செவ்வாய், 25 மார்ச், 2014

மெய்ப்பொருள் ......

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிர்தாத் சொல்கிறார்(The book of Mirdad by Mikhail Naimy )
“பிரபஞ்சத்தில் அஃறிணை என அறியப்படும் கல்லுக்கும் மனம் உண்டு அந்த மனத்திற்கும் விருப்பம் உண்டு,கல்லைப்போல மற்ற எல்லாப்பொருட்களுக்கும் மனம் உண்டு என் நான் உங்களுக்கு சொல்கிறேன்.இந்தபொருட்களின் மனதின் பிரக்ஞை மனிதனுக்கு போலன்றி அளவில் மாறுபாட்டிருந்தாலும் சாராம்சத்தில் மாற்றம் இல்லை”

வள்ளுவர் இதைப்பற்றி அறிவதைத்தான் அறிவு என்கிறார்.
“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

இதை சர் ஜகதீஸ் சந்திர போஸ் ஓரளவுக்கு அறிய முயற்சி செய்தார்(1.Response in the living and non-living 2.The nervous mechanism of plants)
“தாவரங்களுக்கு மனிதர்களைப்போல விலங்குகளைப்போல உணர்வு உண்டு”

இதை சாமுவேல் ஹானிமன் முழுமையாக நிரூபித்தார்(organon of medicine 6th edition).தன் ஹோமியோபதி மருத்துவ தத்துவத்தின் நிரூபண விதிகளின் மூலம்
“பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப்பொருட்களும் ஆரோக்யமான மனிதனுக்கு கொடுக்கப்படும்போது அதற்கேயுண்டான தனித்துவப்பண்புகளை அவனிடத்தில் வெளிப்படுத்துகின்றன.இதன்மூலம் ஆரோக்யமான மனிதனுக்கு நோயை உண்டாக்கவும் நோயுள்ள மனிதனை குணமாக்கவும் தன்னிடத்தில் ஆற்றல் உள்ளது என இந்த உலகுக்கு உணர்த்துகிறது".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக