செவ்வாய், 25 மார்ச், 2014

ஹோமியோபதி எளிய வைத்தியமுறை-பழ.வெள்ளைச்சாமி

ஹோமியோபதி எளிய வைத்தியமுறை

இதை ஓரளவு படிக்கத்தெரிந்தவர்கள் கூட எளிதாக அவர்கள் அறிந்த மட்டும் கையாலலாம்.

ஏனெனில் அடிப்படையில் நவீன மருத்துவத்தில் கூறப்படுவது போல் கருவி ஆய்வுகள், உடல் இயங்கியல்,உடல் கூறு இயல் மற்றும் நோய்க்கூறு இயல் ஆய்வுகள்தொடர்பான ஆழமான அறிவு தேவையில்லை.
ஹோமியோபதியில் துயரர்களின் குறிகள் பிரதானமாகக் கருதப்படுகின்றன.துயரர்களின் குறிகளுக்கு இணங்க ஒத்த மருந்தைத் தேர்வு செய்து கொடுத்தால் போதும்.
இதைச் செய்வதற்கு ஹோமியோபதியின் அடிப்படைத் தத்துவத்தைத் தெரிந்திருக்க வேண்டும்.இதைப் படிக்க தெரிந்தவர்கள் எளிதில் படித்து புரிந்து கொள்ளலாம்.

எனவே ஹோமியோபதியைச் சாதாரண மக்களும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தமுடியும்.

நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள்.இவர்கள் கிராமப்புறங்களில் வாழ்வதாலே இவர்களுக்கு மருத்துவவசதி புறக்கணிக்கப்படுகிறது அல்லது எளிதில் கிடைப்பதில்லை.இந்நிலையில் சாதாரண நோய்களால் கூட உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.இந்நிலையை தடுப்பதற்கு ஹோமியோபதியால் முடியும்.

மேலும் பெருப்பாலான பெண்கள் திருமணத்திற்குப்பின் வேலைக்குச் செல்வதில்லை. பல குடும்பங்களில் அறிவியல் பட்டங்கள் பெற்ற பெண்கள் கூட வேலைக்குச் செல்லாமல் வீட்டுப்பெண்களாக காலந்தள்ளுகிறார்கள்.இவர்களுக்கு எளிய ஹோமியோமருத்துவம் சென்றடையும்.மேலும் அதை அவர்கள் எளிதில் பயின்று தங்களுக்கும்,தங்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் எளிதில் பயன்படுத்தமுடியும்.

இதனடிப்படையில் சாதாரணப்பெண்கள் அதாவது பள்ளிக்கல்வியை முடித்த பெண்கள் அன்றாட வாழ்வோடு இந்த மருத்துவத்தையும் செய்யும் அளவுக்கு எளிய முறையில் ஹோமியோபதியைப் படிப்பதற்கு தமிழில் புத்தகங்கள் வெளிவரவேண்டும்.ஹோமியோபதியின் அடிப்படைத்தத்துவத்தை விளக்கக்கூடிய புத்தகங்கள்,அவர்கள் அன்றாடம் சந்திக்கும் நோய்கள் தொடர்பான மருத்துவம் அளிக்க ஏதுவான எளிய புத்தகங்கள் அவசியம், அதனடிப்படையில் நாம் முழுமூச்சாக செயலாற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக