செவ்வாய், 31 ஜனவரி, 2017

வைசூரித் தடுப்பு என்னும் அம்மைவைப்பு Major T S RAJU


**************************************************************
வெள்ளைக்காரர்கள் இரண்டு வகை நோய்க்குப் பெருமளவில் ஆட்பட்டார்கள்.
முதலாவது வைசூரி,
மற்றது வெட்டை நோய். ஒவ்வொரு படை வீட்டிலும் சிறு கூடாரம் தனியாக இருக்கும். அதனுள் ஒரு மேஜை மேல் ஆணுறைகளும் ஒரு கையேடும் இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்களுக்கு ஊதியம் கொடுப்பார்கள் அன்று மாலை அவர்கள் அக்குளில் கொசுவலையை இடுக்கிக் கொண்டு அந்தக் கூடாரத்திலுள்ள ஏட்டில் பெயரை எழுதி விட்டு உறையை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுவார்கள். திங்கட்கிழமை அன்று காலை மருத்துவப் பரிசோதனை இருக்கும். மருத்துவர் அவர்களைப் பரிசோதித்துப் பெண் வழித் தொடர்பு நோய்க்கு மருந்து கொடுப்பார். இராணுவச் சட்டப்படி இந்த நோய்க்கு ஆட்படுவது தவறன்று. ஆனால் மறைப்பது குற்றம்.
இன்னொரு அவமானகரமான உண்மையையும் இங்கு கூறியே ஆகவேண்டும். இரண்டாவது உலகப்போரின்போது, (நம் நாட்டில் பெண்கள் உதவிப்படை WOMEN AUXILIARY CORPS) என்று ஒரு பிரிவு உண்டாக்கப்பட்டது. பெயரளவிற்கு அவர்கள் எழுத்தர்கள், மற்றபடிக்கு அவர்கள் வெள்ளைப்படை வீரர்களின் கிழத்தியராகவே பயன்பட்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் படையினருக்கு வைசூரித் தடுப்பிற்காக அம்மை ஊசி வைக்கப்படும்.
இரண்டாம் உலகப்போரின்போது இந்தியர்கள் பெருமளவில், படையில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களிடையேயும் இதே மரபு பின்பற்றப்பட்டது. பின்னால் அந்த வழிமுறை தளர்த்தப்பட்டு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அம்மைக்குத்தல் என்ற வழி ஏற்பட்டது.
ஆகவே படையில் சேர்க்கப்பட்டவுடன் ஒருவனுக்கு அம்மைக் குத்தல் ஊசி போடப்படும் அடுத்து ஒவ்வோர் இரண்டாண்டிற்குப் பிறகும் இந்தக் குத்தல் உண்டு. இதே வழிமுறை அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கட்டாயமானதாகும்.
உயிருள்ள அம்மைக்கிருமியை இவ்வகையில் உடலில் ஏற்றுவதனால் பல நோய்கள் விளையக்கூடும். அதற்கு ஆட்பட்டவனுடைய உடற்கூறே கெடும் என்று பல நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கம் இன்று வரை மாறவே இல்லை.
இந்த தடுப்பூசியினால் அம்மை நோயை அழித்து விட்டோம் என்று மார்தட்டுகிறார்கள். ஆனால் இந்த நோய் மாற்றுருவம் கொண்டு புற்றுநோயாக வெளிப்படுகிறது என்று என் ஆசான் மருத்துவர் சேஷாச்சாரி பல மருத்துவ ஏடுகளில் ஆதாரபூர்வமாக எழுதினார்.
எங்கள் மருத்துவமனையும் கெவுனியில் (இராணுவக் கோட்டை வாயில்) தான் இருந்தது. அங்கே வந்தவர்களில் பெரும்பாலோர் படையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர். அவர்களில் பெரும்பாலோருக்குச் சிறுநீர் தொடர்புள்ள, தோல் சம்பந்தமான செரிமானக் கொளாறுகளுடன் கூடிய தொந்தரவு இருக்கும். அதன் பொருட்டு என் ஆசான் ஒரு வழிமுறையை மேற்கொண்டார். உடனடியாக கவனிக்க வேண்டிய நோய்க் குறிகள் இருந்தால் ஒழிய அவர்களுடைய சீட்டில் ‘முறைப்படி’ (Routine) என்று எழுதுவார்.
அவை,
தூஜா 200
சிலீசியா 30
அலுமினா 30

ஆகும்.
இவற்றை ஏழுநாள் இடைவெளியில் தருவது வழக்கம். பெரும்பாலான நோயாளிகள் மறுமுறை வரமாட்டார்கள். படையினரின் உணவு அலுமினியப் பாத்திரங்களில் தான் அட்டிக்கப்படும். அவர்களுடைய உணவுத் தாலங்கள் கூட அலுமினியத்தால் ஆனவை. அலுமினியம் பளுக்குறைவான உலோகம், நெடுந்தூரம் நடந்தும், பதுங்கியும், ஓடவும் வேண்டியிருக்கும் வீரனின் சுமையை அதிகப்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த உலோகத்தில் அவனுடைய உபயோகப் பொருட்கள் தயாரிக்கப் பட்டன. ஆனால் அலுமினியத்தால் ஏற்படும் நோய்த் தாக்குதல் குறித்து எவரும் சிந்தித்ததாகவே தெரியவில்லை.
அம்மைக் குத்துவதினால் ஏற்படும் பின்விளைவுகள் பல… அதற்குப் பிறகு அவன் குணமடைவதே இல்லை. இந்த நோய் நிலைமைக்கு தூஜாவே சிறந்த மருந்து என்று எல்லா நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள், அதில் மட்டும் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை.
…..
நோய் வரலாற்றுக்குறிப்பில் அம்மைக் குத்தலின் பின் விளைவோ, விஷக் கடியோ இருக்குமானால் அப்போது தூஜா உறுதியாகப் பணிபுரியும்.
…..
மனக்குறிகள்- எல்லா நோயாளிக்குமே முக்கியம் என்றாலும் தூஜா நோயாளிகளிடம் இது சற்று விசித்திரமாக அமைந்திருக்கும். இந்த உலகம் தட்டையானது என்று அவர் நம்பினால் அதை நீங்கள் மாற்ற முடியாது. உலகம் உருண்டை என்று இவ்வளவு அறிஞர்கள் கூறியிருக்கிறார்களே என்று அவர்களிடம் நீங்கள் விவாதித்து வென்றுவிட முடியாது.
‘அதனால் என்ன? என்னைப் பொறுத்த வரையில் உலகம் தட்டையானதே’ என்பது தான் அவருடைய முடிவு. 
இவர்களுக்கு தூஜா தான் மருந்து….
ஆகவே
உரையாடலின் மூலம் அவர்களை வெல்ல முயற்சிக்க வேண்டாம்—
கைவல்ய ஞானநீதி

**********************************************************
மூலம்:
'பலமுனை நிவாரணிகள் பன்னிரெண்டு' நூலில் ..
மேஜர் தி.சா.இராஜூ
ஆசிரியர் விவரம்:
மேஜர் தி.சா.இராஜூ சாகித்ய அகாடமி பெற்ற எழுத்தாளர், ஹோமியோபதி மருத்துவர்,இராணுவத்தளபதி திருவையாறை அடுத்த தில்லைஸ்தானம் இவரின் சொந்த ஊர்.
(ஹோமியோபதியை சேஷாச்சாரி அவர்களிடம் கற்றவர், இவர் மருத்துவம் பார்க்கவென சிறப்பு அனுமதி பெற்றிருந்தார்.)
புத்தகம் வெளிவந்த ஆண்டு 1993

5 கருத்துகள்: