செவ்வாய், 24 அக்டோபர், 2017

நத்தைகளை ஒழிக்க என்ன வழி?

நத்தைகள் பெருக்கம் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படும் இந்த நிகழ்வுகளை
நாம் வேறு கண்ணோட்டத்தில் அணுகவேண்டி உள்ளது.
ஏன் இந்த நத்தைகள் இவ்வாறு பெருகுகிறது?
நத்தைகள் பெருக்கத்திற்கான காரணம் என்ன?
அது இயற்கைக்கு எதிரான நமது விவசாய முறை தான்..

இரசாயண உரம், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை பயன்படுத்தி நிலத்தின் தன்மையை பாழ்படுத்திவிட்டோம்.நிலத்தின் இந்த பாழ்பட்ட தன்மை இந்த வகை நத்தைகள் வாழ ஏற்றதாக இருக்கிறது. இதுதான் காரணம்.

சரி இப்போது என்ன செய்வது?
மீண்டும் அதே தவறை நத்தைகளை களைவதிலும் செய்வதா?

இல்லை.நாம் விழிப்புணர்வுடன் இயற்கை சார் விவசாயத்திற்கு மாறவேண்டியுள்ளது.

நத்தைகளை ஒடுக்க தீர்வு:
நத்தைகளை அகற்ற எளிதான தீர்வு அக்ரோ ஹோமியோபதியில் இருக்கிறது.
Helix tosta 6X என்ற இந்த மருந்தை கொண்டு மிக விரைவாக நத்தைகளை ஒடுக்கமுடியும்,(பயன்படுத்தும் முறையை அக்ரோஹோமியோபதி வல்லுநரிடம் கேட்டுக்கொள்ளவும்) .

இதற்கு முன்னே இம்மாதிரி நத்தைகள் பெருக்கம் ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் மாகாணத்தில் பெருமளவில் இருந்தபோது இந்த அக்ரோ ஹோமியோபதி மருந்தை பயன்படுத்தி அய்யா வைகுந்தநாத் கவிராஜ் அவர்கள் நத்தைகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தினார்.
வெற்றிகரமாக மட்டுமில்லாமல் எளிதாகவும் நத்தையை கட்டுப்படுத்தியதால் ஆஸ்திரேலியா பூச்சிமருந்து வியாபாரமே பாதிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சோகமான நிகழ்வு என்னவெனில் இவரது இந்த அக்ரோ ஹோமியோபதி புரட்சியால் நஷ்டமடைந்த பூச்சிமருந்து பெருமுதலாளிகள் ஆஸ்திரேலியா அரசை கைக்குள் போட்டுக்கொண்டு கவிராஜ் அவர்களை நாட்டை விட்டே வெளியேற வைத்துவிட்டனர்.


இணைப்பு:
தினமலர் மற்றும் தமிழ் இந்து செய்திகள்

நத்தையால் திணறுது திண்டுக்கல்
http://new.dinamalar.com/district_detail.asp?id=1414317
நகர்த்த முடியாக நத்தை முகாம்
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19767616.ece
நத்தைகளை ஒழிக்க என்ன வழி
http://tamil.thehindu.com/…/reporter-pa…/article19910712.ece

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக