும் கருஞ்சிவப்பு ஊதா நிறமும் கலந்த நிறப்போர்வை போன்ற காளான் இலையின் அடிப்பரப்பில் இருந்தால் அதுவும் மழை பெய்தபிறகு ஈரக்கசிவான மிதவெப்ப பருவகாலங்களில் இருந்தால். (after rain with humid warm weather) ---- Natrium sulphuricum
• மழை நீண்டகாலமாக பெய்ததின் விளைவாக இருந்தால் (after long periods of rain)-- Thuja
• சூட்டினாலோ அல்லது குளிர்ச்சியை தொடர்ந்து வரும் சூட்டினால் கருகல் நோய் வந்தால் (in the heat or cold followed by heat) --- Sulphur
இலை கருகல் நோய்,இலையில் கரும்புள்ளி நோய் Black Spot Disease
(black, star-shaped spots on green leaves)
• நிறைய மழை பெய்தபிறகு இலை கருகினால்
(after lots of rain) --- Carbo vegetabilis ,Cuprum metallicum
• மழைக்கு பிறகு ஈரப்பதமான மித வெப்ப பருவத்தில் இலை கருகினால்
(after rain with humid warm weather) -- Natrium sulphuricum
• குளிர்ச்சியான ஈரப்பருவம், அதிக நசநச ஈரக்கசிவு காலங்களில் இலை கருகினால்
(after damp cold weather, high humidity) -- Thuja
• குளிர்ச்சியான, ஈரமான தட்ப வெப்பத்திற்கு பிறகு இலை கருகினால்
(after cold, wet weather) Rhus toxicodendron

இலைப்புள்ளி நோய் Leaf Spot Disease

• இலைப்புள்ளிகளுடன் சிறுசிறு மூட்டுப்பூச்சிகளும் இருந்தால் ஈரப்பருவங்களில்
(bugs and wet weather) -- Lycopodium
• இலைப்புள்ளி நோய் குளிர்ச்சியான, பனிப்பருவங்களில்
(after cold, damp weather) -- Rhus toxicodendron
 
 

திங்கள், 28 நவம்பர், 2016

திக்குவாய்க்கு ஹோமியோபதியில் தீர்வு

Image may contain: text

உலகில் உள்ள பெரும்பாலானோர் சிறுவயதில் திக்குவாயால் அவதிப்பட்டிருப்பர்.வளர வளர பலருக்கு இந்த பிரச்சனை சரியாகிவிடும். நடுவயதிலும் சிலருக்கு திக்குவாய் பிரச்சனை ஏற்படுகிறது.
திக்குவாய் (STAMMERING OR STUTTERING) நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் வருகிறது. நவீன மருத்துவம் திக்குவாய் உள்ளிட்ட 51 நோய்களுக்கு மருந்தில்லை என சொல்கிறது. https://en.wikipedia.org/wiki/Schedule_J
திக்குவாய்க்கான காரணங்கள்:
குழந்தைகளை பயமுறுத்தி அல்லது மிரட்டி வளர்ப்பது, உறவினர்கள் முன் அவமானப்படுத்துவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவது
தாழ்வு மனப்பான்மை
அதிர்ச்சியடைதல்,
ஏமாற்றம், மனவேதனை, திடீர் இழப்பு
நெருங்கிய உறவினர்களின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி
கோபம்,எரிச்சல்,வெறுப்பு
போன்ற
மனரீதியான பாதிப்புகளாலோ அல்லது
பாரம்பரியத்தினாலோ(heredity) அல்லது அடிபடுதல்(accidents or injuries) மூலமாகவோ நரம்பு மண்டலம்(nervous system) பாதிக்கப்பட்டு திக்குவாய் வருகிறது.
திக்குவாய் தீர்க்கமுடியாத வியாதியல்ல, இதை முறையான மூச்சுப்பயிற்சி மற்றும் பேச்சுப்பயிற்சி மூலமாகவே தீர்க்கமுடியும்.மரபுசார் மருத்துவங்கள் அனைத்திலும் திக்குவாய்க்கு தீர்வு உண்டு,இருந்தாலும் ஹோமியோபதி மிக எளிய முறையில் குணப்படுத்துகிறது.
நோய் மற்றும் குணம் பற்றி ஹோமியோபதி மருத்துவத்தின் பார்வை:
நவீன மருத்துவத்தில் கூறப்படுவது போல் கருவி ஆய்வுகள், உடல் இயங்கியல்,உடல் கூறு இயல் மற்றும் நோய்க்கூறு இயல் ஆய்வுகள் அவசியமில்லை
ஹோமியோபதியில் துயரர்களின் குறிகள் பிரதானமாகக் கருதப்படுகின்றன.துயரர்களின் குறிகளுக்கு இணங்க ஒத்த மருந்தைத் தேர்வு செய்து கொடுத்தால் போதும்.
ஹோமியோபதி நோய்க்கான காரணமாக எதை சொல்கிறது?
வள்ளுவர் சொல்வதுபோல
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
இவர் இங்கே குறிப்பிடுவது, பித்தம் வாதம் மற்றும் கபம் என்ற மூன்றைத்தான். இவை மூன்றும் சமச்சீர் நிலையில் இருக்க வேண்டும்.இதில் எந்த ஒன்று குறைந்தாலும் (அ) கூடினாலும் நோய் வரும் என்கிறார்.
ஹோமியோபதியில் நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு மனிதனில் உள்ள வாயு.வெப்பம் மற்றும் நீர் இம்மூன்றும் சமச்சீர் அளவில் இருக்க வேண்டும். அதுபுறத்தே உள்ள வெப்பம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல் கூடவோ குறையவோ இல்லாமல் எப்போதும் சீராக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நோய் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.மனிதன் என்பவன் மனம்+உடல்+ஆன்மா இவைகளின் கூட்டு ஆகவே அவனை முழுமையாக அணுகுவதே நோய் தீர்க்க உள்ள ஒரே வழியாகும். நாம் ஹோமியோபதியில் புற அவயங்களின் முழுமைக்குறிகள் (physical general) என்று பார்க்கிறோம். இது மட்டுமில்லாமல் மனம் சார்ந்த பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம் (MENTAL GENERAL) ஏனெனில் மனமும் உடலும் சேர்ந்தது தான் முழுமையான மனிதன்.மனம் நோயுறாமல் உடல் நோயுறாது. ஆகவே நோயுற்ற மனிதனை முழுமையாக ஆராய்ந்து மனம் மற்றும் உடல் சார்ந்த தனித்துவக்குறிகளை கணக்கில் எடுத்து மருந்து கொடுக்கும்போது நோயாளியின் ஆரோக்கியம் மீள்கிறது.
---------------------
ஹோமியோபதியில் தீர்வு:
ஹோமியோபதி மருத்துவம் திக்குவாய் நோய் மட்டுமல்ல நவீன மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோய் பலவற்றை தீர்க்கும் மருத்துவம் ஆகும்.ஹோமியோபதியில் நோய்க்கல்ல மருந்து,நோயுற்ற நோயாளிக்கே மருந்து.மருந்தை நோயாளிக்கு தருவதால் நோயாளியின் நோய் எதிர்ப்பு ஆற்றலை தூண்டி நோயாளியின் அனைத்து நோய்களையும் களைகிறது.
துயரர்-1
சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்,கடந்த 4 வருடமாக பேசும்போது திக்குகிறது,நண்பர்களிடம் மற்றும் தெரிந்தவர்களிடம் பேசும்போது திக்குவதில்லை.புதிய நபர்களிடம் பேசும்போது, பேராசியர்களிடம் VIVAக்கு பதில் சொல்லும் போது பதட்டம் அதிகமாகி திக்குகிறது,அந்த சமயத்தில் ஒரு வாக்கியம் பேசி முடிப்பதற்கு 5நிமிடத்திற்கு மேலாகிவிடுகிறது.
இவரின் பயம் தன் வழக்குரைஞர் தொழிலே பேச்சை மூலதனமாக கொண்டது இப்படி திக்குவதால் தன் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று பயம்.மேலும் ஆசிரியர்கள் தான் இப்படி திக்கி திக்கி பதில் சொல்வதை பார்த்து திட்டுவார்களே, எப்படி நாம் பட்டப்படிப்பை முடிப்போம் என்ற பயம் அதிகமாக உள்ளது.
விசாரித்ததில் 4 வருடத்திற்கு முன் தன் காதலியுடன் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டையால் அவர் கோவித்துக் கொண்டு இவருடன் கடந்த 4 வருடமாக பேசவில்லை.தான் தவறு செய்துவிட்டோம் அவளை நாம் திட்டியிருக்கக்கூடாது ,அதனால் தான் அவள் தன்னிடம் பேசவில்லை என நினைத்து கடும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கிறார், இந்த நிகழ்வு இவருக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியது,அதன்பிறகுதான் இவருக்கு பேசும் போது திக்குவது வந்தது.

Rx
Similimum Homeo medicine prescribed
Follow up
6 மாதம் திக்கவில்லை மறுபடியும் லேசாக திக்கல் வந்தது.மருந்து தொடர்ந்து ஒரு வருடம் எடுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது.
தற்போது மருந்து நிறுத்தி 2 வருடங்களாகிறது.தற்போது வரை திக்குவாய் தொந்தரவு இல்லை. வெற்றிகரமாக படிப்பை முடித்து இப்போது வழக்குரைஞராக பணிபுரிகிறார்.

துயரர்-2
துயரர் பள்ளி மாணவர் அவருக்கு சின்ன வயசுல இருந்து திக்குவாய், திக்கி திக்கிதான் பேசுவார், யாராச்சும் கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாது,பயங்கரமா திக்கும்,புது ஆட்களை கண்டாலே பயப்படுவார்
ஆனால் பேச ஆரம்பிக்கும்போது தான் திக்கும், நாலு வார்த்தை பேசிட்டான்னா அப்புறம் திக்காது.
திக்குவாயால் என்ன என்ன பாதிப்பு என விசாரித்ததில்……..
“சார்! நான் +2 படிக்கிறேன், ஃப்ரெண்ட்ஸ்லாம் படிக்கறப்ப நான் சத்தமா திக்கி திக்கி படிக்கறது டிஸ்டர்பா இருக்கு தூரமாப்போய் படிடா… அப்படின்னு சொல்றப்ப மனசு ரொம்ப கஷ்டமாயிடுது, இதுக்காகவே நான் எல்லோரிடமிருந்தும் ஒதுங்கியே தனியா படிப்பேன்.
பேசும்போது திக்குவதாலயே யாரிடமும் பேசவே நான் விரும்புவதில்லை,அப்படி பேசும்போது அவர்கள் ஏதும் சொல்லிட்டா மனசு தாங்காது.
எப்ப எப்ப திக்குது?
புதிய நபர்களிடம் பேசும் போது,அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது,
ஆசிரியர்களிடம் பதில் சொல்லும்போது,
பரீட்சைக்கு சத்தம் போட்டு படிக்கும்போது
பாட்டு பாடறப்ப திக்கறது இருக்காது.
(பாட்டு பாடும்போது துயரர்கள் பெரும்பாலானோரிடம் திக்குவது இருக்காது,காரணம் அது ஞாபகத்தில் இருந்து வருவது,பேசுவது உடனடியாக சிந்தித்து பேசுவதால், தவறாக பேசிவிடுவோம் என்ற பயம்,பதட்டத்தால் திக்குகிறது).
Observation
பேசும்போது ஒவ்வொரு முறையும் வாக்கியத்தை முடிக்கும் முன்னே வார்த்தைகளை முழுங்கிவிடுகிறார்.
Rx
Similimum homeo medicine prescribed
Follow up
6 மாதங்களில் 50% better
2 வருடங்களுக்கு பிறகு
80% better மீண்டும் மருந்து கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு வருடம் சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
ஒரு வருட சிகிச்சைக்குப் பின் நன்றாக தேறிவிட்டார். ஆனாலும் எப்போதாவது திக்குகிறது.அதுவும் முறையான மூச்சுப்பயிற்சியும் பேச்சுப்பயிற்சியும் செய்தால் அதுவும் இருக்காது. தற்போது +2 வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று B.E. படித்துக்கொண்டுள்ளார்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

மனிதத்துவம் பகுதி -3 பழ.வெள்ளைச்சாமி

          மனிதத்துவம், மனிதனை மனிதனாக்கி கடவுளாக்கும்
                     PART- 3

     இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றின் உருவாக்கம். இந்த உண்மை அறிவியலாளர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் நாத்திகவாதிகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த ஒன்றும் அணுத்துகள், ஆற்றல், பரமாணு, பரம்பொருள், ஒன்று என்று  சொல்ல முடியாத ஒன்று, சூனியம், பிரம்மம், தாவோ, தம்மம், இறைநிலை, மற்றும் கடவுள் என்று எத்தனையோ பெயர்களில் அழைக்கப்படுகிறது.
    
அது ஒரு சக்தி மையம் எங்கும் வியாபித்துள்ள நீக்கமற நிறைந்துள்ள, தனக்கென்று தனிக்குணம் அற்ற ஒன்று. அந்த ஒன்றிலிருந்துதான் அனைத்தும் தோன்றியுள்ளது அல்லது அனைத்துக்கும் ஆதாரம் அதுதான் அதுவே ஆதிமூலம். அந்த ஆதிமூலத்திலிருந்து தோன்றிய ஒன்றுதான், அதற்கென்று தனிக்குணத்தோடு பரிணமித்தது. அந்த ஒன்றின் குணம் மாற அதன் அளவு மாறி பின்பு அதன் குணம் மாற அதன் அளவு மாறி இப்படியாக படிப்படியாக பரிணமித்து, இந்த 460 கோடி ஆண்டுகளில் மனிதன் வரை வந்துள்ளது.
    
இவ்வாறு பரிணமித்த அனைத்துமே அதற்குண்டான தனித்தனிக் குணங்களோடு நிலவி வருகிறது. இவ்வாறான தனித்தனி குணங்களை வைத்தே ஒவ்வொன்றும் அடையாளப்படுத்தப்படுகிறது. அதற்குண்டான குணங்களைக் கொண்டே அடையாளப்படுத்தப்படுகின்றன.
    
அந்த குணங்கள் இல்லாத போது அந்த ஒன்றும் அழிந்து வருகிறது. அந்த ஒன்று அழிந்தால் அந்தக் குணங்களும் இல்லாமல் போய் விடுகின்றன. ஆதிமூலத்திலிருந்து தோன்றிய ஒன்று குணம் மாறி உருமாறி, உருமாறி, குணம் மாறி இவ்வாறு படிப்படியாக பரிணமித்து மனிதன் வரை வந்துள்ளதுதான் பரிணாம வளர்ச்சி. இப்போது மனிதன் என்னவாவான். இப்போது மனிதன் உள்ள நிலையில் என்னவாவான் என்பதை நாம் சாpயாகக் கணிக்க முடியாது. ஏனெனில் இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொன்றும் அதற்குண்டான தனித்துவமான குணங்களோடு தான் அடுத்த மேல்நிலைக்கு வந்து உள்ளன. ஆனால்  மனிதனுக்கு மட்டும் சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. ஏனெனில் அவன் அவனுக்குள்ள தனித்துவத்தோடு இல்லை என்பது மட்டுமல்ல, அனைத்து உயிர்களுடைய பண்புகளையும், உயிரற்றவைகளுடைய பண்புகளையும் தனதாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறான். எனவேதான் ஹோமியோபதியில் மனிதர்களைத் தாவரவகை மனிதர்கள், விலங்குவகை மனிதர்கள், கனிமவகை மனிதர்கள் என்று பிரிக்க முடியும் என்கிறார்கள்.
    
இவ்வாறு மனிதர்கள் மனிதனுக்குண்டான சுயத்தை மறந்து அனைத்தின் சுயங்களைச் சுமந்து திரிவதால்தான் அவனுடைய பரிணாமம் எதை நோக்கிப் போகும் என்று கூறுவதற்கு இல்லை. ஆனால் இதுகாலமும் தோன்றிய மகான்களும், ரிஷிகளும்,சித்தர்களும் மனிதன் கடவுளை நோக்கிப் போய் கடவுளாக முடியும் என்றும் கூறுகிறார்கள். அதாவது ஆதிமூலத்திலிருந்து வந்தவன் ஆதிமூலத்தை அடைய முடியும் என்று கூறுகிறார்கள்.
    
அவ்வாறு ஆதிமூலத்தை அடைவதையே முக்தி, சூனியம், நிர்வாணம் என்று அழைக்கிறார்கள். அந்த ஆதிமூலம் என்பது குணம் அற்றது. குணமற்றதை அடைய குணமற்றதால் முடியும். ஏனெனில் ஒத்ததோடுதான் ஒத்தது சேரும். ஒரு மனிதன் ஆதிமூலத்தில் இணைய வேண்டுமென்றால் அவன் நிர்குணமானவனாக வேண்டும். எப்படி ஒரு மனிதன் குணமற்றவனாக ஆக முடியும்? அவன் குணம்தான் அவன் அடையாளம். அவன் அடையாளத்தை அழிக்க வேண்டும். எப்படி அழிப்பது? இப்படி எத்தனை பேர் இது வரை அழித்தவர்கள்? ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது அவன் குணத்தை அழிக்க முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுகிறது.
    
கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் தம் குணங்களை அழித்து சமாதி அடைந்து நிர்வாணம் அடைந்து, ஆதிமூலத்தோடு கலந்து முக்தி அடைந்தவர்கள் மிகச் சிலரே. நமக்குத் தொpந்த அளவில் புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள் மற்றும் லாவோஸ்சு மற்றும் சிலரே. கோடான கோடி மனிதர்கள் என்ன ஆனார்கள்? இப்படி ஒரு சிலரே முக்தியடைந்து, மற்றனைவரும் பிறவிச் சூழலில் மறுபடியும், மறுபடியும் சிக்கிச் சிரமப்படுவது ஏன்? இவர்கள் இறந்தாலும் அவர்களுடைய குணங்கள் அழிக்கப்படாததால், அந்தக் குணங்கள் அதற்கான வடிவங்களைத் தேடிக் கொள்கின்றன. அவர்கள் இந்தப் பூமியில் ஏதோ ஒரு வடிவத்தில் மறுபடியும் மறுபடியும் பிறந்து கொண்டே இருக்கின்றார்கள்.
     இதை தெய்வப்புலவர் அவர்கள் சிறப்பாகக் கூறுகிறார்.
    
இலர் பலராகிய காரணம் நோற்பர்
      சிலர் பலர் நோலாதவர்”
என்று கூறுகிறார்.
    
அந்த சிலரும் தங்கள் குணங்களை அழிப்பதற்கு பல ஆண்டுகள் கடும் தவம் செய்ய வேண்டியது இருந்தது. ஆம், தவம், யோகம் போன்ற பயிற்சிகள் மூலம்தான் முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. பகவான் புத்தர் அவர்கள் 12 ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவர் படாதபாடு இல்லை. கடைசியில் அனைத்தையும் விட்ட பிறகு ஞானம் பெற்றார். இதே போல பகவான் மகாவீரர் பல வருடங்கள் நிர்வாணமாகத் தவம் செய்துதான் ஞானம் அடைந்தார்.
    
பல ரிஷிகளும், மகான்களும் பல ஆண்டுகள் கடும் தவம் செய்து முடிவில் ஞானம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது ஒன்று புரியாததாக இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றின் வடிவாக்கம். ஆகவே அனைத்துக்குள்ளும் உள்ளதும் அனைத்துக்கு வெளியேயும் உள்ளதும் அந்த ஒன்றுதான் என்பது தொpந்து விட்டது. அந்த ஒன்று பரம்பொருள், பரமாணு அல்லது கடவுள் தன்மை அல்லது இறைமை அல்லது வற்றாயிருப்பு என்று என்ன வேண்டுமென்றாலும் அழைக்கலாம்.
    
இதன் மூலம் எந்த ஒன்றும் தனித்து இருக்க முடியாது என்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று சார்ந்ததுதான் என்பதும் தெளிவாகிறது. இப்படியிருக்க இந்தப்பூமியில் இருந்து கொண்டு இறைநிலையை உணர வேண்டியதுதானே‚ ஏன் பூமியில் இருந்து செல்ல வேண்டும்?
    
பகவான் புத்தர் கூறியது போல் பூவுலக வாழ்வு துன்பமானது. இதை மாற்ற முடியாது. ஆகவே உலகில் பிறந்து துன்பத்தில் உழல்வதைவிட பிறக்காமல் இருப்பதே மேலானது என்று பிறவியற்றுப் போவதற்கே இந்த தவ வாழ்வு. இது ஏன்? மனிதன் மனிதனின் சுயத்தில் இல்லாமல் விலங்கின் சுயத்தில் இருப்பதால்தான். அவனுடையை பிரத்தியேகமான குணத்தில் இல்லாமல் அனைத்து விலங்குகளின் பண்புகளையும் தங்களுடைய பண்புகளாக தருவித்துக் கொண்டு வாழ்வதால் தான்.
    
இந்த உலகில் உள்ள துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் மனிதன் மனிதனுடைய சுயத்தில் இல்லாமல் விலங்குகளின் சுயத்தில் இருப்பதால்தான். ஆகவே அவனில் எண்ணிலா எண்ணங்கள், ஆசை, கோபம், பயம், வஞ்சகம், சூது, தந்திரம், ஆவேசம், அழுக்காறு மற்றும் பல எண்ணங்கள் அவனில் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு விலங்குகளின் பண்பில் மனிதன் வாழ்வதால்தான் அவனுக்கு மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் ஏன் இயற்கைக்கும் கூட துன்பம் ஏற்படுகிறது.
    
ஆகவே துன்பத்திலிருந்து விடுதலை அடைய பிறவியிலிருந்து விடுபட வேண்டும். பிறவியிலிருந்து விடுதலை அடைய குணங்களை அழித்து வடிவத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அதாவது அவனில் உள்ள ஒன்று அனைத்துக்கமான ஒன்றோடு கலந்து விட வேண்டும். அந்த நிலையே முக்தி‚ இதற்காக கடுந்தவம், தியானம், யாகம் என்று பல சாதனைகள், பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இது எத்தனை பேரால் முடியும்? இது ஒரு சிலரைத் தவிர, அதாவது ஏற்கனவே விலங்கினப் பண்புகளில் இருந்து விடுபட்டவர்களால் தான் முடியும். முடிந்தது‚
    
இதிலிருந்து விலங்கினப்பண்பை மனிதன் சுமப்பதுதான் அனைத்துக்கும் காரணம். இப்போது என்ன செய்ய வேண்டும்? மனிதனை ‘நீ மனிதன் உனக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது” என்ற உண்மையை உணர வைக்க வேண்டும். ஆம் மனிதனுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அது அவனுக்கு மட்டும் உரித்தானது. அது அவனை மற்ற எல்லாவற்றிலும் இருந்து வேறுபடுத்தி அவனை ‘நான் மனிதன்” என்று உலகுக்கு உரத்த குரலில் சொல்ல வைத்தது அதுதான், ‘அன்பு” ‘உழைப்பு” ‘பகிர்வு” என்ற குணங்கள், மனிதத்துவம்.
    
ஒவ்வொரு மனிதனும் மனிதத்துவத்தை உணர வேண்டும். உலகில் ஏன ;துன்பம் வருகிறது? உலக வாழ்க்கை ஏன் துறக்க வேண்டும்? இந்த உலகம் இனிமையானது இந்த உலகம் வற்றாத செல்வத்துடன் கூடிய வளமானது. இந்த  உலகில் எத்தனை முறை வாழ்ந்தாலும் திகட்டாது. திரும்ப திரும்ப பிறக்கத்தான்  விருப்பம் வரும். மனிதன் மனிதத்துவத்தில் வாழும் போதே கடவுள் தன்மையை உணரலாம்.
    
அவனின் மனித நிலையிலிருந்து பரிணமித்து அவனை அறியாமல் கடவுள் நிலையை அடையலாம். இல்லை மோட்சம்தான் வேண்டும் முக்திதான் வேண்டும் என்ற அடம் பிடித்தால் அதை அடைவது கூட எளிமையாக இருக்கும் மனிதன் விலங்கினப் பண்போடு இருந்த காலத்தில் செய்த கடும் தவமும் பயிற்சியும் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது. இதைக் கொஞ்சம் சரியாக விளங்குவதற்கு பகவான் வள்ளுவரை நாடினால் நலமாக இருக்கும்.
    
தெய்வப்புலவர், தவம் என்றால் என்ன என்று கூறுகிறார் என்று பார்ப்போம்.
     ‘உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
      அற்றே தவத்திற்குரு”
இங்கே தெய்வப்புலவர் இது காறும் மற்றவர்கள் கூறியது போல் தவம், தியானம் என்பதைக் கூறவில்லை. இதற்கு இராஜ யோகமோ, கர்ம யோகமோ அல்லது பக்தி யோகமோ செய்ய வேண்டியது இல்லை. இந்தப் பயிற்சி எல்லாம் மனிதன் விலங்கினப்பண்போடு இருந்த காலத்தில் அவன் குணங்களை அழிப்பதற்குத் தேவைதான். ஆனால் மனிதன் எப்போது மனிதத்துவத்தை உணர்ந்தவனாகிறானோ அப்போது வள்ளுவர் கூறுவதுதான் சாpயாக இருக்கும்.
    
ஒருவன் எப்போது „உற்ற நோயை நோன்றல்… முடியும். எப்போது அவனிடம் ‘நான்” இல்லையோ அப்போதுதான். அப்போது தான் „உற்ற நோய் நோன்றல்… என்ற நிலைக்கு வர முடியும். அந்த ‘நான்” எப்போது இல்லாமல் போகும்? எப்போது மனிதனுடைய சுயமாகிய ‘அன்பு” அவனிடம் வெளிப்படுகிறதோ அப்போது ‘நான்” இல்லாமல் போகும். ‘நான்” இருந்தால் அவன் இருப்பான். அவன் இருந்தால் அவன் துயர் இருக்கும். அவன் துயர் அழிய வேண்டும் என்றால் நான் அழிய வேண்டும். நான் அழிய வேண்டுமென்றால் அவனில் அன்பு மலர வேண்டும். அன்பு மலர்ந்தவன் ஆண்டவனாக இல்லாமல் வேறு என்னவாக இருப்பான்.
    
இதனால் வள்ளுவப் பெருமான்
     ‘தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
      மண் உயிரெல்லாம் தொழும்”
தானறப்பட்ட மனிதன் தான், மண் உயிர் அனைத்தையும் தன்னுயிராய் பார்ப்பான். உயிர்கள் அனைத்தையும் தன்னுயிராகப் பார்த்த மனிதனால் எப்படி உயிர்களுக்கு உறுகண் செய்ய முடியும்? முடியாது. அப்போது அங்கே மனிதன் தெய்வமல்லவா? இந்த நிலையை மனிதன் அடைவதையே வள்ளுவர் தவநிலை என்று கூறுகிறார். இந்த நிலை அடைந்த மனிதனால் என்னதான் அடைய முடியாது? ‘வேண்டியதை வேண்டியபடி அவனால்தான் பெற முடியும்”
    
இது எப்போது? மனிதன் தன் சுயமாகிய  அன்பை உணரும் போது‚ மனிதன் இந்த உண்மையை வள்ளுவர் காலத்தில் உணரவில்லை. அதனால் தான் அவர், இலர், பலராகிய காரணம் - நோற்பார் சிலர் நோலாதவர் பலர்” என்று கூறினார். அவர் கூற்றுப்படி மனிதத்துவத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே நோற்றவர்களாக கருதப்பட்டார்கள் அவர்கள்தான் மகான்களும், ரிஷிகளும் மற்றவர்கள் எல்லோரும் விலங்கினப் பண்புகளோடு இருந்திருக்கிறார்கள்.
    
வள்ளுவப் பெருமான் தவம் செய்வதற்கான தகுதியே மனித்துவத்தில் மனிதன் வாழ்வதைத்தான் குறிக்கிறார். அவர்களுக்கு மட்டுமே தவம் கை கூடும் என்பதையும் வலியுறுத்துகிறார். அதனால்தான் அவர்
     ‘தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை
      அ‡திலார் மேற்கொள் வது”
என்று கூறுகிறார்.
    
மேலும் எப்போது உழைப்பு என்பது மனிதனின் இயல்பாக மாறுகிறதோ அப்போது ஒவ்வொருவருடைய உழைப்பும் அனைவருக்குமான தாகிறது. அனைவருக்குமான உழைப்பு பலன் கருதாது செய்யும் கருமமாகிறது. பலன் கருதாத கருமமே, குணமில்லாத மனிதனை உருவாக்குகிறது. குணமில்லாத மனிதனே இருப்பு நிலையை உணர முடியும். அதனோடு கலக்க முடியும். அதனால்தான் வள்ளுவர்
     ‘தவம் செய்வார் தம்கருமம் செய்வார் மற்றெல்லாம்
      அவம் செய்வார் ஆசையுள் பட்டு”
என்று கூறுகிறார்.
    
இவ்வாறு உழைத்து உற்பத்தி செய்த பொருள் எல்லாம் மற்றவர்களோடு பகிர்ந்து வாழத்தான் என்பதையும் சுட்டிக் காட்டிக் காட்டுகிறார்.
தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
 வேளாண்மை செய்தற் பொருட்டு”
என்று கூறுகிறார்.
    
மனிதர்கள் மனிதத்துவத்தோடு வாழும் போது யாருக்கு வேளாண்மை செய்வது? உழைக்க இயலாதவர்கள், வயோதிகர்கள், குழந்தைகள், உடல்நலம் இல்லாதவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். ஏன் பகிர்ந்து அளிக்க வேண்டும்? என்பதற்கான காரணத்தையும் கூறுகிறார். இங்கே கொடுப்பவனும் பெறுபவனும் வேறு வேறல்ல. ஒன்றின் அவதாரங்கள். ஒருவனுக்கு கொடுப்பது என்பது தனக்கே கொடுப்பதாகும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
    
மனிதத்துவத்தோடு வாழும் போது மனிதன் அவனுக்கும் மற்றவனுக்கும் உள்ள ஓர்மையை உணர்கிறான். அதை உணராதவன் எவனும் இறந்தவனாகவே கருதப்படுவான்.
     ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
      செத்தாருள் வைக்கப் படும்”
    
இவ்வாறு ஓர்மையை உணர்ந்தவன் தான் கடவுள் தன்மையை உணர்ந்தவன், கடவுளானவன். இதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஒரு மனிதன் மனிதத்துவத்தை உணர்ந்து எப்போது இல்வாழ்க்கை வாழ்கின்றானோ அப்போது அவன் வாழ்க்கை அறவழி வாழும் வாழ்க்கையாகும். அந்த அறவழி வாழ்க்கை வாழ்பவரே இறைவழி வாழும் மனிதராவார். அவரே நோற்பாரை விட உயர்ந்தவராவர்.
    
அவர் கடவுள் நிலையை இயல்பு வாழ்க்கையிலேயே, அவரை அறியாமலே அடைந்தவர். இதிலிருந்து விலங்கினப் பண்புகளோடு வாழ்ந்த மனிதனுக்கு தவம், தியானம், யோகம், யாகம் என்ற பயிற்சிகள் எல்லாம் செய்ய வேண்டியது இருந்தது. அப்படி கடுந்தவம் செய்து ஒரு சிலரே உண்மை நிலையை அறிந்து நிர்வாணமாகி முக்தியடைய முடிந்தது.
    
ஆனால் மனிதன் அவனின் இயல்பாகிய மனிதத்துவத்தை உணரும் போது அவனை அறியாமலேயே மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குச் சென்று விடுவான். ஒரு சிலர் மட்டும் அல்ல, அனைவருமே கடவுள் நிலையை அடையலாம். அப்போது இலர் பலராக மாட்டார். இவ்வுலகில் இல்லாமையே இருக்காது. அனைவரும் மனிதத்துவமாகிய அன்பு, உழைப்பு, பகிர்வு என்று பண்புகளை வெளிப்படுத்தி தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அனைவரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கும் சொர்க்கமாக மாற்றுவார்கள் இந்த பூமியை‚

     ‘அன்பு என்பது உயர்ந்த பண்பன்று
      அன்பு என்பது அத்தியாவசியமானது
      ஆகாரத்தையும் நீரையும் போல
      ஒளியையும் வளியையும் போல
 மனிதனின் இயல்பாக
 அன்பு மாறும் போது
 அப்போது மனிதர்கள் எல்லாம்
 சுதந்திரமாக அவர்களை
 அறியாமலே காற்றை சுவாசித்து
 காற்றை வெளிவிடுவதுபோல
 அன்பை சுவாசித்து
 அன்பை வெளி விடுவார்கள்”
    
ஏனெனில் அன்பு முழுமையானது. அது முழுமைக்கும் ஆனது. 
அதனால் அந்த அன்பே கடவுளின் நியதி. 
அந்த நியதியே மனிதனைக் கடவுளாக்கும்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….