செவ்வாய், 25 மார்ச், 2014

அவள்-பழ.வெள்ளைச்சாமி

அவள்

அவள்
சுயத்தோடு
சூதற்று இருப்பவள்
இரண்டு முகம்
இல்லாமல்
இயற்கையாக இருப்பவள்

இவளுடைய இயல்பே
இதயத்தைத் திறந்து
வைப்பது தான்!

இவள்
தென்றலாகத் தொட்டு
மனித மொட்டுக் களை
மலர வைத்துவிட்டு
நன்றிக்குக் காத்திராமல்
நகர்ந்து செல்பவள்

இவள்
இயற்கையாக
இருப்பதாலே
இயற்கையோடு கலந்தவள்!

இவளுக்கு
பயம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாது
பாராட்டு என்ற வார்த்தைக்கும்
பொருள் தெரியாது!

இவள்
பயத்தைக் கடந்த சுயம்
பிறர்
சுகத்தை மட்டும் எண்ணும் தியாகம்!

இவள்
கபடமில்லாமல் சிரிக்கும்
கலங்க மற்ற குழந்தை
அதனாலே
இவள்
செயல் அனைத்துக் கும்
தெய்வமே உடந்தை!

இவள்
காதல் கூட
அதீத மானது
ஆண்டவன் நிலவுவது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக