திங்கள், 28 நவம்பர், 2016

திக்குவாய்க்கு ஹோமியோபதியில் தீர்வு

Image may contain: text

உலகில் உள்ள பெரும்பாலானோர் சிறுவயதில் திக்குவாயால் அவதிப்பட்டிருப்பர்.வளர வளர பலருக்கு இந்த பிரச்சனை சரியாகிவிடும். நடுவயதிலும் சிலருக்கு திக்குவாய் பிரச்சனை ஏற்படுகிறது.
திக்குவாய் (STAMMERING OR STUTTERING) நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் வருகிறது. நவீன மருத்துவம் திக்குவாய் உள்ளிட்ட 51 நோய்களுக்கு மருந்தில்லை என சொல்கிறது. https://en.wikipedia.org/wiki/Schedule_J
திக்குவாய்க்கான காரணங்கள்:
குழந்தைகளை பயமுறுத்தி அல்லது மிரட்டி வளர்ப்பது, உறவினர்கள் முன் அவமானப்படுத்துவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவது
தாழ்வு மனப்பான்மை
அதிர்ச்சியடைதல்,
ஏமாற்றம், மனவேதனை, திடீர் இழப்பு
நெருங்கிய உறவினர்களின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி
கோபம்,எரிச்சல்,வெறுப்பு
போன்ற
மனரீதியான பாதிப்புகளாலோ அல்லது
பாரம்பரியத்தினாலோ(heredity) அல்லது அடிபடுதல்(accidents or injuries) மூலமாகவோ நரம்பு மண்டலம்(nervous system) பாதிக்கப்பட்டு திக்குவாய் வருகிறது.
திக்குவாய் தீர்க்கமுடியாத வியாதியல்ல, இதை முறையான மூச்சுப்பயிற்சி மற்றும் பேச்சுப்பயிற்சி மூலமாகவே தீர்க்கமுடியும்.மரபுசார் மருத்துவங்கள் அனைத்திலும் திக்குவாய்க்கு தீர்வு உண்டு,இருந்தாலும் ஹோமியோபதி மிக எளிய முறையில் குணப்படுத்துகிறது.
நோய் மற்றும் குணம் பற்றி ஹோமியோபதி மருத்துவத்தின் பார்வை:
நவீன மருத்துவத்தில் கூறப்படுவது போல் கருவி ஆய்வுகள், உடல் இயங்கியல்,உடல் கூறு இயல் மற்றும் நோய்க்கூறு இயல் ஆய்வுகள் அவசியமில்லை
ஹோமியோபதியில் துயரர்களின் குறிகள் பிரதானமாகக் கருதப்படுகின்றன.துயரர்களின் குறிகளுக்கு இணங்க ஒத்த மருந்தைத் தேர்வு செய்து கொடுத்தால் போதும்.
ஹோமியோபதி நோய்க்கான காரணமாக எதை சொல்கிறது?
வள்ளுவர் சொல்வதுபோல
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
இவர் இங்கே குறிப்பிடுவது, பித்தம் வாதம் மற்றும் கபம் என்ற மூன்றைத்தான். இவை மூன்றும் சமச்சீர் நிலையில் இருக்க வேண்டும்.இதில் எந்த ஒன்று குறைந்தாலும் (அ) கூடினாலும் நோய் வரும் என்கிறார்.
ஹோமியோபதியில் நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு மனிதனில் உள்ள வாயு.வெப்பம் மற்றும் நீர் இம்மூன்றும் சமச்சீர் அளவில் இருக்க வேண்டும். அதுபுறத்தே உள்ள வெப்பம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல் கூடவோ குறையவோ இல்லாமல் எப்போதும் சீராக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நோய் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.மனிதன் என்பவன் மனம்+உடல்+ஆன்மா இவைகளின் கூட்டு ஆகவே அவனை முழுமையாக அணுகுவதே நோய் தீர்க்க உள்ள ஒரே வழியாகும். நாம் ஹோமியோபதியில் புற அவயங்களின் முழுமைக்குறிகள் (physical general) என்று பார்க்கிறோம். இது மட்டுமில்லாமல் மனம் சார்ந்த பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம் (MENTAL GENERAL) ஏனெனில் மனமும் உடலும் சேர்ந்தது தான் முழுமையான மனிதன்.மனம் நோயுறாமல் உடல் நோயுறாது. ஆகவே நோயுற்ற மனிதனை முழுமையாக ஆராய்ந்து மனம் மற்றும் உடல் சார்ந்த தனித்துவக்குறிகளை கணக்கில் எடுத்து மருந்து கொடுக்கும்போது நோயாளியின் ஆரோக்கியம் மீள்கிறது.
---------------------
ஹோமியோபதியில் தீர்வு:
ஹோமியோபதி மருத்துவம் திக்குவாய் நோய் மட்டுமல்ல நவீன மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோய் பலவற்றை தீர்க்கும் மருத்துவம் ஆகும்.ஹோமியோபதியில் நோய்க்கல்ல மருந்து,நோயுற்ற நோயாளிக்கே மருந்து.மருந்தை நோயாளிக்கு தருவதால் நோயாளியின் நோய் எதிர்ப்பு ஆற்றலை தூண்டி நோயாளியின் அனைத்து நோய்களையும் களைகிறது.
துயரர்-1
சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்,கடந்த 4 வருடமாக பேசும்போது திக்குகிறது,நண்பர்களிடம் மற்றும் தெரிந்தவர்களிடம் பேசும்போது திக்குவதில்லை.புதிய நபர்களிடம் பேசும்போது, பேராசியர்களிடம் VIVAக்கு பதில் சொல்லும் போது பதட்டம் அதிகமாகி திக்குகிறது,அந்த சமயத்தில் ஒரு வாக்கியம் பேசி முடிப்பதற்கு 5நிமிடத்திற்கு மேலாகிவிடுகிறது.
இவரின் பயம் தன் வழக்குரைஞர் தொழிலே பேச்சை மூலதனமாக கொண்டது இப்படி திக்குவதால் தன் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று பயம்.மேலும் ஆசிரியர்கள் தான் இப்படி திக்கி திக்கி பதில் சொல்வதை பார்த்து திட்டுவார்களே, எப்படி நாம் பட்டப்படிப்பை முடிப்போம் என்ற பயம் அதிகமாக உள்ளது.
விசாரித்ததில் 4 வருடத்திற்கு முன் தன் காதலியுடன் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டையால் அவர் கோவித்துக் கொண்டு இவருடன் கடந்த 4 வருடமாக பேசவில்லை.தான் தவறு செய்துவிட்டோம் அவளை நாம் திட்டியிருக்கக்கூடாது ,அதனால் தான் அவள் தன்னிடம் பேசவில்லை என நினைத்து கடும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கிறார், இந்த நிகழ்வு இவருக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியது,அதன்பிறகுதான் இவருக்கு பேசும் போது திக்குவது வந்தது.

Rx
Similimum Homeo medicine prescribed
Follow up
6 மாதம் திக்கவில்லை மறுபடியும் லேசாக திக்கல் வந்தது.மருந்து தொடர்ந்து ஒரு வருடம் எடுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது.
தற்போது மருந்து நிறுத்தி 2 வருடங்களாகிறது.தற்போது வரை திக்குவாய் தொந்தரவு இல்லை. வெற்றிகரமாக படிப்பை முடித்து இப்போது வழக்குரைஞராக பணிபுரிகிறார்.

துயரர்-2
துயரர் பள்ளி மாணவர் அவருக்கு சின்ன வயசுல இருந்து திக்குவாய், திக்கி திக்கிதான் பேசுவார், யாராச்சும் கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாது,பயங்கரமா திக்கும்,புது ஆட்களை கண்டாலே பயப்படுவார்
ஆனால் பேச ஆரம்பிக்கும்போது தான் திக்கும், நாலு வார்த்தை பேசிட்டான்னா அப்புறம் திக்காது.
திக்குவாயால் என்ன என்ன பாதிப்பு என விசாரித்ததில்……..
“சார்! நான் +2 படிக்கிறேன், ஃப்ரெண்ட்ஸ்லாம் படிக்கறப்ப நான் சத்தமா திக்கி திக்கி படிக்கறது டிஸ்டர்பா இருக்கு தூரமாப்போய் படிடா… அப்படின்னு சொல்றப்ப மனசு ரொம்ப கஷ்டமாயிடுது, இதுக்காகவே நான் எல்லோரிடமிருந்தும் ஒதுங்கியே தனியா படிப்பேன்.
பேசும்போது திக்குவதாலயே யாரிடமும் பேசவே நான் விரும்புவதில்லை,அப்படி பேசும்போது அவர்கள் ஏதும் சொல்லிட்டா மனசு தாங்காது.
எப்ப எப்ப திக்குது?
புதிய நபர்களிடம் பேசும் போது,அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது,
ஆசிரியர்களிடம் பதில் சொல்லும்போது,
பரீட்சைக்கு சத்தம் போட்டு படிக்கும்போது
பாட்டு பாடறப்ப திக்கறது இருக்காது.
(பாட்டு பாடும்போது துயரர்கள் பெரும்பாலானோரிடம் திக்குவது இருக்காது,காரணம் அது ஞாபகத்தில் இருந்து வருவது,பேசுவது உடனடியாக சிந்தித்து பேசுவதால், தவறாக பேசிவிடுவோம் என்ற பயம்,பதட்டத்தால் திக்குகிறது).
Observation
பேசும்போது ஒவ்வொரு முறையும் வாக்கியத்தை முடிக்கும் முன்னே வார்த்தைகளை முழுங்கிவிடுகிறார்.
Rx
Similimum homeo medicine prescribed
Follow up
6 மாதங்களில் 50% better
2 வருடங்களுக்கு பிறகு
80% better மீண்டும் மருந்து கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு வருடம் சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
ஒரு வருட சிகிச்சைக்குப் பின் நன்றாக தேறிவிட்டார். ஆனாலும் எப்போதாவது திக்குகிறது.அதுவும் முறையான மூச்சுப்பயிற்சியும் பேச்சுப்பயிற்சியும் செய்தால் அதுவும் இருக்காது. தற்போது +2 வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று B.E. படித்துக்கொண்டுள்ளார்.

1 கருத்து:

  1. வணக்கம்,
    என் பெயர் அக்னிராஜ் மதுரை.
    வயது-36.
    எனக்கு ஆறாம் வகுப்பு முதல் திக்குவாய் பிரச்சனை உள்ளது.
    என் மகனுக்கு 4 வயது அவனும் ஆறு மாதங்களாக திக்கிப் பேசுகிறான்.
    எங்களுக்கு நல்ல தீர்வைத் தாருங்கள்.!
    உங்களின் தொடர்பு எண் மற்றும் விலாசம் தந்தால் நேரில் வந்து சந்திக்கிறேன்.!

    பதிலளிநீக்கு