புதன், 22 மார்ச், 2017

சுண்ணாம்பும் மருந்தாகும்..


கல்கேரியா கார்பானிகம்(CALCAREA CARBONICAM)

மேஜர் தி.சா.இராஜூ
'
கார்பானிகம் என்பது வேதி இயலை ஒட்டிய பெயர். இதைக் கல்கேரியா ஆஸ்டிரியோரம் ன்றும் அழைப்பதுண்டு. ஆஸ்டியர் என்றால் சிப்பி. ஆகவே இது இயற்பெயர்.
சிப்பி அல்லது கிளிஞ்சலை ஒரு துணியில் பொதிந்து வென்னீரில் நனைத்துத் தொங்கவிடுவதுண்டு. ஆறு மணி நேரம் பொறுத்துப் பார்த்தால் அதனுள் வெண்ணையைப் போன்ற சுண்ணாம்பு இருக்கும். சுக்காங்கல்லை வேக வைத்துத் தயாரிக்கும் சுண்ணாம்பை விட இது மிருதுவாகவும் இருக்கும். தாம்பூலம் தயாரிப்பவர்கள் விரும்பி உபயோகிக்கும் பொருள் இது. எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இது சுண்ணாம்புதான். மனித உடலின் வளர்ச்சிக்கு இது மிகவும் தேவையான பொருள்.
'
ஒரு சிறு குழந்தையைச் சுமந்து கொண்டு இளைஞர் ஒருவர் என்னைக் காண வந்தார். அவர் ஒரு பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர்.
குழந்தையின் தலை சற்றுப் பெரிய அளவு. வயிறு பெருத்திருந்தது. மந்தமான பார்வை. பற்கள் முளைக்கவில்லை. கால் கைகள் சூம்பியிருந்தன. நாடித் துடிப்பைப் பரிசோதிக்க முயன்றபோது உடல் குளிர்ந்திருப்பதை உணர முடிந்தது.
`குழந்தையின் உடல்நிலை பற்றிச் சொல்லுங்கள்’ நண்பரை வேண்டினேன்.
அவர் துயரம் கப்பிய குரலில் பேசினார்.
'
"இதன் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. நடக்கவோ பேசவோ இல்லை. நகரத்தின் சிறந்த குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். (பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) அவர் குழந்தையின் உடலில் சுண்ணாம்புச் சத்து குறைவாக உள்ளது. ஊசி மூலம் அதை ஏற்ற வேண்டும் என்று அவர் பரிவுரை செய்திருக்கிறார். குழந்தையோ மருத்துவரைக் கண்டாலே பதறுகிறான். என் குடும்ப நண்பர் உங்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது என்று கூறினார். அதனால தான் உங்க்ளைக் காண வந்தேன்."
'
ஜேம்ஸ் டைலர் கெண்ட் எழுதிய புத்தகத்தின் 317-ஆம் பக்கத்தைப் பிரித்து அவரிடம் கொடுத்தேன். தயவு செய்து இதைப் படியுங்கள்.
ஒரு முறை படித்தார். தலையை ஆட்டிக் கொண்டார். மீண்டும் படித்தார். `விளங்குகிறது’ இந்தஇரண்டு முறைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு எனக்குப் புரிகிறது. `சுண்ணாம்புச் சத்து குறைவாக உள்ளது. அதனால்தான் குழந்தையின் உடற்கூற்றில் இத்தகைய கோளாறுகள்’ என்று நான் சந்தித்த நிபுணர் கூறினார்.
`உணவிலுள்ள சுண்ணாம்புச் சத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் இந்தக் குழந்தையின் உடற்கூற்றில் இல்லை என்பது உங்கள் வாதம்’
'
`இன்னும் ஆழ்ந்து படியுங்கள். சுண்ணாம்புச் சத்தைச் செரித்துக் கொள்ளும் திறன் இல்லாத குழந்தைக்கு மேலும் மேலும் அந்தச் சத்தை ஊட்டுவதனால் என்ன பயனைக் காணமுடியும் என்று ஆவேசத்துடன் வினவுகிறார் டாக்டர் கெண்ட்.
`கல்கேரியா நோயாளி’ என்ற புதிய இனத்தையே அவர்கள் உருவாக்குகிறார்கள் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார். அடுத்து வீரியப்படுத்தப்பட்ட சுண்ணாம்பை அந்தக் குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் வெகு விரைவில் நோயாளியை குணப்படுத்திவிட முடியும்
என்றும் அவர் எழுதுகிறார்.
அவ்வாறே நிகழவும் செய்தது. அந்த முறை எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற கருத்தினால் உந்தப்பட்டு இதை இங்கு விவரமாகவே எழுதுகிறேன்.
'
குழந்தையின் பெயர்-செம்மல்
வயது-பதினான்கு மாதம்
குறிகள்- வீங்கிய வயிறு, பெரிய தலை, சூம்பிய வளைந்த கால்கள், தலைப் பகுதியில் அதிகமான வியர்வை. சீரான மலக்கழிப்பு இல்லை. உண்பது மிகக் குறைவு. தலைமுடி ஒரே பிசுபிசுப்பு. மந்தமான பார்வை. நாடித்தடிப்பு சீராக இல்லை.
'
பத்தியம்- காஃபி, தேனீர் அறவே விலக்கல். பால், புழுங்கலரிசிக் கஞ்சி சிறிது கீரை, கஞ்சியுடன் பயற்றம்பருப்பை வேக வைத்துக் கலக்கலாம். பூவன் பழம், தற்போதைக்கு எண்ணெயில் பொறித்த பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.
'
மருந்து- சல்பர் 6, 30 மூன்று நாள் இடைவெளியில் ஒரு வாரம் பொறுத்து கல்கேரியா கார்பானிக்கம் 6, 30 இதுவும் மூன்று நாள் இடைவெளியில், மீண்டும் ஒரு வாரம் பொறுத்து கல்காரியா 200 இறுதியில் டியூபர்குலினம் 200 இரண்டு உருண்டைகள்.
'
சில வேளைகளில் மருத்துவனே வியக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து விடுகின்றன. சிறுவன் செம்மல் சீராக மலம் கழித்தான். உணவைச் சுவைத்து உண்டான். ஆறாவது வாரத்தில் பற்கள் முளைக்கத் தொடங்கின. தலையில் கரு முடி. சுவரைப் பிடித்துக் கொண்டு நிற்க முயற்சி செய்தான். மூன்று மாதம் பொறுத்துத் தளர் நடை, கண்களில் புதிய தோற்றம். நன்றாக விளையாடவும், முரண்டு பிடித்து அழவும் செய்தான். ஓராண்டில் சொற்களைத் திரும்பக் கூறினான்.
'
நண்பர் ஆரோக்கியம் தற்போது என் நெருங்கிய தோழர்களில் ஒருவர். அவர் பணிபுரியும் ஆசிரிய நண்பர்களிடம் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார்.
மதர் சுப்பீரியர் நேரில் வந்து என்னைப் பாராட்டினார். மருத்துவத் தொண்டைப் போற்றினார். இந்தப் புகழுரை அனைத்தும் மேதை ஹானிமனுக்குச் சேர வேண்டியவை. நான் அடக்கத்துடன் பதில் அளித்தேன்.
'
ஒருவகை உடற்கூற்றிற்கேற்ற அற்புதமான மருந்து இந்த கல்காரியா கார்பானிக்கம் என்று எனக்கு உறுதியாக எடுத்துக் கூறியவர் என் ஆசான். ஒரு நோயாளியை நன்கு பரிசோதித்து பிறகு அவர் கல்கேரியா பிரிவைச் சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்த பின்பு அடுத்து அவருடைய எந்த வகைச் சுகவீனத்திற்கும் கல்காரியா மற்றும் அதன் தொடர் மருந்துகள் மட்டும் போதுமானவை என்பது அவருடைய உறுதியான பரிவுரை. இதற்கு நிகரான உடற்கூற்று மருந்து ( CONSTITUTION REMEDY) எதுவுமே இல்லை என்று வில்லியம் போயரிக் சாய்வு எழுத்துக்களில் வரைகிறார்.
.
ஹோமியோபதி மருத்துவத்துறையில் நிபுணர்களான பெரியோர்கள் இந்த மருந்து குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து அருமையான நீண்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவை படிப்பதற்கும் சுவையாக இருக்கும். கூடவே இந்த வட்டத்திற்குள் வராத மனிதர்களே கிடையாது என்ற எண்ணமும் உண்டாகி விடும்.
...
இந்த மருந்துடன் ஆர்சனிக்கம்(CALC-ARS), காடி(CALC-ACET), ஃப்ளோரிக் ஆசிட்(CALC-FLOUR), ஐயோடின்(CALC-IOD), பாஸ்பரஸ்(CALC-PHOS), சல்பர்(CALC-SULPH) ஆகியவற்றைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தனித்தனி மருந்துகளாகத் தயாரித்து மெய்ப்பித்திருக்கிறார்கள்.
ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு இயல்புகள், மனத்தளவிலும் உடலளவிலும்.
'
கார்பாலிக் அமிலத்துடன் கலக்கப்பட்ட இந்த கல்காரியம், எந்த வகையில் பணிபுரிகிறது என்பதை அறிந்து கொள்வதே ஒரு சிறந்த மருத்துவப் பயிற்சி. சுரப்பிகளின் விளக்கம், அழற்சி, செயல் மரப்பு, உதிரத்தில் நீர்ச் சத்துக் குறைந்து போதல், திசு நார்களின் தளர்ச்சி என்று இதனால் சீர்படும் கோளாறுகள் எண்ணிலடங்கா.
'
மேதை ஹானிமன் காலத்தில் தைராய்டு, பிட்யூட்ரி ஆகிய சுரப்பிகள் குறித்து அதிகமான அளவில் ஆராய்ச்சிகள் நடக்கவில்லையென்றாலும் அந்தச் சுரப்பிகளையும் ஊக்குவிக்கும் திறன் இந்த மருந்துக்குள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார். சில மாதருக்குச் சினைப்பையின் இயக்கம் தடைப்பட்டுப் போகும். இதற்கு அடிப்படையான நோய்க்கு முதல் காரணம் தைராய்டு சுரப்பியின் செயலற்ற நிலை என்று, இந்நாளைய மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் மாதாந்திர ஒழுக்கைச் சீர் செய்யும் மருந்து இது என்ற உண்மையை அன்றே ஹானிமன் கண்டுபிடித்திருக்கிறார். மிகக் குறைந்த இடைவெளியிலும், மிக அதிகமான போக்கும் இருந்தால்அப்போது தேவைப்படுவது இந்த மருந்து தான். பொதுவாக ஆண் மருத்துவர்கள் அணுக அஞ்சும் பாதை இது.
'
கட்டியாகவும், கருநிறத்திலும், கூழ் வெள்ளையாகவும் உறுப்பிலிருந்து வெளிப்படு இருக்குமானால் அப்போது என்ன செய்வது என்று பல அனுபவமுள்ள மருத்துவர்களே திணறுவதுண்டு. இதை நான் கண்டிருக்கிறேன். `இது தனித்துறை இதை பெண் இனத்துறை (கைனகாலஜிஸ்ட்) மருத்துவர்கள் மட்டுமே சீராக்க முடியும்’ என்று கூறி நழுவி விடுவார்கள். ஆனால் என் ஆசான் அத்தகைய நோயாளிகளையும் அணுகி, பரிவுடன் உரையாடி, விவரங்களை அறிந்து கொண்டு ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுப்பார். அதில் கல்காரிய கார்பானிக்கத்தின் பங்கு மிகுதியாக இருக்கும்.
'
இன்று பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களுடைய உடற்கூற்று இயல்புக்கு ஒவ்வாத பணிகளையும் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டு அவர்கள் மாதப் போக்கை விரைவுபடுத்தவும், தள்ளிப் போகவும், பல மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கென ஹோமியோபதி மருந்துகள் தேவை என்று வேண்டிப் பலர் எங்கள் மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுடைய வேண்டுகோளை என் ஆசன் உறுதியுடன் நிராகரித்து விடுவார்.
'
பெண்கள் கடுமையான உடல் பயிற்சியிலும், விளையாட்டுகளிலும் பங்கேற்பது தவறு என்று பலர் ஒரு இயக்கமே நடத்துகிறார்கள். வரவேற்கிறோம். இடுப்பளவு தண்ணீரிலும் சேற்றிலும் நின்று உழைக்கும் மாதர்களையும் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டாமா?
அவர்கள் பணிபுரியும் இடங்களில் அடிப்படைச் சுகாதார வசதிகள் கூட இல்லை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளுதல் நலம்.
'
பெண்ணின் சிறப்பே தாய்மை. அவர்களுடைய பிறப்புறுப்பின் இயல்பான போக்கைத் தடை செய்வதும், மாற்றிவதும் அவளுடைய பெண்மையைக் குலைப்பதாகும் என்று என் ஆசான் கூறுவது வழக்கம்.
கருத்தடை மருந்துகளுக்காகப் பலர் அவரை அணுகுவார்கள். `நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுவதற்கு மட்டுமே இந்த மருத்துவ முறை பயன்படும். அந்த உறுப்பைக் குலைப்பதற்கு இது உதவாது என்றே அவர் கண்டிப்பாகக் கூறி விடுவார். கருக்கலைப்பையே உயிர்க் கொலை என்று வெளிப்படையாகத் துணிந்து கூறியவர் அன்னை தெரேசா மட்டுமே. அவருடைய தொண்டிற்கு நிகர் எது?
'
கல்காரிய கார்பானிகம், பல்சட்டிலா இரண்டையும் மாற்றி மாற்றிக் கொடுத்து பல மாதர்களின் சினையுறுப்புக் கோளாறுகளைக் குணப்படுத்திய பெருமை என் ஆசானுக்குண்டு. (பல்சட்டிலா ஒரு பெண்கள் மருந்து. தாவர இனத்தைச் சேர்ந்தது). இதைத் திரு. டி.எஸ்.ஐயர்(THE BEGINNERS GUIDE OF HOMOEOPATHY BOOK AUTHOR -T.S.IYER) ஏற்றுக் கொள்கிறார். என் ஆசானுக்கு ஐயரிடம் பெரும் ஈடுபாடு.
'
திசுக்களின் ஆழத்தில் முளை விட்டு கிளக்கும் பல மருக்களையும், கட்டிகளையும் இது கருக்கி விடும். அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்த இயலாது என்று கைவிட்ட பல நோயாளிகளை இது சீராக்கிருக்கிறது. சிலருக்கு மூக்கினுள்ளும், அண்ணத்திலும் முட்டு முட்டாக உண்ணிகள் கிளைக்கும். அவைகள் அனைத்தையும் இந்த மருந்து உதிரச் செய்துவிடும்.
ஹோமியோபதி மருத்துவத் துறையில் நோய்களுக்குப் பெயர் கிடையாது. ஆனால் நோயாளிகளுக்கு மருத்துவப் பெயர் உண்டு.
'
ஒரு மனிதரின் தோற்றம், நடைமுறை, பருவ மாறுதல்களினால் அவர் பாதிக்கப்படும் முறை, உள இயல்பு ஆகிவற்றைக் கொண்டு இந்தப் பெயர் முடிவு செய்யப்படுகிறது.
'
என் ஆசானின் பார்வை மிகவும் கூர்மையானது. அவர் மருத்துவமனையில் நுழையும் முன்னர், இரு மருங்கிலும் அமர்ந்திருக்கும் அன்பர்களைப் பார்வையிடுவார். உள்ளே தமது இருக்கையில் அமர்ந்ததும் என்னை அருகில் அழைத்து இடது வரிசை மூன்றாவது நபர் செப்பியா(SEPIA), அடுத்தவர் லில்லியம் டிக்ரினம்(LILIUM TIGRINUM) என்று தணிந்த குரலில் தெரிவிப்பார் அடுத்து அந்த நோயாளி உள்ளே நுழையும்போது அவருடைய கூற்று நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும். இந்த வகையில் தமது சக ஊழியர்களுக்கு அவர் மருத்துவ அறிவை அளிப்பார்.
'
அந்த நோக்கில் ஒரு கல்காரிய நோயாளி எப்படி இருப்பார் என்று பர்hப்போமா?
உடல் எலும்புகளின் வளர்ச்சி முழுமையாக இராது. கோணலாகவும் இருக்க வாய்ப்புண்டு. எதிலும் ஒரு மந்தமான போக்கு, மன இயக்கம், உடல் இயக்கம் இரண்டிலும் இதே நிலை. மேனி நிறம் வெளுத்திருக்கும். ஊதிப் போன உடல்வாகு.
'
குளிரைத் தாங்கவே இயலாது. கால்களில் ஈரமேலாடை அணிந்திருப்பதைப் போல உடல் நடுக்கம். அதிகமாகத் தண்ணீரில் வேலை செய்பவர்களுக்கு இந்த நிலை இருக்கும். எந்தச் செயல் புரியவும் தயக்கம். இதன் விளைவு என்ன ஆகுமோ என்ற மிகுதியான கவலை, தலையில் அக்குளிலும் மிகுதியான வியர்வை. இரவிலும் கூட வியர்வை இருக்கும். உணவு எளிதில் செரிமானமாகாது. எதிர்த்து வரும் புளித்தேப்பம், வாந்தி, வயிற்றுப் போக்கு.
'
உடல் தளர்ச்சி, கடினமாக உழைப்பே மேற்கொள்ள இயலாது. அதிகத் தொலைவு நடக்க இயலாது. மாடி ஏறக்கூடத் தயக்கம். மூச்சிறைக்கும். தள்ளாடும் நிலை. பளுவான பொருளைத் தூக்கினால் உடலில் பிடிப்பு ஏற்பட்டு விடும்.
....................
ஒரு கல்கேரியா வகையினன் பிராணிகளிடம் மிகவும் அன்பாக இருப்பான். அவைகளிடம் பாசம் மிகுந்த பிணைப்பு அவைகளை வளர்ப்பதில தனியானதோர் ஆவல்.
'
இந்த அடித்தளமுள்ள ஒரு மனிதருக்குக் கல்கேரியா கார்பானிகம் மற்றும் அதன் தொடர்புள்ள மருந்துகள் உடனடி நிவாரணம் தரும். எத்தகைய சுகவீனமாக இருந்தாலும் சரி. இது மிகவும் பயனுடையதாக அமையும்.
மருத்துவர் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் எத்தகைய நிபுணத்துவம் வாய்ந்தவர் என்பதை யாவரும் அறிவார்கள். இலக்கியச் சுவையுடன் கூடிய அவடைய பேருரைகள் நமக்குச் சிறந்த மருத்துவ அடிப்படையை அளிக்கும். அவர் அல்லோபதித் துறையில் பேரரறிவு பெற்றவர். பின்னாளில் அந்த முறை எவ்வளவு பயனற்றது என்பதையும் அவர் ஏளனமாகக் குறிப்பிடுகிறார்.
.
..... சில இளம் குழந்தைகளுக்கு உச்சிக்குழி மூடாது. மண்டை ஓட்டு எலும்புகள் சரிவர வளர்ச்சி அடையாததுதான் இதற்குக் காரணம். தலையின் மேல் கை வைத்தால் நெஞ்சின் துடிப்பை உணரலாம் ஆறு மாதமே ஆன அத்தகைய பச்சிளம் குழந்தையை என்னிடம் கொண்டு வந்தார்கள். நான் தயங்கினேன். குழந்தையின் உடல் நிலை என்னைத் தடுமாறச் செய்தது. ஓரளவு மருத்துவ அறிவு பெற்ற எனது நிலையே அவ்வாறு இருக்குமானால் பெற்றோர்கன் மனநிலை பற்றி எப்படி விவரிப்பது? அர்களுடைய கண்களில் நீர் முட்டிற்று.
.
அந்த வேளையில் நான் என் ஆசானை நினைத்துக் கொண்டேன். துணிவை வரவழைத்துக் கொண்டு செயலில் இறங்கினேன். மூன்று மாதங்களில் மண்டை எலும்புகள் கூடிவிட்டன. இது எனக்கு வியப்பை அளித்தது. நான் கொடுத்தவை நான்கே மருந்துகள். கந்தகம் 30, 200 ஒரு வார இடைவெளியில் அடுத்ததாக கல்காரி கார்ப் 30, 200 இதுவும் ஒரு வார இடைவெளியில். இடையே தொடர் மாத்திரைகள். இதன் பயனை மருத்துவர் கெண்ட் உறுதி செய்கிறார். இந்த மாத்திரைகள் மிகவும் மென்மையாக, பக்க விளைவுகள் ஏதுமின்றி நிரந்தரமாகக் குணப்படுத்தும் என்று தமது அனுபவத்தை எழுதுகிறார். (பக்கம் 144).
.
ஒரு குழந்தை பிறந்தவுடன் ஊசி முனையளவு வீரியப்படுத்தப்பட்டு கந்தகம், தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பின் அதே அளவு கல்கேரியா கார்பானிகம் கொடுத்து விட்டால் ஸோரா என்ற நஞ்சு, குழந்தையைப் பாதிக்காது என்று டி.எஸ்.ஐயர் எழுதுகிறார். எத்தகைய ஆழ்ந்த பயன் மிக்க பரிவுரை? மருத்துவ உலகமே இவருக்கு கடமைப்பட்டிருக்கிறது.
.
ஒரு கல்கேரியா அன்பரால் கடினமாக உழைக்கவே இயலாது. அவன் தொடாந்து முயற்சி செய்தால் காது மடல்கள் சூடாகி விடும். நெற்றிப் பொட்டுத் தெறிக்கும். தலை சுற்றும், கண் இருட்டும். சூழ்நிலையையே மறந்துவிடுவான். தொடர்ந்து சிந்திக்கவே இயலாத ஒரு குழப்பமான சூழ்நிலை. நினைவாற்றலே இராது. ஒரு செய்கையைத் துவங்குவதற்காகச் சென்றவன் அதற்கேற்ற தலத்தை அடைத்ததும்தான் எதற்காக வந்தோம் என்பதையை மறந்து விடுவான்.
.
இந்த நிலையிலிருந்த அன்பர் ஒருவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். பல கேள்விகளுக்கு அவரால் விடை தரவே இயலவில்லை. உடன் வந்திருந்தவரை என் ஆசான் குடைந்து குடைந்து பல கேள்விகள் கேட்டார். எல்லா வகை மருந்துகளும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. அல்லோபதி, சித்த வைத்தியம், யுனானி, ஆயுர்வதேம் எதுவுமே மீதமில்லை. பல தலங்களுக்கு அவர் சென்று வந்தார். நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் மூழ்கி வந்திருந்தார். பல பெரியோர்களைச் சந்தித்து விட்டு வந்திருந்தார்.
விவரங்களை நான்தான் குறித்துக் கொடுத்தேன். அதை ஊன்றிப் படித்த என் ஆசான் கீழ்காணும் வகையில் பரிவுரை செய்தார்.
.
ஆறு நாட்களுக்கு சாக்லாக் காலையிலும், மாலையிலும், ஏழாவது நாள் கந்தகம் வீரியம் 30 இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு கல்கேரியா கார்ப் 30 அடுத்த வாரம் பாஸிலினம் 200.
`இடையில் சாக்லாக் நிறையக் கொடுங்கள்’ புன்முறுவலுடன் என்னிடம் கூறினார் ஆசான்.
ஒரு மாதத்திற்குப் பின் வந்த அந்த அன்பன் போக்கு மாறியிருந்தது. வந்து வணங்கினார். என் ஆசான் எழுந்து நின்று அவரை அமரும்படி வேண்டினார். அவர் மறுத்து விட்டார்.
 .
`எனக்குப் புதிய உயிரை அளித்து விட்டீர்கள். உங்கள் உதவியை என்னால் மறக்கவே இயலாது என்றென்றும் நான் உங்களை நினைத்துக் கைதொழுவேன். அவருடைய விழிக்கடையில் நீர் சுரந்தது குரல் கம்மி விட்டது.
.
அந்த அன்பருடைய தமையன் மீண்டும் ஒரு முறை எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். இப்படி ஒரு மருத்துவ முறை இருக்கிறது என்றே எனக்குத் தெரியாது நீங்கள் ஒரு நடமாடும் தெய்வம் என்று கூறித் திரும்பினார்.
.
அவர் கூற்று முழு உண்மை.
.
கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். எனினும் இந்த மருந்து குறித்து எல்லாத் தகவல்களையும் இயம்பியிருக்கிறேனா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்பதே மறு மொழி. அத்தனை ஆழமும், பரப்புமுடையது இந்த ஔடதம்.
.
இந்த அறுவை சிகிச்சை முறை வியக்கத்தக்க வகையில் முன்னேறி விட்டது. அது பெரிய சாதனை. மறுக்க இயலாது. தோல் திசு எதையும் கிழிக்காமல் குழலை உட்செலுத்தி ஒளிக்கதிர்களைப் பாய்ச்சும் முறை (எண்டோஸ்கோப்) வந்துள்ளது. உதிரம் பெருகாமல் உறைய வைத்து இந்த சிகிச்சை முறையைக் கையாளுகிறார்கள் (லேசர்).
.
.. ..பெருங்குடல் பாதை, சிறுநீர்க் குழல், இதய நாளங்கள், மூளைப்பகுதியின் உதிரக் குழல்கள் ஆகியவற்றில் மருக்களும், சுவர்களும், திட்டுக்களும் கிளைப்பதுண்டு. இந்த மருத்துவ முறையினால் அந்தத் திசுக்களைத் தீய்த்து ஆவியாக்கி விட முடிகிறது என்றாலும், அவை மீண்டும் கிளைக்காமல் தடுக்க முடிவதில்லை.
.
அந்த வகையில்தான் ஹோமியோபதி மருத்துவத்தின் நிகரற்ற தன்மை ஒளி விடுகிறது.
ஒரு வீக்கம் வலமிருந்து இடம் போகிறதா?
அப்போது லைக்கோபோடியம்(LYCOPODIUM)
இடமிருந்து வலமா? லாக்கசிஸ்(LACHESIS)
குறுக்குவெட்டா? அப்போது அகாரிகஸ்(AGARICUS)
இடமும் வலமும் மாறி மாறித் தோன்றுகிறதா? லாக்கானினம்.(LAC-CANINUM)
.
இந்த உண்மையை என் அல்லோபதி நண்பர்கள் ஏற்கவே மறுக்கிறார்கள். இதை நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டிய பிறகு அவர்களுடைய வியப்பிற்கு எல்லையே இருப்பதில்லை. எத்தகைய ஆழத்திலுள்ள கட்டிகளையும் இது காணாமல் செய்து விடுகிறது. மீண்டும் கிளைக்க விடுவதில்லை. இந்தத் தகவலைச் சாய்வு எழுத்துக்களில் தருகிறார்கள் நிபுணர்கள். அந்த உண்மை மருத்துவ முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதே அதற்குப் பொருள்.
.
ஆனால் பொறுமை வேண்டும், கவனி, பொறு என்று எச்சரிக்கிறார் கெண்ட். நமக்குப் பொறுமை இல்லை.
கல்காரியா கார்பானிகாவை அடுத்து பெர்பெரிஸ் வல்காரிஸைக் (BERBERIS VULGARIS)கொடுத்து சிறுநீர்ப் பாதையிலுள்ள தடைகளை நீக்கிக் காட்டியபோது வெளி நாட்டில் உயர் கல்வி பெற்ற மேதாவிகள் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள். இன்று வரை விரல் அங்கேயே உள்ளது.
இன்னும் தோல் பகுதி? எத்தகைய வியப்புத் தரும் தகவல்கள்? எழுதவே இடமில்லை.
இந்த அரிய உண்மைகளை மெய்ப்பித்தவர் மேதை ஹானிமன் என்று எண்ணும்போது நமது இரு கரங்களும் உயரே எழும்புகின்றன.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து.....

keywords: ஓமியோபதி, மருத்துவம்,obesity, உடல் பருமன்,குண்டு,கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய்,பயம்,கவலை,எலும்பு பலவீனம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக