செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஓமியோபதி மருத்துவம் மேஜர் தி. சா. இராஜூ

 



ஒரு நல்ல புத்தகத்திற்கு அடையாளம் யாது ?
நூலைப் படிக்கத் தொடங்கியவர்களைக் கீழே வைக்க அது அனுமதிக்காது . ஒரு தரம் படித்த பின்பும் மீண்டும் படிக்கத் தூண்டும் . இந்த நிலை இந்நூலில் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இதைப் படித்தவர்கள் பலரும் இவ்வகையிலேயே தமது கருத்தைக் கூறியிருக்கி றார்கள் . பொதுவாக அறிவியல் நூல்கள் வாசிப்பவர்களுக்கு அயர்வை உண்டாக்கும் . மாறாக இது சோர்வை நீக்குகிறது . அறிவியல் கொள்கைகள் இனிப்பில் தோய்த்துக் கொடுத்திருக்கிறார் நூலின் ஆசிரியர் மேஜர் தி.சா.ராஜு அவர்கள்.
இதைப்பற்றிக் கணித்தவர்கள் அனைவரும் ஒரு முகமாகக் கேட்கும் கேள்வி இது .
'இதை எத்தனை முறை படித்தீர்கள் ?'
மேதை ரஸ்கின் கூறியது போல
'இது எல்லாக் காலத்திற்கும் ஏற்ற ஒரு நூல்'
Note..
தமிழ்நாட்டில் ஓமியோபதியை பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்ததில் பெரும்பங்காற்றிய மேஜர் தி.சா.இராஜூவின் ஹோமியோபதி மருத்துவம் நூல் சிறுசிறு பகுதிகளாக நாளை முதல் இப்பக்கத்தில் பதிவிடப்படும்..

1 கருத்து: