செவ்வாய், 24 ஜனவரி, 2017

சர்வதேச சூழலும் ஹோமியோபதியும் பழ. வெள்ளைச்சாமி




இன்றைய சூழலில் உலகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.  உலகமயமாக்கலும், சந்தைப் பொருளாதாரமும், உலகத்தை சிக்கலான சூழலில் நிறுத்தியிருக்கிறது.

உலகத்தின் வல்லரசாகத் தன்னைக் கருதிக் கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்துவந்த அமெரிக்க அரசானது என்றும் இல்லாத அளவிற்குப் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.  அதன்   அதிபர் ஒபாமா எவ்வளவுதான் கடும் முயற்சி செய்தாலும், அதனைப் பின்னடைவிலிருந்து தூக்கி நிறுத்த முடியவில்லை.

இதன் விளைவாக அமெரிக்காவில் பல நடுத்தரக் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து கொண்டிருக்கின்றன.  அமெரிக்க மக்களில் பலரும் மன அழுத்த நோய்களுக்கும், இரத்த அழுத்தம், கான்சர், நீரிழிவு மற்றும் பல மனநோய்களுக்கும் ஆளாகி வருகிறார்கள்.

இது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்தப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து எவ்வாறு மீள்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன.  அதனால் மறுபடியும் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களுடைய ‘காபிடல்’ புத்தகத்தைப் புரட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இச்சூழலிலும் இந்தியா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் தங்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.  இருப்பினும் இந்நாடுகளில் மலேரியா, காசநோய் மற்றும் திடீர் என்று தோன்றக்கூடிய கொள்ளை நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க,

உலகம் புதிய புதிய நெருக்கடிகளைச் சந்திக்கும்போதெல்லாம், புதிய புதிய கொள்ளை நோய்கள் தோன்றுவதும், அதை பூதாகரமாக வர்ணித்து மக்களை பீதிக்குள்ளாக்குவதும், இதைக் காரணமாகக் காட்டி மருந்துக் கம்பெனிகள் பலவிதமான உயிர்க்கொல்லி மருந்துகளைத் தயாரிப்பதும் அதை வளர்ச்சி குன்றி வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளை வியாபாரத் தலங்களாக மாற்றுவதும் காலம் காலமாக நடந்து வருவனவாக இருக்கின்றன.

‘யு’  பாலிசி என்ற நுண்ணுயிரியால் காலரா வந்ததாகவும், கொசுவால் மலேரியா வந்ததாகவும், எலிகளால் பிளேக் நோய் வந்ததாகவும் கோழிகளால் கோழிக் காய்ச்சல் வந்ததாகவும் மற்றும் தற்போது பன்றிகளால் மூளைக்காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் வருவதாகவும் கூறிக்கொண்டு மக்களை பீதிக்குள்ளாக்குவதும், அலோபதி மருந்துகளை மக்களின் மீது திணிப்பதும் நடந்து கொண்டே இருக்கின்றன.  எவ்வளவு விளம்பர யுக்திகளைக் கையாண்டு பயமுறுத்தினாலும், மக்களை மருந்துக் கம்பெனிகளை நம்பியிருக்கச் செய்தாலும்,  அலோபதியர்களால் அந்தக் கொள்ளை நோய்களை வெற்றி கொள்ள முடியவில்லை.

இது தவிர்த்து பூகம்பங்கள் (சைனா, இந்தோனேசியா), சுனாமி (இந்தோனேசியா, இந்தியா), சூறாவளிக் காற்று (அமெரிக்கா மற்றும் கியூபா) போன்ற இயற்கைச் சீற்றங்களால் இப்புவிக்கோளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல லட்சம் மக்கள் இறப்பதும், காயமுறுவதும் மற்றும் கடுமையான தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதும் நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இதற்குத் தீர்வு காணஅலோபதி மருத்துவத்தைத்தான் அரசுகள் நாடுகின்றன.  ஆனால் அது மக்களுக்குப் பூரணமாக நலமளிக்காது என்பதுதான் உண்மை.  இருப்பினும், அரசுகள் இதற்கு மாற்றை யோசிக்காமல் இருக்கின்றன.

எல்லாவற்றையும்விட இன்றைய உலகம் பயங்கரவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் அச்சுறுத்தப்படுகின்றது.  இதன் விளைவால் பல இடங்களில் குண்டுகள் வெடிப்பதும், பல்லாயிரம் மக்கள் சிதைந்து அழிவதும் நடந்து கொண்டே இருக்கின்றன.  தீவிரவாதிகளும் மற்றும் பயங்கரவாதிகளும் தோன்றுவதற்கு இன்று நிலவி வருகின்ற பொருளாதார, அரசியல் மற்றும் சமூகக் காரணங்கள்தான் காரணம்.  அதாவது வளர்ச்சியடைந்த நாடுகள் வளச்சியற்ற நாடுகளைச் சுரண்டுவதும், மதம், இனம், மொழி மற்றும் நிறப் பாகுபாடுகளால் அரசியல் லாபத்திற்காக மக்களைப் பிரித்து பகையுணச்சியைத் தூண்டுவதும்தான் காரணமாகையால், இன்றைய அரசியல்வாதிகள் அதைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் அழிப்பதாகக் கூறிக்கொண்டு உரிமைக்காகவும், இனவிடுதலைக்காகவும், போராடும் மக்களை ஒடுக்குவதும், இனப்படுகொலைகள் செய்வதும் நடந்து வருகின்றன.  இதனால் பல கோடி மக்கள் மனப்பாதிப்புகளுக்குள்ளாகி வருகிறார்கள்.

அன்டை நாடான இலங்கையில் சமீபத்தில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதும் அவர்களைத் தீவிரவாதம் என்ற பெயரால் ஈழத் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க சிங்கள அரசு செய்யும் பாசிச நடவடிக்கைகளும் உலகத் தமிழர்கள் அனைவரையும் மிகவும் சோகத்திற்குள்ளாக்கி, மன அழுத்த நோயாளிகளாக்கி வருவதுடன், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் தொற்று நோய்களுக்கும் மன நோய்களுக்கும் ஆளாக்கி வருகிறார்கள்.

இன்று உலக அரங்கில் முதலாளித்துளவத்தின் மோசடித் தந்திரங்களால் விவசாயம் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி வருகிறது.

பாரம்பரிய முறைகள் மாற்றப்படுகின்றன.  பாரம்பரிய வித்துக்கள் அழிக்கப்படுகின்றன.  அதனால் ‘ஹைபிரிட்’ வகைகளாகிய வித்துக்களை நம்பி விவசாயம் தள்ளப்படுகின்றது.  இதற்கு சுரண்டல் அரசுகள் துணை போகின்றன.  இதன் விளைவால் விவசாயம், விவசாயக் கலாச்சாரம் என்ற நிலையிலிருந்து விவசாயத் தொழில் என்ற நிலைக்கு மாற்றப்படுகிறது.  அதனால் மக்கள் விவசாயத்திற்கு முதலாளியின் (அல்லது அரசின்) விதைகளையும் இரசாயண உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் நம்பியிருக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு, விவசாயத்திற்கு மிகுந்த முதலீடுகள் செய்தும் அதற்கான பலன் கிடைக்காமல் பெருங் கடனாளிகளாக ஆகி அதை ஈடுகட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைத்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.  அதனால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு நகரத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டார்கள்.  இதன் விளைவாக விவசாயம் முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது.  இதனால், உலகரங்கில் உணவுப் பஞ்சம் வரும் அபாயம் உள்ளது.  இவ்வகையான சூழலால் காசம் போன்ற கொடிய நோய்களால் மக்கள் கடுமையாகப்  பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆக நவீன விவசாய முறைகளால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும், விவசாயம் நலிவுற்றதாலும் மக்கள் வறுமையில் உழல்வதும் மற்றும் சுகாதாரக் கேட்டாலும் கான்சர் மற்றும் காசம் போன்ற நோய்களாலும், பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  இதற்குத் தீர்வு காணாமல் நவீன மருத்துவமுறை மக்களை மேலும் பல நாட்பட்ட நோய்களுக்கு ஆளாக்கி துன்பத்திற்குள்ளாக்கி வருகிறது.

மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில் வளர்ச்சியாலும் மற்றும் இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் தொழில் வளர்ச்சியாலும், தொழிற்சாலைகளின் இரசாயணக் கழிவுகளும், கார்பன் மோனாக்ஸைடு மற்றும் பல்வேறு விசவாயுக்களாலும், இயற்கை பாழ்படுவதுமட்டுமின்றி சூரியக்கதிர்களின் மறுபிரதிபலிப்பால் புவிக்கோளமும், வளிமண்டலமும் கடுமையாக வெப்பமிகையால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.  வளி மண்டலத்தில் வாயுக்களின் படலத்தால் வெப்பம் பிரதிபலித்து ஓசோன் படலத்தைத் தாக்கி அதில் ஓட்டை விழத் தொடங்கிவிட்டது.  அதனால் இதுநாள்வரை வடிகட்டப்பட்டு வந்த அல்ட்ரா வயலட் மற்றும் இன்பிரா ரெட் கதிர்கள் நேரடியாக புவி உயிர்களைத் தாக்குகின்றன.  இதன் விளைவாக மனிதர்கள் புற்றுநோய் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  மேலும் புவி வெப்பம் மிகுவதால், பனிமலைகள் உருகத் தொடங்கி கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது.  புவியின் பூகற்பவியலே மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது.

 இதனால் ஏற்படும் வெப்ப ஆற்றலின் மாறுபாடுகள் மனித இனத்தை மட்டுமின்றி அனைத்து உயிர்களின் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் ஏற்புத் திறன்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி மனிதனின் சமச்சீர் நிலையையே சீர் குலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,

இத்தகைய உலகச் சூழலில் உலக மயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரச் சீர்கேட்டால் ஏற்பட்ட பல்வேறு வாழ்வியல் மாற்றங்களால் ஏற்பட்ட பல்வேறு மனநோய்கள் மற்றும் உடல் நோய்களுக்கும்,

உணவுப் பற்றாக்குறையால் வறுமை மற்றும் சுகாதாரச் சீர் கேட்டால் ஏற்பட்ட காசம், மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவால் ஏற்படும் எய்ட்ஸ் போன்ற பல நோய்களுக்கும்,

இயற்கை பாதிப்பால் மற்றும் இனப் படுகொலை மற்றும் மதக்கலவரங்களால் ஏற்படும் புற்று நோய் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களுக்கும்,

மேலும் கொள்ளை நோய்களாகிய சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் அனைத்துச் சமுக, பொருளாதார, அரசியல் சூழல்களால் ஏற்படும் பல்வேறு நாட்பட்ட நோய்களுக்கும், இன்றைய நவீன மருத்துவம் தீர்வு காண முடியாமல் திணறுகிறது.

எனவே மக்கள் தாங்களாகவே அரசுகளின் அடாவடித்தனமான விளம்பர யுக்திகளையும் மருத்துவ வியாபார அராஜகப் போக்குகளையும் மீறி மாறறு மருத்துவ முறைகளை நாடி வருகிறார்கள்.

மாற்று மருத்துவ முறைகளில் உலக அரங்கில் அலோபதி மருத்துவத்திற்கு மாற்றாக அனைத்து நாடுகளிலும் பரவியுள்ள ஒரே மருத்துவ முறை ஹோமியோபதிதான் என்பது உலகறிந்த உண்மை.
மேலும் மேற்கூறிய அனைத்து நோய்களுக்கும் ஹோமியோபதியில் தீர்வு இருக்கிகறது என்ற உண்மையும் உணரப்பட்டு வருகிறது.

இதன் வளர்ச்சி அலோபதி மருத்துவ முறைக்கும் அதன் மருந்துக் கம்பெனிகளுக்கும் மற்றும் முதலாளித்துவ அரசுகளுக்கும் ஆச்சரியத்தையும் அதே சமயத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.  ஆகவே அவர்கள் ஹோமியோபதியை அழித்துவிடுவது என்று கங்கணங்கட்டிக் கொண்டு கூட்டுச் சதியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

அவர்கள் ஹோமியோபதி மருத்துவ முறையில் அறிவியல் தன்மை இல்லை.  அது அறிவியலால் நிரூபிக்கப்படவில்லை.  அது சாதாரண ‘பிளாசிபோ எபெக்ட்’ என்று ஹோமியோபதியை கொச்சைப்படுத்தி மக்களிடையே ஹோமியோபதிக்கு எதிரான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள்.  இதைத் தற்போது இணையத்தில் வெளிவருகின்ற கட்டுரைகள் நிரூபிக்கின்றன.  இது ஹானிமன் காலம் தொட்டு இருந்து வருகிற தரம் தாழ்ந்த செயல்பாடானாலும் இது எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது கடுமையாக இருக்கிறது.

இவ்வாறான உலகச் சூழலின் அனைத்து அம்சங்களும் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பது உண்மைதான்.  ஆனால் அதே சமயம் இந்தியாவின் பிரத்தியோக சூழல் அதற்கேயுண்டான பாதிப்பை மருத்துவ உலகில் ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அரசானது இந்த ஆண்டின் பட்ஜெட்டில் இராணுவத்திற்கும் மற்றும் பிற துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியோடு ஒப்பிடும்போது மருத்துவத்திற்கும் மற்றும் விவசாயத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக இருக்கிறது.  இதன் விளைவு விவசாயிகள் மிகுந்த ஏழ்மை நிலைக்குப் போவதுடன் வருங்காலத்தில் பலவிதமான உடல் மற்றும் மன நோய்குக்கு ஆட்பட வேண்டியுள்ளது.

இந்தியாவில் மருத்துவக் கல்வியும் மற்றும் மருத்துவமும் தொழில் மயமாக்கப்பட்டு வருகின்றது.  மருத்துவக் கல்வி வியாபாரமாக ஆக்கப்பாட்டதால் தரம் கெட்ட மருத்துவக் கல்வியும், கீழ்த்தரமான பண்பு கொண்ட மருத்துவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.  அதனால் மருத்துவம் கொடுமையான வன்முறைத் தொழிலாக மாறி மக்களைக் கசக்கிப் பிழிந்து படுகொலை செய்து வருகிறது.
இதன் விளைவால் இந்தியாவில்
* வருடந்தோறும் 40 சதவீதம் நடுத்தர வர்க்கத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு ஏழைகளாக்கப்பட்டு வருகிறார்கள்.
* வருடத்திற்கு சுமார் 20 லட்சம் மக்கள் காச நோயால் பாதிகக்பபட்டு வருகிறார்கள்.
* வருடத்திற்கு 60 லட்சம் கர்ப்பிணிகள் பிரசவிக்க முடியாமல் மரணமடைகிறார்கள்.
* ஊட்டச்சத்துக் குறைவால் நோய்வாய்ப்படும் குழந்தைகைளின் எண்ணிக்கை 80 சதவீதமாகும்.
இந்தியாவில் இன்று
* 100-இக்கு 20 பேருக்கு கான்சர் நோய் இருக்கிறது.
* 100-இக்கு 70 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.
* 100-இக்கு 80 பேருக்கு சைனஸ் இருக்கிறது.

இவ்வாறான சூழலில் அலோபதி மருத்துவத்திற்குப் பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்தாலும் இந்திய மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல மேலும் அது மனிதர்களை நோயாளிககளாக்கி வருகிறது.
இந்நிலையில் அதிக அளவான மக்கள் தன்னிச்சையாக ஹோமியோபதியை நாடி வருகிறார்கள்.  இதை இன்றைய பத்திரிகைச் செய்திகள் புள்ளிவிவரங்களோடு வெளியிடுகின்றன.

ஆனால் அரசு இந்திய மருத்துவ முறைகளாகிய ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திற்குக் கொடுத்துவரும் முக்கியத்துவத்தை ஹோமியோபதிக்குக் கொடுப்பதில்லை.   இருந்தாலும்,  ஹோமியோபதியை மக்களே தன்னிச்சையாக வளர்த்து வருகிறார்கள்.
உலகரங்கில் அதிக அளவிலான ஹோமியோபதி மருத்துவர்களைக் கொண்ட நாடு இந்தியாதான்.  மேலும் அலோபதிக்கு அடுத்தபடியாக அதிக அளவு மக்கள் மருத்துவம் பார்த்துக் கொளவதும் ஹோமியோபதி மருத்துவ முறையில்தான்.  நிலைமை இவ்வாறு இருந்தாலும், இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 1 சதவீதம் மக்கள்தான் ஹோமியோபதியின்பால் திரும்பியுள்ளார்கள்.

இந்த எண்ணிக்கை 20 சதவீதத்திற்கு உயர்ந்தால் கூட தற்போது உள்ள ஹோமியோபதி மருத்துவர்களின் எண்ணிக்கையால் கொஞ்சம்கூட தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.
குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஹோமியாபதி மருத்துவமானது மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.  இதற்கு ‘அப்ரோச்’ போன்ற தன்னார்வ சங்கங்களின் பங்களிப்பு மகத்தானது.
இருப்பினும், அரசு ஹோமியோபதி மருத்துவத்தின்பால் மாற்றாந்தாய் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்பதுதான் உண்மை.  மொத்தம் தமிழகத்தில் 10 ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.  அதில் வருடத்திற்கு 500-இக்கு மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்று வெளி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் 318, மருத்துவ மையங்கள் (டிஸ்பென்சரி) 215, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1421.  ஆனால் அரசுப் பணியில் உள்ள ஹோமியோபதி மருத்துவர்களின் எண்ணிக்கையோ 48 தான்.

இதற்குக் காரணம் ஹோமியோபதியைப் பற்றிய புரிதல் அரசுக்கு இல்லாததும், அரசாங்க அதிகாரிகள் பெரும்பாலானோர் ஹோமியோபதியை ஒரு நாட்டு வைத்தியம் என்று நினைத்து வருவதும்தான்.  இதைப் போக்குவதற்கு இதுநாள்வரைக்கும் இருந்து வருகின்ற ஹோமியோபதி கவுன்சிலும், ஹோமியோபதியில் பட்டம் பெற்ற ஹோமியோபதி மருத்துவர்களின் சங்கமும் சிரத்தை எடுக்காதது ஏன்?
இன்று தமிழகத்திலுள்ள ஹோமியோபதி மருத்துவர்களின் எண்ணிக்கையும், மக்களின் தேவையும் ஏணி வைத்தாலும் எட்டாததாக இருக்கிறது  எனவே ஹோமியோபதியில் தன்னிச்சையாகப் படித்து ஹோமியோபதியில் பயிற்சி செய்யும் மருத்துவர்களை அரசு அங்கீகரித்து, அவர்களுக்குப் பதிவு வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  இது எந்த வகையிலும் பட்டம் பெற்ற மருத்துவர்களைப் பாதிக்காது என்பது மட்டுமல்ல, ஹோமியோபதியைப் பப்றறிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலம் பட்டம் பெற்ற மருத்துவர்கள் மேலும் பயனடைய வாய்ப்பு இருக்கிறது.
உலகரங்கில் ஹோமியோபதியின் தேவை அத்தியாவசியமானதாக ஆகிவரும் வேளையில் ஹோமியோபதியர்களின் போக்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  டாக்டர்.ஹானிமன் அவர்கள் ஹோமியோபதியை கிட்டத்தட்ட ஒரு முழுமையான மருத்துவமாக ஆக்கித் தந்துள்ளார்.  ஆனால் தற்போது நிலவி வரும் புதிய போக்குகள் ஹோமியோபதியை ஒரு ‘மெட்டாபிசிகல்’ நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.  அதன் மூலம் இதன் எளிமையையும், எல்லோராலும் கையாள முடியும் என்ற நிலையும் மாறி ஏதோ ஒரு சில அறிவுஜீவிகள் மட்டுமே ஹோமியோபதியைச் செய்ய முடியும் என்ற நிலைக்கு ஹோமியோபதியைத் தள்ளுவது, ஹோமியோபதியை வளர்ப்பதற்குப் பதிலாக அதை அழிக்கவே செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  மேலும் ஹோமியோபதியின் அறிவியல் தன்மை கேள்விக்குறியாக இருக்கும் இத்தருணத்தில் இவ்வாறான கருத்தியலான போக்குகள் ஹோமியோபதியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகிவிடும்.  இதைக் கருத்தில் கொண்டு டாக்டர். ஹானிமனின் ஹோமியோபதியை வளர்த்துச் செல்ல வேண்டிய அவசியத்தை ஹோமியோபதியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

அறிவியலானது உலகை ஒரு ஓர்மைக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.  ‘நானோ’ தொழில் நுட்பம் மேலும் சாதகமான சூழலை ஹோமியோபதிக்கு ஏற்படுத்தியுள்ளது.  டாக்டர்.ஹானிமன் அவர்களால் 200 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்ட விசயம்தான் இன்று பேசப்படும் ‘நானோ’ என்பது ஏன் ஒத்துக் கொள்ளப்படாமல் இருக்கிறது என்பது தெரியவில்லை?

இவ்வாறான சர்வதேச, இந்தியப் பொருளாதார, சமுக, அரசியல், கலாசார மற்றும் தட்ப வெட்ப சூழலில்தான் நமது ஹோமியோபதி சங்கங்களின் கூட்டமைப்பு 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

***
இந்தக் கட்டுரை சில ஆண்டுகளுக்கு முன் ஹோமியோ தோழன் இதழில் வெளிவந்தது

சூழல் கருதி மீள்பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக