புதன், 18 மே, 2016

அடையாளம் அழியும்போது PLV

""""அடையாளம் அழியும்போது""

அன்பே !
வடிவம் இல்லாத ஒன்றிலிருந்துதான்
வடிவங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அடையாளமில்லாத
ஒன்றிலிருந்துதான்
அடையாளங்கள்
தோன்றிக் கொண்டு இருக்கின்றன.
இப்போது
அடையாளத்தை அழித்து
அடையாளமில்லாததாக்குவது எப்படி ?
அதுதான் காதல்.
ஆம்
அடையாளம் அழியாமல்
காதல் வராது.
காதல் வரும்போது
அடையாளம் இருக்காது.
அதனால்
அந்தக் காதலே அன்பு
அந்தக் காதலே தாவோ
அதனால் அன்பே
காதல்,  கடவுள்
தாவோ
எல்லாம் நீயே
ஏனெனில் நீ என்
அடையாளத்தை அழித்தவளல்லவா?                                                                                  #plv
#தாவோ மட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக