வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தாமிரம் என்றொரு மாமருந்து - மேஜர் தி.சா.இராஜூ


 CUPRUM METALICUM
அந்த ஊரிலேயே பெரிய வீடு வளவனார் இல்லம்.  அதன் தாழ்வாரத்தின் நடுவில் அமர்ந்து நீலமணி அம்மையார் மேஜை விரிப்பில் பூ வேலை செய்து கொண்டிருந்தார்.  அடுத்தக் கூடத்தில் அழகான ஓவியங்கள், மைக்கேல் ஆன்ஜலோ, ரூபன் ஆகிய புகழ் பெற்ற கலைஞர்களின் படங்களை  நகல் செய்த பிரதிகள்.  தெய்வத் தூதர் மோசசுக்கு செங்கடல் பிளந்து வழி விடுவது.  கடைசி இராப்போசனம் ஆகிய காட்சிகளில் உள்ள்த்தை ஈர்த்தன.  ஒரு மூலையைப் பழநி மலைக் குன்றின் படமும் அலங்கரித்தது.  அந்த வீட்டில் வசித்த நல்லவர்களின் சமயப் பற்றையும், பொறையையும் பறை சாற்றின.

கையில் சிறிய பையுடன் வீட்டினுள் நுழைந்தாள் ஜீனத்
"வணக்கம் அம்மா’’
வா மகளே, நலமாக இருக்கிறாயா? கையிலிருந்த விரிப்பைக் கீழே வைத்துவிட்டு வினவினார் நீலமணி.
மரியம் இல்லையா?
உள்ளே இருக்கிறாள்.  கூப்பிடுகிறேன்.  நீ தற்போது எங்கிருந்து வருகிறாய்?
நளினாவின் குழந்தைக்கு இன்று பெயர் வைத்தார்கள்.  வீடு முழுவதும் ஒரே வேப்பிலை.  அங்கிருந்துதான் வருகிறேன்.

வேப்பிலை ஒரு நோய்த் தடுப்பு மருந்து மகளே.  குழந்தை பிறந்த வீட்டின் வாசலிலேயே ஒரு வேப்பிலைக் கொத்தைச் செருகி வைப்பார்கள்.  சித்த மருத்துவத்தில் அதற்கு மகமாயி என்றே பெயர்.
குழந்தைக்கு செண்பகராமன் என்று விடுதலை வீரரின் பெயரை வைத்திருப்பதாக மரியம் கூறினாள்.
ஆமாம் ஜீனத் அவர்கள் ஒன்றாய்ப் படித்தவர்களாயிற்றே?   நளினாவின் திருமணத்தில்கூட எங்களுக்குத்தான் முதல் மரியாதை.
நானும் அவர்களுடன் படித்தவள்தான் அம்மா. ஓராண்டு ஜூனியர்.
அறையிலிருந்து வெளியே வந்த மரியம் வியப்பு மிகுதியினால் கூவினாள் நீயா ஜீனத்?
ஆமாம். நீ உள்ளே என்ன செய்து கொண்டிருந்தாய்?
வில்லியம்ஸ் பால் குடித்தான்.  அத்தை அவன் பால் குடித்தவுடன் கக்கிவிடுகிறான்.  தன் மாமியிடம் கூறினாள்.
இன்றும் கக்கி விட்டானா?
இன்னும் இல்லை

அவனை என்னிடம் கொண்டு வா.  இதன்பின் மரியம் உள்ளே சென்று மதலையை எடுத்துக் கொண்டு வந்தாள்.  நீலமணி குழந்தையைத் தோளில் சார்த்திக் கொண்டார்.  பால் கொடுத்தவுடன் படுக்க வைக்கக் கூடாது.
குழந்தையின் முதுகை நீவி விட்டார்.  சில நொடிகளுக்குப் பிறகு ஏப்பம் வெளி வந்தது.

இதுதான் பிள்ளை வளர்க்கும் தந்திரம்.  பால் உள்ளே போனதும் அங்கிருந்து காற்று மெல்ல வெளி வர வேண்டும்.
ஜீனத் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.  தோழியர் இருவரும் பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டனர்.  தங்கள் ஆசிரியர்கள் சக மாணவர், மாணவியர் எல்லோரையும் பற்றி நிறையப் பேசினர்.
உன் கணவர் தற்போது எங்கே இருக்கிறார் ஜீனத்?
மஸ்கட்,  தினமும் அவருடன் பேசுகிறேன்.  எங்கள் வீட்டில் தொலைபேசி இருக்கிறது.  என்றாலும் . . .

மரியம் புரிந்து கொண்டாள்.  உலகத்தில் ஏதாவது ஒன்றுதான் கிடைக்கும்.  நிறையச் செல்வம் சேர்க்க வேண்டுமானால்  பிரிவைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.  வில்லியம்ஸின் தந்தை நாள் முழுவதும் உழைக்கிறார்.  நானும் மழலைப் பள்ளியில் ஆசிரியை என்றாலும் நாங்கள் சேர்ந்திருக்க முடிகிறதே.
அம்மா குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது எதற்காகக் காப்பு அணிவிக்கிறார்கள்? இது ஜீனத்.
அது நெடுநாளைய வழக்கம் மகளே.  தலை முழுகாமலிருக்கும் பெண்ணுக்கு ஐந்தாம் மாதமே காப்பிடுவார்கள்.  பிறந்த குழந்தைக்குப் பன்னிரண்டாம் நாள் காப்பிடுகிறார்கள்.  காப்பு என்பது பாதுகாவல்.  நோய்த் தடுப்புக்காகச் செய்யப்படுவது.

புரியவில்லையே?

ந்தக் காப்பில் ஐந்து உலோகங்கள் இருக்கும். அவற்றில் தாமிரம் மிகுதி.  அது உடம்பில் படுவதால் பல நோய்கள் நீங்கும்.  நீங்கள் தாவிஸ் (தாயத்து) அணிகிறீர்கள்.  அதிலும் முக்கியமானது தாமிரம்.  எந்த வகையிலாவது தாமிரம் உடலில் இணைந்திருப்பது நன்மை பயக்கும்.
Image result for செம்பு தாயத்து

அதில் ஏதோ மந்திரம் எழுதுகிறார்களே?

அதைப் பற்றி எனக்குத் தெரியாது.  வெள்ளிக்கு அடுத்ததாக தாமிரம் சிறந்த மின்கடத்தி.  அதில் பட்டுச் சிதறும் ஒளிக் கதிர்கள் நல்ல மருந்து.  இதை எல்லாம் நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.  அதை வழக்கத்திலும் கொண்டு வந்தார்கள்.

2.
உன் திருமணத்தன்று மாலை இசைச் சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்ததே அது நினைவிருக்கிறதா? நீலமணி வினவினார்.

அதை எப்படியம்மா மறக்க முடியும்?  இரட்சணீய யாத்திரிகத்தின் இறுதிப் பகுதியை அவர் நம்பட உரைத்தார்.  நாங்கள் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

உரை ஆற்றியவரின் பெயர் சவேரிநாதப் பிள்ளை.  அவர் என்னுடன் படித்தவர்.

அந்த விவரம் எனக்குத் தெரியாது அத்தை.
அவர் தமது இடது கையில் ஒரு செப்புக் காப்பு அணிந்து கொண்டிருந்தார்.  அதைக் கவனித்தாயா?
பார்த்தேன் அத்தை.

அதை அவருக்கு இட்டவர் என் வகுப்பாசிரியர் முருகேச முதலியார்.  சவேரிக்கு அப்போது பதினான்கு வயது இருக்கும்.  இன்று வரை அவர்.அதை அணிந்து கொண்டிருக்கிறார்.

உங்கள் ஆசிரியர் மருத்துவரா?

இல்லை.  ஆனால் அவருக்கு மருத்துவ சாஸ்திரம் தெரியும்.  அந்த நாட்களில் ஆசிரியர்- மாணவர் உறவு மிகவுமி நட்புடன் இருக்கும்.  ஒவ்வொரு மாணவனின் குடும்ப வரலாறு, பொருளாதார நிலை, அனைத்தையும் அவருடைய ஆசிரியர் தெரிந்து வைத்திருப்பார்.

ஜீனத்தும், மரியமும் உன்னிப்புடன் செவிமடுத்தார்கள்.
ஒரு நாள் சவேரிநாதன் பள்ளிக்கு வரவில்லை .  அடுத்த நாளும் அவர் வராமல் போகவே வகுப்பாசிரியர் அவருடைய வீட்டிற்கே சென்று விசாரித்திருக்கிறார்.

சவேரிக்கு உடல் நிலை சரியில்லை.  முந்தா நாள் மாலை தடாலென்று கீழே விழுந்துவிட்டான்.  உடல் சில்லிட்டு விட்டது.  பேச்சு மூச்சு இல்லை.
வைத்தியர் வந்ந் பார்த்தாரா?

கை வைத்தியம் தானுங்க மாற்றம் ஏதுமில்லை.

முருகேச முதலியார் அந்த வீட்டின் கொல்லைப்புறம் சென்று சில இலைகளைக் கொண்டு வந்தார்.  அவற்றை இடித்துப் பிழிந்து சாற்றை சவேரியின் வாயில் செலுத்தினார்.  ஒரு மணி நேரத்தில் உணர்வு திரும்பிற்று.  இலேசான உடல் அசைவு.  மறுநாளே சவேரிநாதன் பள்ளிக்கு வந்தார்.  அன்று மாலை எங்கள் ஆசிரியர் அவனுடைய வீட்டிற்குச் சென்று  ஒரு செப்புக் காப்பை அணிவித்தார்.  இன்று வரை அவர் அதை அணிந்திருக்கிறார்.
Image result for செம்பு காப்பு பயன்கள்

செப்பை அணிவதில் இவ்வளவு நற்பயன் இருக்கிறது என்பது எனக்குப் புதிய செய்தி.  ஜீனத் மகிழ்ச்சியுடன் கூறினாள்.

தாமிரத்தின் வேதிக் குறியீடு Cu ஆகும். பழங்காலத்தில் உள்ள செம்புச் சுரங்கங்களில் மிகவும் புகழ்பெற்றது சைப்ரஸ்(Cyprus) தீவிலுள்ள சுரங்கமாகும். இதிலிருந்துதான் செம்பு என்ற பெயரே உருவானது. இலத்தீன் மொழியில் செம்பிற்கு குப்ரம்(Cuprum) என்று பெயர்.செம்பு செந்நிறமும், பளபளப்பும், உறுதியும் கொண்ட ஓர் உலோகம். இதை அடித்துத் தகடாகப் பயன்படுத்தவும் கம்பியாக நீட்டி உபயோகிக்கவும் செய்யலாம். தங்கம், வெள்ளிக்கு அடுத்தபடியாக உயரளவு வெப்பம் மற்றும் மின் கடத்தும் திறனை செம்பு பெற்றுள்ளது. வறண்ட காற்று செம்பைப் பாதிப்பதில்லை. ஆனால் ஈரமான காற்று வெளியில் அதன் பொலிவு மங்கிப் போகின்றது

மேதை ஹானிமன் இந்த மருந்தின் சிறப்பு குறித்துத் தமது நாட்பட்ட நோய்களில் எழுதுகிறார்.  ஹெர்ரிங்கின் மெட்டீரியா மெடிக்காவிலும் இது இடம் பெற்றுள்ளது.  ஆயுர்வதே, சித்த மருத்துவர்கள் இதைச் சாம்பலாக்கி (பஸ்மம்) மிக அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.  இது ஒரு சிறந்த நோய் தடுப்பு மருந்து என்று புலிப்பாணி உறுதி செய்கிறார். 

 சிறப்பாகக் கால் கெண்டைச் சதை நரம்புகள் சுருட்டிக் கொண்டு தொந்தரவு கொடுத்தால், உடனடியாக அவர்களுக்குச் செம்பு கலந்த மருந்தைத் தரலாம்.

இசிவு (spasm) என்ற ஒரே சொல்லில் இதன்தன்மையை விளக்கி விடலாம் என்பது மேலோர்கள் கருத்து.  உடலின் எல்லா இயக்கங்களையும் சீராக நடத்துவது மூளைப்பகுதி.  அதற்கு இசைவாக இல்லாத நிலை இசிவு.  உடலின் நரம்புகள், உறுப்புகள், திசுக்கல் ஆகியவை தன்னிச்சையாகச் செயல்படும் நிலை இது.  மிகவும் கொடியது.

இதற்குக் காரணம் என்ன என்று இன்று வரை உறுதியாகக் கூற இயலவில்லை.  மருத்துவ சாஸ்திரமே திணரும் ஒரு கொடிய சுகவீனம் இது.  இதில் பாரம்பரியத்திற்குப் பெரும் பங்கு உண்டு.  சமயத் தலைவர்கள், பேராசிரியர்கள், அறிவாளிகள் பலர் இந்தச் சீர்கேட்டிற்கு ஆளாகியிருக்கிறார்கள்.  அந்த நோயுடன் வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள் என்றாலும் தாமிரம் இதே நிலையிலிருந்து பாதுகாப்பளிக்கிறது என்பது ஒரு பேருண்மை.

என் செயல் முறையினால் பலர் நிரந்தரமாகக் குணமடைந்திருக்கிறார்கள்.  சிலர் சீராகவே இல்லை.  ஆனால் எனக்கு உறுதுணையானவை இரு மருந்துகள்.  ஒன்று தாமிரம மற்றது மரிக்கொழுந்து (தவனம்)(ABROTANUM) மரிக்கொழுந்தைச் சீனர்களும் பயன்படுத்திப் பலன் கண்டிருக்கிறார்கள்,
பேறுகாலத்திற்குப் பிறகு கைவிடப்பட்ட பல மங்கையரை இது குணப்படுத்தியிருக்கிறது.  இதன் முதற்குறி உடல் சில்லிட்டுப் போதல்.  அடுத்து உடலுறுப்புகள் தாமாக அசையும், வளையும் அல்லது இயங்க மறுக்கும்  அந்தச் செயலற்ற நிலையிலும் விக்கல், வாந்தி, வயிற்றுப் போக்கு எல்லாம் இருக்கும்.

அவ்வப்போது நோய் வரும்போது மருந்து கொடுப்பதை விட தடுப்பு முறையாக தாமிரத்தை அணிவது ஒரு நல்ல செயல்முறை.
இது குறித்து இன்னும் விரிவாகச் சிந்திக்க வேண்டும்.

3.
அய்யா, தஸ்லீம்.  குவிந்த விரல்களை நெற்றியில் தொட்டு வணக்கம் தெரிவித்தார்.
வணக்கம் நண்பரே, உட்காருங்கள்.  நாற்காலியைச் சுட்டிக் காட்டினேன்.  அவருடைய உடல் இயக்கத்தில் தேவையற்ற பரபரப்பு காணப்பட்டது.
என் தம்பிக்கு உடல் நலம் சீராக இல்லை.  நீங்கள் உடனடியாக அவரைப் பார்க்க வேண்டும்.
அவரை அழைத்து வாருங்கள்.  அவருக்கு என்ன கோளாறு?
முதலில் வயிற்றுப் போக்கில் தொடங்கிற்று.  அடுத்து வாந்தி.  அடுக்கடுக்காக இருமல்.  மூச்சே நின்றுவிடும் நிலை.
அவர் என்ன வேலையில் இருக்கிறார்?

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் அலுவலர்.   இரண்டு நாட்களாக விடுப்பில் இருக்கிறார்.   இன்னும் அரை மணி நேரத்தில் அவரை அழைத்து வருகிறேன்.
உள்ளே வந்த அன்பரைக் கட்டிலில் படுக்க வைத்தேன்.  மின் விசிறியை நிறுத்தினேன்.  படுத்த நிலையிலேயே அவர் இருமத் தொடங்கினார்.  மூச்சு முட்டிற்று.  தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்தார்.  ஒரு மிடறு அருந்தியதும் மெள்ள எழுந்து உட்கார்ந்தார்.  அந்த ஒரு குறியே எனக்கு மருந்தை இனம் காட்டி விட்டது என்றாலும் அவருடைய நாடியைப் பரிசோதித்தேன்.  கை சில்லிட்டிருந்தது.  நெற்றியின் நிலையும் அதுவே.  உதடுகளில் நீல நிறம்.  மேல் அங்கியை விலக்கிப் பார்த்தேன்.  நெஞ்சில் திட்டுத் திட்டாக நீல வட்டம்.

உங்களுக்கு என்ன சுகவீனம்?  அவரைப் பரிவுடன் வினவினேன்.  நோயுற்றவர்களிடம் தேவைக்கதிகமான பரிவு காட்ட வேண்டியது அவசியம்.

என் அலுவலகத்தில் ஏழு உதவியாளர்கள் இருக்கிறார்கள்.  எல்லோரும் அந்தத் தட்டச்சரிடம் பொறாமை பாராட்டுறார்கள்.  ஏனென்றால் அவர் எடுபிடி ஆளாகச் சேர்ந்து தன் முயற்சியால் முன்னேறி விட்டார்.
அப்படியா? நான் உங்களுடைய சுகவீனத்தைக் கேட்டேன்.  நான் மீண்டும் அவருக்கு நினைவுபடுத்தினேன்.

அமெரிக்காவில் கிளிண்டன் அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தின் செயல்பாடு எந்த வகையில் நியாயம்? அவர் வினவினார்.
நான் அவருடைய தமையனின் முகத்தை நோக்கினேன்.

இப்படித்தான் என் தம்பி தொடர்பில்லாமல் பேசுகிறார்.  முன்பு ஒரு தரம் இப்படி ஆயிற்று.  சென்னைக்கு அழைத்துச் சென்றோம்.  மின் அதிர்வு கொடுத்தார்கள்.  சிறிது குணம் தெரிந்தது.  இப்போது அதே குறைபாடுகள் மீண்டும்  தலை தூக்குகின்றன.  பயங்கரமான அடுக்கு இருமல்.  சாப்பாடே செல்வதில்லை.  பால் கொடுத்தாலும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளது.
அன்பரின் நாவைப் பரிசோதித்தேன்.  வெள்ளை மெழுகுப் பூச்சு.  சுவாசம் சீராக இல்லை.  அவருக்கு மருந்து தாமிரம்தான் என்று முடிவு செய்தாயிற்று.  குப்ரம் மெட்டாலிக்கம் ஆறு, இரண்டு உருண்டைகள் சீனித் துகளில் கலந்து உட்செலுத்தினேன்  அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

அமைதியாகப் படுத்திருக்கும்படி வேண்டினேன்.  சிறிது நேரத்திற்குப் பிறகு கண்களை மூடினார்.  பலமான குறட்டை ஒலி.
தாமிரம் மிகவும் ஆழமாக வேலை செய்யும் மருந்து.  ஆகவே செயல்படும் மெதுவாகத்தான் இருக்கும்.  ஜே.டி.கெண்டின் புத்தகத்தைப் புரட்டினேன் (பக்கம் 488).

தாமிரத்திற்கு பல வெளிப்பாடுகள் உள.  அவற்றில் முக்கியமானது பிதற்றல், உளறல், தொடர்பற்ற பேச்சு, மணம் அலைபாயும்,  ஜன்னி கண்ட நிலை,  உடல் உணர்வற்றுப் போகும்.  அந்த நிலையிலும் கை, கால்கள் உதறும், வெட்டும், வலிப்பும் தொடரும்.  நெஞ்சிலிருந்து கேவல் எழும்.  சில சமயங்களில் அது கன்றுக்குட்டியின் குரலைப் போல இருக்கும்.
பல நேரங்களில் அவன் உயிரிழந்தவனைப் பேல் அசையாமல் கிடப்பான்.  உடலின் பல பகுதிகள் சுழித்துக் கொள்ளும்.  அசையும்.  அடுக்கிருமல் வரலாம்  இருமி, இருமி, சோர்ந்து போய் மூச்சே நின்று போகும் நிலை, இருமல் உள்ளபோது சிறிது குளிர்ந்த நீரைக் கொடுத்து விட்டால் சமநிலைக்கு வரும்.  நோயாளியின் குரலே மாறிவிடும், என்ன பேசுகிறாரென்றே தெரியாது.  மீண்டும் பழைய நிலைக்கு வரச் சில மணி நேரமாகலாம்.  கை விரல்களை இறுக மூடிக் கொள்வான்.  திறக்க மறுப்பான்.  விழிகள் உருளும்.  மேல் நோக்கி இடம் மாறும்.  இத்தகைய நிலை ஒரு மருத்துவனையே திணறச் செய்யும்.  விவரமறியாத உறவினர்கள் என்ன செய்வார்கள்?

பலவகைக் கருவிகளுடன் நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர் என்ன முடிக்கு வர இயலும்? நாடி தளர்ந்திருக்கும்.  உதிர அழுத்தமே இராது.  ஒவ்வொரு குறிக்கும் தனித்தனி மருந்துகள் கொடுப்பார்.
இவ்வளவு குறைபாடுகள் உள்ள நோயாளியைத் தாமிரச்சத்து ஓரிரு நாளில் சீராக்கி விடமுடியுமென்றால் மனித சமுதாயத்திற்கு இதைவிடப் பெரிய தொண்டு என்ன இருக்க முடியும்?

படுத்திருந்த அன்பர் மெள்ள அசைந்தார்  உட்கார விரும்பினார்.  தண்ணீர் வேண்டுமென்று சைகை செய்தார்.  ஒரு குவளை நீர் அருந்தினார்.  எழுந்து நின்று விறுவிறுவென்று நடந்து வாசலில் நின்ற ஆட்டோவில் ஏறிக் கொண்டார்.  எனக்கு வணக்கம் தெரிவித்தார்.  அவருடைய தமையனாரை உடன் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.

அன்பர் கையை உயர்த்தி அசைத்தார்.  """"குதாஹாஃபிஸ்’’ நான் வழி அனுப்பி வைத்தேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு தமையன் தம்பி இருவருமே சைக்கிளில் வந்தனர்.  மிகுந்த நன்றி அய்யா, இப்போது ஒரு தொந்தரவுமில்லை.
அவரை மீண்டும் பரிசோதித்தேன்.  ஒரு சிட்டிகை கல்காரியா கொடுத்தேன் (க்ளார்க் பக்கம் 238) இன்ஷா அல்லாஹு.
இறைவனுக்கு ரெஹ்மான் என்று ஒரு பெயர் உண்டு ரெஹம் என்றால் கருணை என்று பொருள்.
அவர்களை வழி அனுப்பி வைத்தேன்.

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக