புதன், 31 ஆகஸ்ட், 2016

அக்குபஞ்சரைப் பற்றிச் சற்று விரிவாகப் பேச முடியுமா?


மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை க்கான பட முடிவு

அக்குபஞ்சரைப் பற்றிச் சற்று விரிவாகப் பேச முடியுமா?

அக்குபஞ்சர் முற்றிலும் கிழக்கு சார்ந்தது. அதனால் எந்தக் கிழக்கத்திய விஞ்ஞானத்தையும் நீங்கள் மேற்கத்திய மனதோடு அணுகினால் நீங்கள் பலவற்றை இழப்பீர்கள். உங்கள் முழு அணுகுமுறையும் வித்தியாசமானது. ஒரே பாணியில், நேர்மையாக, பகுப்பாய்ந்தபடி இருக்கும். அந்தக் கிழக்கத்திய விஞ்ஞானங்கள் உண்மையில் விஞ்ஞானமில்லை. அது ஒரு கலை. முழு விஷயமும் நீங்கள் சக்தியை அறிவுஜீவித்தனத்திலிருந்து, உள்ளுணர்விற்கு மாற்ற முடியுமா என்பதை பொறுத்தே இருக்கிறது. நீங்கள் ஆணிலிருந்து பெண்ணாக மாறமுடியுமா என்பதைப் பொறுத்தது. துடிப்பான வேகமாக அணுகுமுறையிலிருந்து சாந்தமான, கேட்பவராக முடியுமா? பிறகுதான் இது வேலை செய்யும். இல்லையென்றாலும் நீங்கள் அக்குபஞ்சரைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அது அக்குபஞ்சராக இருக்காது. நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள். ஆனால் அதை அல்ல. ஆனால் அது ஒரு தந்திரம். ஒரு மேலார்ந்த பார்வை.
இதுதான் பல கிழக்கத்திய விஷயங்களில் நடக்கிறது. மேற்கு ஆசைப்படுகிறது. அது ஆழமானது. மேற்கு கிழக்கத்திய விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் தன் மனத்தைக் கொண்டு வந்து புரிந்து கொள்ளப் பார்க்கிறது. மேற்கத்திய மனம் வந்த அந்தத் தருணத்தில் அதன் அடிப்படையே தகர்ந்து போகிறது. சில துண்டுகள் தான் மிச்சமிருக்கும். ஆந்தத் துண்டுகள் பயன்படாது. ஆனால் அந்த அக்குபஞ்சர் வேலை பயன்படாது. ஆதனால் அந்த அக்குபஞ்சர் வேலை செய்யப் போவதில்லை என்று அர்த்தமாகாது. ஆக்குபஞ்சர் வேலை செய்யும். ஆனால் கிழக்கத்திய அணுகுமுறையில்தான் வேலை செய்யும்.
அதனால் நீ உண்மையில் அக்குபஞ்சர் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதைத் தெரிந்து கொள்வது நல்லது. அதே சமயம் நினைவில் கொள். அது மிகவும் அவசியமானதல்ல. எவ்வளவு தகவல் பெற முடியுமோ கற்றுக் கொள்ளுங்கள். பிறகு எல்லா தகவல்களையும் மறந்துவிட்டு இருட்டில் திரியுங்கள். உங்கள் மயக்க உணர்வை கேளுங்கள். நோயாளியுடன் நல் உறவோடு உணருங்கள். அது வித்யாசமானது.
ஒரு நோயாளி ஒரு மேற்கத்திய மருத்துவரிடம் வந்தால் அந்த மேற்கத்திய மருத்துவர் காரணத்தைப் பார்க்கிறார். சோதிக்கிறார். பகுப்பாய்ந்து பார்க்கிறார். எங்கு நோய் என்று பார்க்கிறார். என்ன நோய் என்று பார்க்கிறார். எது அதை குணப்படுத்தும் என்று பார்க்கிறார். அவர் மனதின் ஒரு பகுதியைப் பயன்படுத்துகிறார். ஆராய்ந்து பார்க்கிற பகுதி. அவர் நோயைத் தாக்குகிறார். அதைக் கைப்பற்றுகிறார். நோய்க்கும் மருத்துவருக்கும் ஒரு சண்டை நடக்கிறது. நோயாளி அந்த ஆட்டத்திற்குள் வரவில்லை. மருத்துவரும் நோயாளியைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர் நோயுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நோயாளி புறக்கணிக்கப்படுகிறான்.
ஆனால் ஓர் அக்குபஞ்சர் மருத்துவரிடம் வந்தால் அவருக்கு நோய் முக்கியமில்லை. நோயாளி முக்கியம். காரணம் நோயாளிதான் நோயை உருவாக்கியிருக்கிறான். காரணம் நோயாளியிடம்தான் உள்ளது. நோய் என்பது ஓர் அறிகுறிதான். நீ அறிகுறியை மாற்றலாம். இன்னொரு அறிகுறி வரும். இந்த நோயை மருந்துகள் மூலமாக எதிர்த்துப் போராடலாம். அதன் வெளிப்படுத்தலைத் தடுக்கலாம். ஆனால் அந்த நோய் இன்னொரு இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. இப்போது மிகவும் ஆபத்தாக, அதிக வலுவுடன், ஒரு பழி உணர்ச்சியோடு, முதல் நோயை விட அடுத்து வருவதை சமாளிப்பது மிகவும் கடினம். அதற்கும் மருந்து கொடுக்கிறீர்கள். பிறகு மூன்றாவது நோய் இன்னும் கடினமாகும்.
இப்படித்தான் அலோபதி புற்றுநோயை உருவாக்கியது. ஒரு புறம் நோயை நீங்கள் விரட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள். அது இன்னொரு இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. நீங்கள் அந்த இடத்தைத் தாக்குகிறீர்கள். நோய்க்கு ரொம்ப ரொம்பக் கோபம் வருகிறது. நீங்கள் நோயாளியை மாற்றுவதில்லை. நோயாளி அப்படியே இருக்கிறார். காரணம் அப்படியே இருக்கிறது. அந்தக் காரணம் காரியத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.
அக்குபஞ்சர் காரணத்தோடு போராடுகிறது. அதன் விளைவுகளைக் கவனிப்பதில்லை. எப்போதுமே காரணத்திற்குப் போக வேண்டும். எப்படி காரணத்திற்குப் போக முடியும்? முகாந்திரம் காரணத்திற்குப் போக முடியாது… முகாந்திரத்திற்குக் காரணம் மிகப்பெரியது. அது விளைவுகளை மட்டுமே சமாளிக்க முடியும். தியானம் மட்டுமே காரணத்திற்குப் போக முடியும். அதனால் அக்குபஞ்சர் நோயாளியை உணருவார். அவர் தன் ஞானத்தை மறப்பார். அவர் நோயாளியுடன் இணைந்து போகவே முயற்சி செய்வார். அவருடன் ஒத்துப்போவார். நோயாளியுடன் ஒரு பாலம் அமைத்துக் கொள்வார். நோயாளியின் நோயை தன் உடலால் உணர்ந்து பார்ப்பார். தன்னுடைய சக்தியில், அதுதான் உணர்வால் காரணத்தைக் கண்டறியும் வழி. ஏனெனில் காரணம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அவரே ஒரு கண்ணாடி ஆவார். தன்னிடமே அந்தப் பிம்பத்தைப் பார்ப்பார்.
இதுதான் அதன் முழு செயல்பாடு. இதைச் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். காரணம் அதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் அதற்குள் போவது நல்லது. அதனால் என்னுடைய யோசனை முதலில் இரண்டு வருடங்களாவது மேற்கில் படியுங்கள். பிறகு ஆறுமாத காலமாவது தொலை கிழக்கு நாடுகளுக்குச் சென்று அக்குபஞ்சர் நிபுணருடன் இருங்கள். அவருடைய பார்வையில் இருங்கள். அவர் வேலை செய்யும்போது கவனியுங்கள். அவருடைய சக்தியை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களால் ஏதாவது செய்ய முடியும். இல்லையென்றால் அது மிகவும் கடினம்.
மௌ்ள மௌ்ள உன் சுய சக்தியையோ, அல்லது அது உன் மீது வேலை செய்வதையோ உணரத் துவங்கினால், அக்குபஞ்சர் என்பது ஒரு தொழில்நுட்பமாகத் தெரியாது. அது ஒரு கருவியாகவே இருக்கும். நீ அந்தத் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் அது உனக்கு ஒன்றும் செய்யாது. அது ஒரு கலை என்பதைவிட அது உன்னிடமுள்ள கூடுதல் படைப்பாகவே இருக்கும். புராதன தொழில்நுட்பத்தில் இதுதான் மிகவும் கடினமான விஷயம். அது விஞ்ஞான பூர்வமானதல்ல. அதை ஒரு விஞ்ஞான பூர்வமான பார்வையில் கவனித்தால், அதைப் பற்றிய விஷயங்கள் லேசாகத் தெரிய வரும். ஆனாலும் ஏதோ ஒரு பெரிய பகுதி தெரியாமலே இருக்கும். பிறகு நீ என்ன தெரிந்து கொண்டாலுமே அதிகம் தெரிந்ததாகவே இருக்காது. அதுவே உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கத் துவங்கி விடும்.
முழு புராதன அணுகுமுறையே முற்றிலும் மாறுபட்டது. அது தர்க்கரீதியானதல்ல. அது பெண்மை சார்ந்தது. உள்ளுணர்வு சார்ந்த, தர்க்கமற்றது. விஞ்ஞான மனதைப் போல் அதை ஒரு வாதமுள்ள முறையாக அதை யாருமே நினைக்கவில்லை. இருத்தலோடு ஆழ்ந்த கலப்பில் ஈடுபட்டு ஒரு கனவுலகத்தில் அதுவும் பகற்கனவிலிருந்து இயற்கை தன்னுடைய ரகசியங்களையும் மர்மங்களையும் வெளிக்காட்ட வேண்டுமென்று நினைப்பார்கள். அது இயற்கை மீதான வற்புறுத்தலல்ல. முக்கியமாக அதை இணங்க வைப்பது. அந்த அணுகுமுறையும் உள்ளார்ந்தது.
ஒருவர் தன் உடலை உள்ளார்ந்த மையத்திலிருந்து அணுகவேண்டும். புற வழியாக நமக்கு இந்த எழுநூறு மையங்கள் தெரியவில்லை. அது ஆழ்ந்த தியானத்தின் மூலம் கிடைத்தது. ஒருவர் ஆழ்ந்து உள்ளே போனால், அங்கிருந்து பார்த்தால் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும். இந்த அக்குபஞ்சர் புள்ளிகள் சூழ்ந்திருப்பதைப் பார்க்க முடியும். ஏதோ இரவு முழவதும் நட்சத்திரங்கள் அள்ளிக் கொண்டதைப் போல. இந்தச் சக்திப் புள்ளிகளைப் பார்த்து விட்டால் பிறகு தான் நீங்கள் தயார். இப்போது உள்ளார்ந்த ஈர்ப்பு உங்களுக்கு இருக்கிறது. இன்னொருவரின் உடலைத் தொட்டவுடனேயே எங்கெல்லாம் உடல் சக்தி இல்லை; எங்கே இருக்கிறது என்பதை உணரமுடியும். எங்கே நகருகிறது, எங்கே இல்லை, எங்கு குளிர்ச்சி, எங்கே சூடு?, எங்கு உயிரோட்டம், எங்கு இறந்திருக்கிறது என்பது தெரியும். சில புள்ளிகளில் அது அசையும், சில புள்ளிகளில் அப்படியே இருக்கும்.
உங்களுக்கு உங்களை எவ்வளவு தெரியுமோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் அக்குபஞ்சரைத் தெரிந்து கொள்ள முடியும். இரண்டும் கலக்கும்போது ஒரு பெரிய ஒளி கிடைக்கும். அந்த ஒளியில் நீங்கள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். உங்களைப் பற்றி மட்டுமல்ல. அடுத்தவர் உடலையும் கூட. மூன்றாவது கண் திறக்கும்போது ஒரு புதிய பார்வை கிடைக்கும்.
அக்குபஞ்சர் ஒரு விஞ்ஞானமல்ல. அது ஒரு கலை. ஒவ்வொரு கலையும் நீ முழுமையாக சரண் அடையவேண்டுமென்று எதிர்பார்க்கும். மற்ற தொழில்நுட்பத்தைப் போல அந்த தொழில்நுட்பக் கலைஞன் தன் இஸ்டத்திற்கு அதை வளைக்க முடியாது. அதற்கு உன் முழு இதயம் தேவை. ஓர் ஓவியன் தன் ஓவியத்தில் தன்னை மறப்பதைப் போல, ஒரு கவிஞன் தன் இசையில் தன்னைக் கரைத்துக் கொள்வதைப் போல. அதுபோல்தான் இதுவும். ஒரு தொழில்நுட்பக் கலைஞன் அக்குபஞ்சரைக் கற்றுக் கொள்ளலாம். அதற்குத் தேவையானவற்றை சரியாக செய்ய முடியாது. அவன் அதுவாக இருக்க முடியாது. அவன் சிலருக்கு உதவலாம். ஆனால் அது ஒரு பெரிய கலை. ஒரு பெரிய திறன். அதை அப்படியே உறிஞ்ச வேண்டும். அதன் ரகசியமே சரணாகதிதான். அதனுள் உங்களால் முழவதுமாக சரணடைய முடிந்தால், அது ஒரு பக்தியாக, அர்ப்பணமாக மாறுகிறது. அதுவாக ஆகலாம். அதற்குள் போகலாம். முழு மனதோடு உற்சாகமாக.
நீங்கள் சுயமாக இருக்க முயலுங்கள். நீங்களே ஒரு தந்திரத்தைக் கையாளவேண்டும். அக்குபஞ்சர் என்பது ஒரு தந்திரம், ஒரு கலை. ஒரு விதியைப் போல யாரையும் பின்பற்றத் தேவையில்லை. இதற்கு யாருமே கிடையாது. இதற்கு விதிமுறைகள் கிடையாது. ஓர் உள்பார்வை கிடையாது. நீங்களாக வேலை செய்ய ஆரம்பியுங்கள். முதலில் சிறிது அவநம்பிக்கை ஏற்படும். நீங்கள் சரியாக செய்கிறீர்களா, இல்லையா என்கிற அவநம்பிக்கை ஏற்படும். ஆனால் அப்படித்தான் ஒருவர் துவங்க வேண்டும். அது ஒரு தேடுதல். விரைவாகவோ தாமதமாகவோ நீங்கள் கதவைக் கண்டுபிடிப்பீர்கள். ஒரு முறை கதவைக் கண்டுபிடித்து விட்டால் போதும்; பிறகு தேடுதல் குறையத் துவங்கும். பிறகு உங ;களுக்குக் கதவு தெரியும். அதனால் வேலையைத் துவக்குங்கள்.
நீங்கள் யாருடைய உடலையாவது தொடும்போது அல்லது ஓர் ஊசியால் வேலை செய்யும்போது, நீங்கள் கடவுளின் பெயரால் வேலை செய்கிறீர்கள். ஒரு தயக்கத்தோடு, மரியாதையோடு இருக்க வேண்டும். அங்கே புத்தியோடு வேலை செய்யக்கூடாது. ஒரு காதலோடு செய்ய வேண்டும். புத்தி தேவையான அளவு இல்லை. அது போதாது. அதனால் அந்த நபருக்காகக் கவலைப்படுங்கள். எப்போது நிறைவாக உணருங்கள். காரணம் புத்தி என்பது ஓர் அளவானது. இன்னொரு நபரோ முழு உலகம். ஏறக்குறைய முடிவற்ற நிலை. மக்கள் உங்களைத் தொடுகிறார்கள். ஆனால் உங்களைத் தொடுவதில்லை. அவர்கள் வெளியேதான் தொடுகிறார்கள். நீங்கள் எங்கோ ஆழத்தில் ஒரு மையத்தில் இருக்கிறீர்கள். அன்பைத் தவிர வேறு எதுவுமே நுழைய முடியாது. மனிதன் ஒரு மர்மம். அவன் எப்போதுமே மர்மமாகத்தான் இருக்கப் போகிறான். அந்த மர்மம் என்பது ஒரு விபத்தாக ஏற்பட்டதில்லை. அவனுடைய இருத்தலே மர்மம்தான்.
மனோவசியம் அதாவது ஹிப்னாடிஸம் தியானமாக மாறுவதைப் பற்றி பேசமுடியுமா? சிகிச்சைக்கும் தியானத்திற்குமிடையே இருந்த மெல்லிய கோடு மறைந்து வருவதைப் பார்க்கிறேன்.
அப்படி ஒரு காலம் இருந்தது. தியானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நுழைவாயிலாக மனோவசியம் கருதப்பட்டது. ஆனால் மத்திய காலத்தில் கிறிஸத்துவம் மனோவசியத்தை சூன்யக் கலையாக நினைத்து ஒதுக்கி விட்டது. அந்தத் தீணடாமை இன்றும் தொடர்கிறது. கிறித்துவர்கள் அல்லாதவர்கள் மனதிலும் அது தங்கிவிட்டது. அது கிறித்துவ யோசனை என்பது தெரியாமலேயே அதில் ஈடுபட்டு விட்டார்கள். ஏன் கிறித்துவம் வசியத்திற்கு எதிராக இருந்தது? உங்களுக்கு வியப்பாகவே இருக்கும். அது மனோவசியத்திற்கு எதிராக இருந்ததற்குக் காரணமே அது தியானத்திற்கு நேரடியாக அழைத்து செல்கிறது என்பதனால்தான். பூசாரி தேவையில்லை. தேவாலயங்கள் தேவையில்லை. ஏன் கடவுளே கூட தேவையில்லை. அதுதான் பிரச்னை.
உலகத்தில் தியானம் வெற்றி பெற்றால் பிறகு எந்த மதமும் இருக்கப் போவதில்லை. தேவையேயில்லை. அது ஒரு சாதாரண காரணம்தான். நீங்கள் இருத்தலோடு நேரடி தொடர்பில் இருக்கப் போகிறீர்கள். எதற்காகத் தரகர்கள்? அல்லது தூதுவர்கள் எதற்கு? அவர்களுக்கு அவர்களுடைய ஞானத்தைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. வருடக் கணக்கில் அவர்கள் அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களை தூண்டி, நண்பர்களைத் தூண்டிக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எதுவுமே செய்யவில்லை. அவர்கள் செய்வது எதுவுமே மதம் சார்ந்தது அல்ல. அவர்கள் செய்ததெல்லாமே எண்ணிக்கை அரசியல்தான். உங்களுடைய பொறுப்பில் எத்தனை எண்ணிக்கை சேர்கிறது என்பதை வைத்து உங்கள் பலத்தை உங்கள் அதிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மனோவசியம் பூசாரிகளுக்கு எதிராக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே கிறித்துவம் முழுக்க பாதிரியார்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறது. தான் புத்துணர்வு பெற்றதாக யேசுநாதர் எப்போதுமே சொன்னதில்லை. அல்லது அவருக்குப் பிறகு வந்த எந்த கிறித்துவருமே தான் புத்துணர்வு பெற்றதாக சொல்லவில்லை. அவர் ஏதோ முட்டாள்த்தனமாக தான் கடவுளின் ஒரே பிள்ளை என்று அறிவித்தார். கடவுள் என்பது ஒரு குறியீடு. அது இந்தியர்களைப் போல பிள்ளை பெற்றுப் போட்டுக்கொண்டே இருக்காது. குறியீடு என்பது மலடு, அவை எதையுமே உருவாக்காது.
இருத்தலோடு நீங்கள் நேரடி தொடர்பு கொள்வதை கிறித்துவம் விரும்பவில்லை. நீங்கள் ஒரு பாதிரியார் வழியாக, ஒரு போப், ஒரு மகான், பிறகுதான் கடவுள். நடுவில் ஏகப்பட்ட இடைத்தரகர்கள். யார் பொய் சொல்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. காரணம் உங்களுக்குக் கடவுளிடம் நேரடி இணைப்பில்லை. பாதிரியாருக்குப் போப்பிடம் தொடர்பு, போப்பிற்கு இயேசுவுடன் நேரடி இணைப்பு. இயேசுவிற்குக் கடவுளுடன் நேரடி தொடர்பு. அந்தத் தொடர்பின் தொலைபேசி எண்கள் எந்தத் தொலைபேசி அகராதியிலும் இருக்காது.
மனோவசியம்தான் கதவு. எப்போதுமே அதுதான் தியானத்திற்கான கதவு. ஒரு முறை ஒருவன் அந்த தியானம் என்கிற உலகத்தில் நுழைந்துவிட்டால், அவனுக்கு அப்படி ஒரு தெளிவு. அப்படி ஒரு சக்தி. அவனுக்கு ஒரு புதிய வாழ்க்கை எழும். அதற்குப் பிறகு அவனுக்கு சொர்க்கத்தில் எந்தத் தகப்பனும் தேவையில்லை. அதற்குப் பிறகு அவனுக்காகப் பிரார்த்தனை செய்ய எந்தப் பாதிரியாரும் தேவையில்லை. அவனே ஒரு பிரார்த்தனை ஆகிறான். எந்தக் கடவுளிடமும் பிரார்த்தனை இல்லை. வெறும் எளிமையான ஒரு பிரார்த்தனைத்தனம். முழுமைக்கு ஒரு நன்றி செலுத்துதல்.
மனோவசியத்தைத் தூக்கி எறிய வேண்டிய அவசியம் கிறித்துவத்திற்கு இருந்தது. அது சாத்தானால் உருவானதாகச் சொல்லித் தூக்கி எறிய வேண்டியிருந்தது. இதே காரணத்திற்காகத்தான் சூன்ய கலையும் அழிக்கப்பட்டது. இந்தக் காரியத்தை செய்து கொண்டிருந்ததற்காகப் பல லட்சம் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். அவர்கள் உயர்ந்த பீடத்தை தேவாலயங்களின் தொடர்பில்லாமல் நேரடியாக தொடர்பு கொள்ள முயன்றார்கள்.
தியானத்திற்கு செய்கிற சேவையாக செய்யாவிட்டால் வசியத்தைக் கூட ஆபத்தானதாகப் பயன்படுத்தலாம். மனோவசியம் என்றால் என்னவென்று நான் உங்களுக்கு விளக்குகிறேன். பிறகு அதை தியானத்தின் சேவையாகப் பயன்படுத்தாவிட்டால் அதை எப்படி துஸ்பிரயோகம் செய்யலாம் என்பதையும் சொல்கிறேன்.
மனோவசியம் என்பதன் சரியான அர்த்தமே உங்களைக் கட்டாயத் தூக்கத்தில் ஆழ்த்துவதுதான். முப்பத்து மூன்று சதவிகிதம், அதாவது மனித இனத்தில் மூன்றில் ஒரு பங்கினர் மனோவசியத்தின் ஆழ்ந்த படிவத்திற்குப் போகிற சாத்தியம் இருக்கிறது. இது ஒரு வினோதமான எண்ணிக்கை. முப்பத்து மூன்று சதவிகிதம். காரணம் முப்பத்து மூன்று சதவிகித மக்களுக்கு மட்டுமே ஆன்மிக உணர்வு இருக்கிறது. முப்பத்து மூன்று சதவிகிதத்தினருக்கு மட்டும்தான் உணர்ச்சி இருக்கிறது. முப்பத்து மூன்று சதவிகிதத்தினருக்கு மட்டும் நட்புணர்வு இருக்கிறது. முப்பத்து மூன்று சதவிகிதத்தினர் மட்டுமே படைப்பாளிகள். என்னுடைய சொந்த அனுபவத்தில் இந்த முப்பத்து மூன்று சதவிகிதத்தினரும் ஒரே மாதிரியானவர்கள். காரணம் படைப்பும், உணர்ச்சியும்தான் தியானம். அதுதான் அன்பு. அதுதான் நட்புணர்வு. இதற்கெல்லாம் அடிப்படையில் ஒன்று தேவை. தன் மீதே ஓர் ஆழ்ந்த நம்பிக்கை. அந்த இருத்தலில், வாங்கும் தன்மையில், இதயத்தைத் திறக்கிற நிலை.
மனோவசியத்தை இரண்டு வழிகளில் உருவாக்கலாம். முதல் வழி காரணமாக மக்கள் இது ஆபத்தானது என்னும் கிறிஸ்துவ பிரசாரத்தை நம்புகிறார்கள். இது பன்முக மனோவசியம். யாரோ உங்களை வசியப்படுத்துகிறார். ஒரு மனோவசியக்காரர் உங்களை மனோவசியப்படுத்துகிறார்… பல தவறான யோசனைகள் இதில் இருக்கின்றன. அதில் அடிப்படையானது வசியத்தால் உங்களை மனோவசியப்படுத்த முடியும் என்பது. இது முழு தவறு. மனோவசியக்காரரிடம் அந்தத் தொழில்நுட்பம் இருக்கிறது; சக்தி கிடையாது.
உங்களுக்கு எதிராக உங்களை யாருமே மனோவசியப்படுத்த முடியாது. நீங்களாக விரும்பினால்தான் நடக்கும். உங்களுக்குத் தெரியாத இடத்திற்கு, தெரியாத இருட்டிற்குப் போகத் தயாராக இருந்தால் மட்டுமே ஒரு மனோவசியக்காரரால் உங்களை மனோவசியப்படுத்த முடியும். ஆனால் உண்மையில் இந்த வசியக்காரர்கள் தங்களுக்கு இந்த சக்தி உண்டு என்பதை மறுப்பதில்லை. அதற்கு மாறாக, மனோவசியப்படுத்துகிற சக்தி தங்களிடம் உண்டு என்றே சொல்வார்கள். உங்களை மனோவசியப்படுத்துகிற சக்தி யாரிடமும் கிடையாது. உங்களிடம் மட்டுமே உங்களை மனோவசியப்படுத்திக் கொள்கிற சக்தி உண்டு. அல்லது யாராவது உங்களை மனோவசியப்படுத்த வைக்க முடியும். அந்த சக்தி உங்களுடையது. ஆனால் மற்றவர்கள் உங்களை மனோவசியப்படுத்தும்போது அதைத் துஸ்;பிரயோகம் செய்ய முடியும்.
அந்த முயற்சி, அந்தத் திறன், மிக எளிமையானது. மனோவசியக்காரர் ஒரு ஸ்படிகத்தைக் கயிற்றில் கட்டி உங்களுக்கு எதிராகத் தொங்கவிடுவார். பிறகு சொல்வார், “உங்களால் திறக்க முடியாது என்கிற நிலை வரும்வரையில் உங்கள் கண்களை மூடாதீர்கள். மூடாமல் இருக்க போராடுங்கள், முடிகிறவரையில் கண்களைத் திறந்தே வைத்திருங்கள்.” அந்த ஸ்படிகம் உங்கள் கண்களில் மின்னும். கண்கள் வற்றிப் போகாமல் இருக்க நீங்கள் கண்களை இமைக்க வேண்டியிருக்கும். அதுதான் உங்கள் உடலிலேயே மென்மையான பகுதி. ஒரு கார் கண்ணாடியில் உள்ள நீர் துடைப்பானைப் போலத் தானாக உங்கள் கண் இமைகள் வேலை செய்கின்றன. அது கண்களில் நீரை வரவழைக்கிறது. அதுதான் உங்கள் கண்களிலுள்ள தூசியைத் துடைக்கிறது. எதுவும் உள்ளே போகாமல் தடுக்கிறது. அது கண்களைப் புத்துணர்ச்சியோடு எப்போது நீர்மயமாக இருக்கிறது.
மனோவசியக்காரர் சொல்கிறார், ‘கண்களை இமைக்காதீர்கள். பளபளக்கிற ஒன்றைப் பார்த்துக் கொண்டேயிருங்கள்.’ அது மின்னும் காரணம் மின்னுகிற எதுவுமே உங்கள் கண்களை சோம்பச் செய்யும். உங்கள் தலைக்கு மேலே தொங்குகிற சக்தி வாய்ந்த ஒரு மின்சார விளக்கைப் பார்க்கச் சொன்னால், நிச்சயமாக உங்கள் கண்கள் சோர்ந்துதான் போகும். அவையாக மூடுகிற வரையில் நீங்களாகக் கண்களை மூடாதீர்கள் என்று சொல்லப்படுகிறீர்கள்.
இது ஒரு பகுதி. இன்னொரு பகுதி மனோவசியக்காரர் உங்கள் கண்கள் கனமாகின்றன, உங்கள் இமைகள் சோர்ந்து போகின்றன என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார். உங்கள் பக்கத்தில் இருந்து கொண்டே தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார். அதாவது உங்கள் கண்கள் சோர்வதாக இமைகள் மூட நினைப்பதாக. ஆனால் உங்களுக்கு அதற்கு எதிரான உத்தரவுகள் முடிகிறவரையில் போராடுங்கள். ஆனால் எவ்வளவு நேரம்தான் நீங்கள் போராட முடியும்? அதிகபட்சம் மூன்று நிமிடங்களுக்கு மேல் முடியாது. காரணம் இரண்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு விளக்கை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை உங்கள் கண்களை சோம்பச் செய்கிறது. வசியக்காரரோ கிளிப்பிள்ளையைப் போல சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். ஒரு தூக்கக் கலக்கக் குரலோடு. அதாவது தூக்கம் உங்கள் கண்களைத் தழுவுவதாக சொல்கிறார். உங்களால் தடுக்க முடியாது. உங்களால் கண்களைத் திறந்து வைக்கிற சாத்தியமேயில்லை.
கூடவே இந்த யோசனைகள். அந்த நபர் போராடுகிறார். அவருக்கு அவருடைய கண்கள் சோர்வடைவது தெரிகிறது. கண் இமைகள் கனக்கிறது. ஒரு பாரம். மூன்று நிமிடத்திற்குள் ஒரு கட்டம் வருகிறது, அதற்கு மேலில்லை. அவரால் போராட முடியாமல் கண்களை மூடுகிற உந்துதலை உதற முடியவில்லை. கண்கள் மூடியவுடன் அந்த மனிதர் அந்த மனிதர் சொன்னதையே சொல்கிறார். “உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருகிறது. உங்களால் என் குரலை மட்டும்தான் கேட்க முடிகிறது. வேறு எதுவுமில்லை. நான் ஒருவன் மட்டும்தான் உங்களுக்கு இப்போதுள்ள ஒரே தொடர்பு.”
அந்த நபர் இன்னும் ஆழ்ந்து ஆழ்ந்து தூங்கப் போகிறார், தொடர் யோசனைகளோடு. ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு எதுவுமே கேட்கவில்லை. அவருடைய தூக்கக் கலக்கக் குரல்தான் சொல்கிறது. ‘நீங்கள் ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து…’ பிறகு நீங்கள் ஆழத்திற்குப் போய் விட்டீர்களா என்பதை சோதிப்பார். உங்கள் கைகளில் ஓர் ஊசியைக் குத்திப் பார்ப்பார். நீங்கள் தூங்கி விட்டீர்கள். அதனால் உங்களுக்கு அது தெரியவில்லை…
உண்மையில் சோவியத் ரஸ்யாவில், அவர்கள் பன்முக மனோவசியம் துவங்கி அதன் மூலம் அறுவை சிகிச்சை கூட நடக்கிறது. மயக்க மருந்தே தேவையில்லை. சரியான சூழல் ஏற்பட்டால் ஒருவர் ஆழமாகப் போக முடியும். ஒரு தூக்கச் சூழல், அரையிருட்டு, இருட்டுமில்லை வெளிச்சமுமில்லை. அதே சமயம் மின்னுகிற கட்டாயமாக்கப்பட்ட ஒரு மின்னல் உங்கள் கண்கள் மீது செலுத்தப்படுகிறது. அறையில் ஒரு மெல்லிய இசை. அற்புதமான மணம். இவையெல்லாம் அவர் ஆழ்ந்த தூக்கத்திற்குப் போக உதவுகின்றன. சிகிச்சை அப்போது நடக்கிறது. நடந்திருக்கிறது. அந்த நபருக்கு ஒன்றுமே தெரியாது.
அதனால் மனோவசியக்காரர் சில விஷயங்களை முயல்கிறார். அவர் உங்கள் கைகளை உயர்த்தித் தடாலென்று கீழே போடுகிறார். பிடித்தமில்லாததால் கை கீழே விழுகிறது. நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறீர்கள். தூக்கத்தில் உங்களால் கைகளை உயர வைக்க முடியவில்லை. அவர் உங்கள் கண் இமைகளைத் திறக்கிறார். அவர் உங்கள் கண்களைப் பார்க்கிறார். அதில் வெண்மை மட்டுமே தெரிகிறது. பாவை இரண்டும் மேலே செருகியிருக்கின்றன.
ஆழ்ந்து நீங்கள் வசியப்படும்போது மேலே பாவைகள் உயரப் போகும். இது தினப்படி தூக்கத்தில் கூட நடக்கும். யாராவது இறந்து போனால் கூட இப்படி நடக்கும். அதனால்தான் உலகம் முழுவதும் ஒருவர் இறந்து போனால் உடனே இறந்த மனிதரின் கண் இமைகளை மூடிவிடுவார்கள். இதற்கு சின்ன காரணம் முழு வெள்ளைக் கண்களோடு ஒருவரைப் பார்த்தால் பயமாக இருக்கும். இந்தியாவில் இது பல நூற்றாண்டுகளாக தெரிந்த விஷயம்தான். ஒருவர் இறக்கிற தருவாயில் அவர் கண்கள் மேலே செருகும். அதன் அறிகுறி, அடையாளம் என்னவென்றால் அவரால் அவரது மூக்கின் நுனியைக் கூட பார்க்க முடியாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் மூக்கை நீங்கள் பார்க்க முடியாது. காரணம் கண்களில் பாவைகள் மேல் நோக்கி நகரும். அவற்றால் மூக்கின் நுனியைக் கூடப் பார்க்க முடியாது. அதிக பட்சம் ஆறு மாதங்கள்…
அதனால் மனோவசியக்காரர் கண் இமைகளைத் திறக்கிறார். அங்கே கீழே வெள்ளையாக இருக்கிறதா என்று பார்க்கிறார். அதுவரையில் அங்கிருந்தது, அதாவது பாவை, மேலே போய்விட்டதா என்று பார்க்கிறார். அதற்கு பிறகு இனி நீங்கள் யார் பேசுவதையும் கேட்க முடியாது என்று உறுதிப்படுத்திக் கொள்கிறார். இனிமேல் அவர் சொல்வதை நீங்கள் தட்ட முடியாது. அவர் என்ன சொன்னாலும் நீங்கள் செய்வீர்கள். இது ஆபத்தானது. அவர் உங்களிடம் சொல்லலாம். “உங்களிடமுள்ள பணத்தையெல்லாம் என்னிடம் கொடுங்கள்.” உடனே நீங்களும் உங்களிடமுள்ள பணத்தையெல்லாம் எடுத்து அவர் கையில் ஒப்படைப்பீர்கள். அவர் உங்கள் ஆபரணங்களை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதாவது ஒரு பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லலாம். அது உங்களைச் சிக்கலில் கொண்டு போய்விடலாம். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் வீட்டை விற்று விட்டீர்கள் அல்லது உங்கள் வீட்டை நன்கொடையாகக் கொடுத்து விட்டீர்கள்.
இதில் இன்னொரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. அவர் மனோவசியம் முடிந்ததும் ஒரு யோசனை சொல்லலாம். முடிந்ததும் சொல்கிற யோசனை என்னவென்றால் அவர் சொல்லலாம், “அடுத்த பத்து நாட்கள் கழித்து நீங்கள் என்னிடம் வருவீர்கள். நீங்கள் வந்துதான் ஆகவேண்டும். உங்கள் எல்லாப் பணத்தையும், ஆபரணங்களையும், மதிப்புள்ளது எதை நீங்கள் வைத்திருந்தாலும் கொண்டு வந்து என் மேஜையில் வைத்து விட்டுப் போங்கள்.” இதன் மூலமாக இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. இருபத்து நாலு மணி நேரம் கழித்து நீங்கள் யாரையாவது சுட்டு விட முடியும். இந்த உத்தரவுகளெல்லாமே நிறைவேறும். காரணம் நடப்பது எதுவுமே அந்த நபருக்குத் தெரியாது. அவரது உணர்வைப் பொறுத்த வரையில், அந்த ஆழ்ந்த மனோவசியத்தில் என்ன நடந்தது என்பதே தெரியாது. ஆழ்ந்த மனோவசியம் உங்கள் மயக்க நிலையைத் தொடுகிறது.
இந்த ஆபத்துகளைத்தான் கிறித்துவம் மிகைப்படுத்தியது. அது ஒழுக்கத்திற்கும், மதத்திற்கும் எதிரானது என்றார்கள். ஒரு பெண்ணை கற்பழித்து விடலாம். ஆனால் அவருக்கே தெரியாது. அல்லது ஒரு பெண்ணிடம் சொல்லலாம் ‘நீ என்மேல் காதல் கொண்டு விட்டாய்’ என்று. அந்தத் தருணத்திலிருந்து அவள் விழித்தவுடன் ஒரு பெரிய காதல் உருவாகும். அவள் சற்றுத் தயங்குவாள். காரணம் அவளுடைய விழிப்படைந்த மனதிற்கு என்ன நடந்தது என்பதே புரியாது. ஆனால் அவளுடைய விழிப்படைந்த மனதிற்கும், தொடர்பில்லை. மயக்கம் அதிக சக்தி வாய்ந்தது. ஒன்பது மடங்கு அதிக சக்தி கொண்டது. பிறகு அந்த மயக்கம் ஏதாவது செய்யத் துவங்கும்போது, விழிப்படைந்த மனம் அதை எதிர்க்கும், ஆனால் அது வீண் முயற்சி.
இவையெல்லாம் பரவி, வேகமாக மனிதர்களிடம் மிகைப்படுத்தப்பட்டது. ஆனால் தேவாலயங்களின் நோக்கம் உங்களை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அல்ல. அதன் நோக்கமே மனோவசியத்தைத் தூக்கி எறிய வேண்டும். அதனால் அந்தக் கதவின் வழியாக உச்சகட்ட நிலையான தியானத்திற்குப் போகமாட்டார்கள்.
கிறித்துவம் இன்னொரு விதமான மனோவசியத்தை முழுக்க மக்களுக்குத் தெரியாமலே செய்துவிட்டது. அதுதான் சுயமனோவசியம். அது பன்முக மனோவசியமல்ல. பன்முக மனோவசியத்தை மட்டும்தான் தவறாகப் பயன்படுத்த முடியும். தானாக, அல்லது சுய வசியத்தைத் தவறாகப் பயன்படுத்த முடியாது… அதில் யாருமே கிடையாது. நீங்கள் மட்டும்தான். இதை நீங்களே உங்களுக்கு செய்து கொள்ள முடியும். நீங்களே ஓர் அறிவிப்புக் கடிகாரத்தைப் போட்டுக் கொள்ளலாம். அதையே மூன்று முறை சொல்லுங்கள். அதுவும் பதினைந்து நிமிடத்திற்குள். அந்த அறிவிப்பு மணி ஓய்ந்தவுடன் நீங்கள் உங்கள் ஆழ்ந்த மனோவசியத் தூக்கத்திலிருந்து எழுவீர்கள். அதற்குப் பிறகு அதுதான் நடைமுறை.
நீங்கள் விளக்கைப் பாருங்கள். அந்த பன்முக மனோவசியக்காரர் என்ன செய்தாரோ அதையே செய்யுங்கள். விளக்கைப் பார்த்தபடி நீங்களே மீண்டும் மீண்டும் சொல்லுங்கள், ‘என் கண்கள் கனமாகிக் கொண்டிருக்கிறது கனமாக கனமாக… இன்னும் கனமாக, இன்னும் கனமாக, எனக்குத் தூக்கம் வருகிறது. என் கண்களை இனிமேலும் திறந்து வைத்திருக்க முடியாது. என்னால் முடிந்தவரையில் முயலுகிறேன். ஆனால் இனிமேலும் சாத்தியமில்லை.’ இது எல்லாமே மூன்று நிமிடங்கள்தான் பிடிக்கும். எவ்வளவு அதிகமாகப் போராடுகிறீர்களோ, அந்த அளவிற்கு நீங்கள் மனோவசியத்தில் ஆழ்ந்து போவீர்கள்.
நான் ஒரு மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். வயதான மனிதர். தன் குடும்பத்தைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். தினமும் தனக்கு எத்தனை நோய்கள் வந்திருக்கின்றன என்று கணக்கெடுத்துக் கொண்டிருப்பார். மருத்துவர்களும் சோர்ந்து விட்டார்கள். அவருக்கு நோயே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் மருத்துவ நிகழ்ச்சிகளைப் பார்த்து நோய்களின் பெயர்களைத் தெரிந்து கொள்வார். பிறகு தன் குடும்பத்தினரை வதைக்க ஆரம்பித்தார். “நான் இந்த நோயால் அவதிப்படுகிறேன். என்னை யாருமே கவனிப்பதில்லை.” இது வயதானவர்கள் மற்றவர்களின் கவனத்தைக் கவருவதற்கு செய்யும் வழி. வயதானவர்களை யாருமே கவனிப்பதில்லை. அதனால் அதற்கு அவர்களே ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கு எரிச்சல் வரும். அதிக கோபம், அதிக சிடுசிடுப்பு. மற்றவர்களைக் கவர அவர்களே, இப்படி புதிய தந்திரங்களை உருவாக்குவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதும் அவர்களை கவனித்து போஷாக்காக வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது யாருமே கவனிப்பதில்லை. அவர்கள் இருக்கிறார்களா செத்தார்களா என்பதைப் பற்றிக் கூட யாரும் கவலைப்படவில்லை.
என்னை நேசிக்கிற இந்தியப் பாடகர் ஜெகஜத் சிங். ஒரு நல்ல நகைச்சுவையைச் சொன்னார். லண்டலின் வசிக்கிற ஒரு நண்பர் வந்திருக்கிறார். அவரிடம், “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.
அவர் சொன்னார், “பரவாயில்லை”.
ஜெகஜித் சிங், “உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்?”
அவர், “அவளும் பரவாயில்லை!”
“உங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?”
“அவர்களும் நலம்தான்.”
இறுதியாக ஜெகஜித் கேட்டார், “உங்கள் தந்தை எப்படியிருக்கிறார்?”
அந்த மனிதர் சொன்னார், “அப்பாவா? அவர் நான்கு வருடங்களாக நன்றாகத்தான் இருக்கிறார்… நான்கு வருடங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.” அதாவது அந்த நண்பர் நான்கு வருட காலத்திலிருந்து நன்றாக இருப்பதாகக் கூறினார். முழுமையாக நன்றாகவே இருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்பிலிருந்து நன்றாகவே இருந்து வருகிறார்.
கவனத்தைக் கவர வயதானவர்கள் தங்களுக்கு உரிய வழிகள் வைத்திருப்பார்கள். தாங்கள் மைக்ரேய்னில் அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு வயிற்று வலி என்றும் கூறுவார்கள். அவர்கள் மருத்துவ பெயர்கள் தெரிந்திருக்கும் வரை அவர்கள் சமாளித்து விடுவார்கள்.
இறுதியாக மருத்துவர்கள் மறுக்கத் துவங்கினார்கள். “அவர் ஒரு பைத்திய மனிதர். அவருக்கே உடல்நலக் குறைவேயில்லை. அவருக்கு எந்த நோயுமில்லை. அவரைப் பல முறை சோதித்து விட்டோம்” என்று சொல்வார்கள்.
ஆனால் மகன் சொல்வார், “நாங்கள் என்ன செய்ய முடியும்? மருத்துவரை வரவழைத்து விட்டோம்.”
அதனால் இறுதியாக மருத்துவர்கள் ஒரு மனோவசியக்காரரை வரவழைக்கலாம் என்று யோசனை சொன்னார்கள். “ஒரு மனோவசியக்காரரை வரவழையுங்கள். அவரை மனோவசியம் செய்து அவருக்கு ஒன்றுமேயில்லை என்று சொல்ல வைக்கலாம். இந்த ஒரு மருந்துதான் அவருக்குத் தேவை. அவருடைய மயக்க நிலை அவர் சரியாக இருக்கிறார் என்பதைப் பிடித்துக் கொண்டால், பிறகு ஒரு பிரச்னையுமில்லை.”
பிள்ளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. அவர்கள் ஒரு மனோவசியக்காரரை வரவழைத்தார்கள். அவரைப் பார்ப்பதற்கு ஒரு மருத்துவரைப் போல் உபகரணங்களுடன் இருந்தார். சிக்மண்ட் ப்ராய்டைப் போல் ஒரு சின்ன தாடி. கண்ணுக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தார். தொழிலுக்கு ஏற்றாற் போல் ஒருவர் உடையணிய வேண்டும். அதுதான் கவர்ச்சியாக இருக்கும். அவர் அந்த வயோதிகரைக் கேட்டார், “உங்களுக்கு என்னவெல்லாம் பிரச்னைகள்?”
வயோதிகர், தன் பிரச்னைகளைப் பட்டியலிட்டார். மனோவசியக்காரர் சொன்னார், “சரி, நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள். என் கையிலிருக்கும் இந்தத் தொங்கு மணியைப் பாருங்கள். அது மின்னும் காரணம் அது மின்கலத்தால் இயங்குகிறது. உங்கள் கண்களை அதன் மீதே வைத்திருங்கள். கண்களைத் திறக்க முடியாத நிலை வரை அப்படியே பாருங்கள்.”
நீண்ட வாழ் நாள் அனுபவத்தில் வயோதிகர்கள் புத்திசாலிகளாகவும், சூழ்ச்சிக்காரர்களாகவும் ஆகிவிடுவார்கள். அந்த வயோதிகர் நினைத்தார். ‘இவன் உடையைப் பார்த்தாலே இவன் ஒரு மோசடிப் பேர்வழியாகத் தெரிகிறான். இவன் எனக்கு என்ன சிகிச்சை கொடுக்கப் போகிறான்?’ அவர் யோசித்தார், ‘சரி, பார்க்கலாம்.’ அவர் மூன்று நிமிடங்கள் வரை காத்திருக்கவில்லை. அவர் உடனே கண்களை மூடிவிட்டார். அவர் கைகளை மனோவசியக்காரர் தூக்கியதும் அவர் கைகளைக் கீழே போட்டுவிட்டார். அவருக்கு எல்லா வித்தைகளும் தெரியும். வயோதிகர் அவர் உலகத்தில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டார்.
மனோவசியக்காரர் சொன்னார், “அவர் இப்போது ஓய்வாக ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறார். இப்போது நான் அவர் நன்றாக இருப்பதாக இப்போது நான் சொல்வேன். அவருக்கு எந்த நோயுமில்லை. இல்லாத நோய்களைச் சொல்லி இனி குழந்தைகளைத் துன்புறுத்த மாட்டார்.” வயோதிகர் மௌனமாக இருந்தார்.
அவருடைய பிள்ளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. “ஏன் நாங்கள் முன்பே இந்த மனோவசியக்காரரைப் பற்றி யோசிக்கவில்லை? மருத்துவர்களுக்கு அதிக கட்டணம் கொடுத்து காசை விரையம் செய்துவிட்டோம். அவர்கள் சொன்னதெல்லாம், ‘நீங்கள் வதைக்கிறீர்கள். நீங்கள் என்னதான் பணம் கொடுத்தாலும் எங்களை வதைக்கிறீர்கள். அந்த மனிதனுக்கு நோயே இல்லை” இந்த மனோவசியக்காரர்தான் சரியானவர்.
வயோதிகர் அப்படியே இருந்தார். எல்லா மனோதத்துவ கட்டளைகளும் முடிந்தன. மனோவசியக்காரர் தன் பணத்தைப் பெற்றுக் கொண்டார். ஒரு பிள்ளை அவரை வழியனுப்ப கார் வரை சென்றார். ஆனால் அவன் திரும்பி வருவதற்குள் வயோதிகர் கண்களைத் திறந்து கேட்டார். “அந்தக் கிறுக்குப் பயல் போனானா இல்லையா?”
நீங்கள் உடனடியாக கண்களை மூடினால், ஒன்றும் ஆகாது. காரணம் நீங்கள் விழிப்பாக இருக்கிறீர்கள். அந்த மனோவசியக்காரர் என்னதான் சொன்னாலும் அவர்தான் கிறுக்கனைப்போல ஆவார். என்ன முட்டாள்தனமாகப் பேசுகிறான். “உங்கள் கண்கள் கனமாக்கி கொண்டிருக்கின்றன.” அது கனமாகாது. ‘நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் போகிறீர்கள்’ நீங்கள் தூங்கவில்லை அதிக விழிப்புடன் இருக்கிறீர்கள். அவர் உங்களை ஏமாற்றுகிறார். உங்களுக்கு எந்த நோயுமில்லை என்கிறார்.
ஆனால் நீங்கள் ஒருவேளை சுய மனோவசியம் செய்து கொண்டால், அதில் எந்த ஆபத்தும் இல்லை. நீங்கள் அந்த முழு முயற்சியில் இருக்கிறீர்கள். உங்கள் கண்களை சோர்வடையச் செய்யும் அந்த வெளிச்சத்தைப் பார்க்கிறீர்கள். அதுதான் அதன் ஒரே செயல்பாடு. அந்த மனோவசியக்காரர் சொன்னதைப் போல நீங்கள் மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறீர்கள். ஆனால் நீங்களாகவே இருக்கிறீர்கள். இறுதியாக உங்கள் கண்களைத் திறந்து வைத்திருக்க முடியாது என்பது தெரிகிறது. அது மூடிக்கொள்கிறது. அதன் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை. உங்கள் இமைகள் மீது உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்று நீங்கள் உணர்ந்தவுடன், நீங்கள் தூக்கத்தில் விழிப்பதைப் போல உணர்கிறீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும்போது, நீங்கள் விழிப்பாக இருக்கிறீர்கள். “நான் ஆழ்ந்து, ஆழ்ந்து…” பிறகு ஒரு தருணத்தில் நீங்கள் உங்கள் ஆழ்ந்த மயக்கத்தில் செல்வீர்கள். பத்து நிமிடங்கள் கழித்து அந்த அறிவிப்பு மணி ஓய்ந்துவிடும். நீங்கள் உங்கள் மயக்கத்திலிருந்து விழிப்பிற்குள் வருவீர்கள். நீங்கள் வியப்படைவீர்கள். நீங்கள் எவ்வளவு புத்துணர்வோடு, எவ்வளவு இளமையாக உங்களுக்குள் இருப்பீர்கள். குளிர்ந்த காற்றுடன் கூடிய ஓர் அழகிய தோட்டத்தைக் கடந்து வந்ததைப்போல சுத்தமாக இருப்பீர்கள்.
உங்களுக்கு நீங்களே ஒரு சுய மனோவசிய யோசனை சொல்லிக் கொள்ளலாம். அது நீங்கள் கண்களை மூடுகிற அந்தத் தருணத்தில் சொல்லப்பட வேண்டும். இப்போது நீங்கள் ஆழமாகப் போவதை உணர்வீர்கள். அப்படி ஆழத்தில் போவதற்கு முன்பாக நீங்கள் சொல்வீர்கள் “நாளையிலிருந்து என் உடல் இன்னும் நன்றாக இருக்கப் போகிறது.” ஒரே ஒரு வி~யத்தைத்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய அல்ல. பேராசைப்படாதீர்கள். ஒரு பதினைந்து நாட்கள் அல்லத ஒரு மூன்று வார பயிற்சி உங்கள் மீது வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும். நாளையிலிருந்து உங்கள் தியானம் இன்னும் ஆழமாக இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். உங்கள் தியானம் இன்னும் ஆழமாகப் போய் உங்களுக்கு ஓர் அழகிய இணைப்பை உருவாக்கும்.
அந்த தியானம் இன்னும் ஆழமாகப் போகும்போது, நீங்கள் உங்களுக்குச் சொல்லிக் கொள்ளலாம் “நாளை முதல் என் தியானம் இன்னும் ஆழமாகப் போகும்.” இந்த இரண்டையும் நீங்கள் உங்கள் மயக்கத்தில் கொண்டு வரலாம்.
ஒருமுறை உங்கள் மயக்க நிலையில் ஆழத்தைத் தொட்டுவிட்டால், பிறகு நீங்கள் உங்கள் இரண்டாவது எண்ணத்தைச் சொல்லலாம். “நான் இருட்டு மயக்கத்திலிருந்தாலும், எனக்குள் ஒரு மெலிதான விழிப்பு இருக்கும். என்ன நடக்கிறது என்பதை நான் பார்க்க முடியும்” பிறகு அதையே மறுபடியும் மறுபடியும் சொல்லுங்கள். “இலேசாக இருந்த என் விழிப்புணர்வு இப்போது பெரிதாகி, பெரிதாகி, பெரிதாகி…” பிறகு ஒருநாள் நீங்கள் உங்கள் முழு மயக்கமும் ஒரு விழிப்பு வெளிச்சத்தில் இருப்பதை உணர்வீர்கள். அதுதான் தியானம்.
மனோவசியத்தைப் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும். எந்தவித பயமுமில்லாமல். சேர்ந்தோ, நீங்கள் நம்புகிறவருடனோ அல்லது பரஸ்பர நேசம் வைத்திருப்பவருடனோ. அவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்கிற பயமில்லாமல் இருக்கும். நீங்கள் உங்கள் நெருங்கிய நண்பருடன் இருக்கிறீர்கள். அவர்களால் உங்களுக்குக் கெடுதல் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் வளைந்து கொடுக்கிறீர்கள். அல்லது நீங்களாகவே செய்து கொள்ளலாம்.
அப்படிச் செய்தால் இது சற்று அதிக நேரம் பிடிக்கும். காரணம் இரண்டு பேர் செய்கிற வேலையை நீங்கள் ஒருவரே செய்கிறீர்கள். இது கொஞ்சம் தொந்தரவுதான்.
ஆனால் இப்போது பதிவுக் கருவிகள் இருக்கின்றன. அந்த இன்னொரு நபரை முழுமையாகத் தூக்கிப்போட்டு விடலாம். உங்கள் எண்ணத்தை அந்தப் பதிவுக் கருவியில் சொல்லுங்கள். அந்தப் பதிவுக் கருவி உங்களைத் தவறாகப் பயன்படுத்தாது. அது உங்கள் மனைவியைக் கொல்ல சொல்லாது. நீங்களாக அந்தக் கருவியில் சொல்லாத வரையில். பிறகு நான் ஒன்றும் உதவ முடியாது. நீங்கள் அந்தக் கருவியில் என்ன பதிவு செய்கிறீர்களோ அதைத்தான் அது மீண்டும் மீண்டும் சொல்லும். உங்கள் முழு எண்ணத்தையும் அதில் பதிவு செய்து விடலாம். எல்லா எண்ணங்களையும். தூக்கத்திற்குப் போவது. இமைகளில் கனம், ஆழத்திற்கு போவது. பிறகு நீங்கள் அந்த ஆழத்திலிருக்கும்போது நான்கு அல்லது ஐந்து நிமிட இடைவேளையில் அந்த ஆழத்தில் நீங்கள் தங்கிவிடுவீர்கள். பிறகு பதிவுக் கருவியிலிருந்து ஒரு குரல் கேட்கும். உங்கள் தியானம் இன்றிலிருந்து ஆழமாகிவிடும். உங்கள் எண்ணங்களோடு நீங்கள் போராடமாட்டீர்கள். நீங்கள் கண்களை மூடிய அந்தத் தருணத்தில் உங்கள் எண்ணங்கள் தானாகவே காணாமல் போய்விடும்.
பதிவுக் கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம் அங்கே நீங்கள் யாரையும் நம்ப வேண்டிய அவசியமில்லை. எந்தவித பயமுமில்லாமல் பதிவுக் கருவியை நம்பலாம். நீங்கள் கதவை மூடிக்கொள்ளலாம். யாரும் வந்து பதிவுக் கருவியில் விளையாட முடியாது. இல்லையென்றால் யாராவது வந்து உங்களிடம் தந்திரம் செய்யலாம்.
சுய மனோவசியம் தியானத்தின் சேவையில் இருக்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய பயன். அது ஆரோக்யத்திற்கு, நீண்ட ஆயுளுக்கு, அன்பிற்கு, நட்புணர்விற்கு, துணிச்சலுக்கும் சேவை செய்யலாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை சுய மனோவசியம் கொடுத்துதவும். தெரியாத வி~யம் குறித்த உங்கள் பயத்தை போக்கலாம். உங்கள் மரண பயத்தைத் தூக்கி எறியலாம். நீங்கள் தனிமையில், மௌனமாக, அமைதியாக இருக்க உங்களைத் தயார் செய்யலாம். உங்களை இருபத்து நாலு மணி நேரமும் உங்களை தியானத்திலேயே இருக்க வைக்கலாம்.
நீங்கள் கூட சொல்லிக் கொள்ளலாம், “நான் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்போது, ஒரு விழிப்பு வெளிச்சம் என் தூக்கத்தைக் கலைக்காமல் தொடரட்டும்.”
அந்த நேரத்தில் நீங்கள் சொல்கிறீர்கள், “சிகிச்சைக்கும், தியானத்திற்குமிடையே இருந்த மெல்லிய கோடு மறைந்துவிட்டது.” இதுதான் என் நீண்ட நாள் ஆசை. சிகிச்சை மனோவசியத்தில் கரைய வேண்டும். அந்த மனோவசியம் தியானத்தில் கரைய வேண்டும். பிறகு நீங்கள் புத்துணர்வு பெற ஒரு மிகப்பெரிய சக்தியை உருவாக்கி விட்டீர்கள். கடந்த காலத்தில் இதைப் பயன்படுத்தியதேயில்லை.
சிகிச்சையைப் பயன்படுத்தவேயில்லை. சிகிச்சை உங்கள் குப்பைகளையெல்லாம் சுத்தப்படுத்தும். உங்கள் நிலைப்பாட்டைக் கூட எடுத்துவிடும். உள்ளேயிருந்த எல்லாவற்றையும் தூக்கிப் போட சிகிச்சை உதவும். அதை உள்ளே அழுத்தி வைத்திருந்தீர்கள். சிகிச்சை அதைத் தூக்கி எறியும். சிகிச்சைதான் ஓர் அழகான சுத்தப்படுத்தும் முறை. சுத்தப்பட்ட மனம் மனோவசியத்திற்குள் சுலபமாக, எந்தப் போராட்டமுமில்லாமல் வந்து விழும். சுயவசியத்தில் அல்லது வசியத்தில் இல்லாதவர்கள் கூட, அந்த முப்பத்து மூன்று சதவிகிதத்தில் இல்லாதவர்கள் கூட சிகிச்சையினால், அவர்களும் கூட மனோவசியத்திற்குத் தயாராக இருக்கும் குழுவோடு தயாராக இருப்பார்கள். சிகிச்சை நூறு சதவிகித மக்களையும், நம்பிக்கைக்குரிய மனோவசியப் பிரியர்களாக மாற்றிவிடும். சிகிச்சை மெதுவாக மனோவசியத்தில் கரையும். பிறகு மனோவசியத்தை தியானத்திற்குப் போகிற படியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மூன்றையும் நான் என்னுடைய மும்மூர்த்திகளாக வரித்துக் கொண்டிருக்கிறேன். கடவுள், புனித ஆவி, யேசு கிறிஸ்து அந்த முட்டாள்தனத்தையெல்லாம் மறந்து விடுங்கள். இவை மும்மூர்த்திகளல்ல. ஆனால் எது விஞ்ஞான பூர்வமானதாக, எது நீங்களாக செய்ய முடியுமோ, எதற்கு பயிற்சி பெறக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவோ அதைத் தவிர மதம் முழுவதுமே குப்பைகள்தான். ஆனால் மக்கள் அந்தக் குப்பைகளின் மீது ஆர்வம் காட்டி, அவசியமானவற்றை மறந்து விட்டார்கள். உண்மையில், அந்த அவசிய அடிப்படைக் கூறுகளெல்லாம் இமயமலையோடு ஒப்பிடப்படும்போது மிகவும் சிறியவைதான். ஆனால், அவை அந்த மலையின் மீதுதான், பல நூற்றாண்டுகளாகக் குவிந்து கிடக்கின்றன. இப்போது அவசியமான அந்தக் கூறுகள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பதே கடினமாகிவிட்டது.
நான் உங்களுக்கு சிபாரிசு செய்வதெல்லாம் மிகச் சாதாரண விஷயம். இதற்கு உங்களுக்கு பாதிரியார் தேவையில்லை. தேவாலயங்கள் தேவையில்லை. இதற்கு எந்தப் புனித நூலும் தேவையில்லை. சிறிய புரிந்து கொள்ளுதல், சிறிய துணிச்சல் மட்டுமே தேவை. சிகிச்சை மூலமாகத் தூக்கி எறியுங்கள். உங்களுக்குள் எவ்வளவு குப்பை இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியாது. சுத்தப்படுத்தும்போதுதான் தெரியும், “அட கடவுளே இது நானா அல்லது வேறு யாராவதா? நான் என்ன செய்கிறேன்? என்ன சொல்கிறேன்?” சில சமயங்களில் நீங்கள் சொல்வதில் கூட எந்த அர்த்தமும் இருக்காது. ஆனால் அது இருந்திருக்கிறது. இல்லையென்றால் அது உங்களிடம் வந்திருக்க முடியாது. அது உன்னுடைய தியானத்திற்கு இடைஞ்சல் நீ மனோவசியத்திற்குள் ஆழமாகப் போவதற்கும் தடையாக இருந்தது. நடுவில் எங்கோ அது ஒரு தடுப்பாக இருந்திருக்கிறது.
அதனால் சிகிச்சைதான் முதல் விஷயம். இரண்டாவது மனோவசியம். மூன்றாவது அதிலிருந்து வளரக்கூடிய உன் தியானம்.
தியானத்தின் உச்சமே புத்துணர்ச்சி.
தியானம் முழுமை பெறும்போது உன்னுடைய இருத்தல் முழுவதிலுமே ஒளி வருகிறது. முழு பேரின்பம் வருகிறது. முழுப் பரவசம் உன்னை ஆட்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக